கவிதை வாசிப்போம் வாருங்கள்!

இயற்கையின் விழியிலே இறைவனும் பார்க்கிறான்

மலர்களின் இதழ்களால் அவனுமே சிரிக்கிறான்

பறவைகள் மொழியிலே பாடலும் இயற்றுவான்

அருவியின் இசையிலே அழகுடன் பாடுவான்

 

மலைகளின் உயரமாய் மனதினை கொண்டவன்

பசுமையின் வடிவிலே மனந்தனை ஈர்க்கிறான்

முகில்களின் உருவத்தில் கருணையை பொழிகிறான்

வனங்களின் மரங்களாய் வசீகரம் கொள்கிறான்

 

பயிர்களின் விளைச்சலால் பசியினை போக்குவான்

இருளினைக் காட்டியே ஒளியினை ஊட்டுவான்

கடல்தனில் அலைகளாய் மிதந்துமே திரிகிறான்

காற்றினில் ஒலியென கலந்துதான் இருக்கிறான்

 

வானத்தில் சுடரென வளமுடன் வருகிறான்

வையகம் செழித்திட வளம்பல தருகிறான்

ஞாலத்தை ஒருவனாய் ஆட்சியும் செய்கிறான்

நாளைக்கு என்பதை நேற்றிலே காண்கிறான்

 

இனிமையைக் கொடுப்பதில் தேனென இனிக்கிறான்

கொடுமையை விலங்குகள் குணத்திலே விதைக்கிறான்

தனிமையில் இருந்திட துணையென வருகிறான்

கனிகளின் நடுவிலே சுவையென கிடக்கிறான்

 

இரவிலே நிலவென எழில்மழை பொழிகிறான்

உறவிலே உயிகளின் உயர்குணம் வளர்க்கிறான்

பிரிவிலே நரகமாய் உழன்றுமே கொல்கிறான்

தீயிலே ஜோதியாய் திகழ்ந்தவன் வாழ்கிறான்

 

தனித்தனி படைப்பதன் தனித்துவம் காட்டுவான்

தனக்கொரு இடமின்றி தாண்டவம் ஆடுவான்

மணிக்குள்ளே நிமிடமாய் மறைந்தவன் கிடக்கிறான்

மனிதனை திருத்திட மறுத்தவன் திரிகிறான்

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R