இத்தரை மீதினில் வாழும் மாந்தர்
வாழ்வினில் களிப்பும் நல்ல எண்ணமும்
மலர்ந்திட மற்றும் இங்கு வாழும்
மரங்கள், செடிகள், புட்கள் அனைத்து
உயிர்கள் இருப்பிலும் அச்சம் நீங்கிட
சூழல் பேணலில் மேலும் மானிடர்
கவனம் செலுத்திட, அதுபோல் பிரிவுகள்
பற்பல நிறைந்து போர்கள் மலிந்து
விளங்கும் பூமியில் பிரிவுகள் நீங்கிட,
போர்கள் நீங்கி அமைதி தழைத்திட,
வறுமை நீங்கிடும் வண்ணம் அரசுகள்
செயற்பட மலர்கவே புதிய ஆண்டே!

பதிவுகள் வாசகர், எழுத்தாளர் அனைவரும்
வாழ்வினில் இன்பம் பெற்றிட மகிழ்ந்திட
மலர்கவே மலர்கவே புதிய ஆண்டே!