1

கோசின்ரா (கொல்கத்தா) கவிதைஉன்னை   நினைவு  கூறுவதற்கு
என்னிடம் இருக்கிறது
உன் வெயில் காலத்து அணைப்புகள்
மழைக்காலத்து தீண்டல்கள் 
இதயத்திடம் சொல்லத்தேவையில்லை
அவரை நினைவு கூறு என்று
கோழி எப்படி நினைவு கூறும்
விடியற்காலையை
வாசலை
கோலங்கள் நினைவு கூறுவதாய்
உன்னை நினைக்கின்றேன்

விதைக்குள் மண் நுழைவதில்லை
மண்ணின்றி முளைக்க முடியுமா
நினைவு கூறலால் வளர்கின்றேன் நான்

வறண்ட வெயில் காலத்தில்
மெல்ல நடந்து வரும் நதி நான்
உன்னைக்கண்டவுடன்
மழைக்கால நதியாய் கரை உடைத்து செல்கிறேன்

காற்றுக்கு இலைகளில்
மிதப்பது பற்றி சொல்லிக்கொடுக்கின்றேன்

மரங்களுக்கு பூப்பது பற்றி
செடிகளுக்கு மலர்வது பற்றி
நீதான் பேசுகிறாய்
என்னுடைய குரலில்

அம்மா குரலின் அதீதத்தை கண்டு பிடிக்கிறாள்
காதல் பிறந்து விட்டது
அதற்கு முந்தைய காலத்தை பற்றி
வெறும் நினைவு கூறல் மட்டுமே
ஆனாலும் உன்னை நினைவு கூறுகின்றேன்
முன்னிலும் அதிகமாக
என் காலத்தில் காதலை பெருமை படுத்துவேன்

என் மூதாதையர்களை போல
வலிமையான காதலை பேசுவேன்
காதலை வைத்து வாழ்க்கையை கட்டுவேன்
இனி நான் ஒரு மதத்தை சேர்ந்தவளல்ல
ஒரு சாதியை சேர்ந்தவளல்ல
ஒரு கலாச்சாரத்தை  சேர்ந்தவளல்ல
நான் காதலி நான் காதலி
எனக்கும் பூமிக்குமான தொடர்பு
இது மட்டுமே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R