கவிதை: பஞ்சரத்துச் சேவல்!

பட்டினத்திற்குத் தொழிலுக்காய்
போன உன் வருகைக்காக
காத்துக்கிடக்கிறது பண்டிகை

பண்டிகைக்காய் வருகின்ற
உனக்கென்று என்னை முடிக்க 
நிச்சயம் செய்த நாளிலிருந்து
உன் அம்மா மிகவும்
ஆதரவோடுதான் இருக்கிறாள்

என்னோடு உன்னை பிரிந்த தவிப்பில்
உன் முகம் காணும் நாளுக்காய்
தவமிருக்கும் உன் அம்மாவுக்குக் 
ஒரு பட்டு சேலையோ இல்லை
உன் வசதிக்கேற்ப ஒரு
கைத்தறி புடவையோ கொண்டுவரலாம்

பண்டிகைகாய் வரும் நீ
உன் தங்கைக்காய் பாவாடைத் தாவணி 
கொண்டு வரலாம்

பள்ளிக்கூடப் புத்தகப் பை
வரும் வீதிகளை
பார்த்துப் பார்த்துக் காத்திருக்கும்
உன் தம்பியின் ஏக்கம் தீர்க்கலாம்

வீட்டைத் திருத்திக்கொள்ளும்
உன் அப்பா எதிர்பார்ப்புகளுக்கு
பணம் கொண்டு வரலாம்

நண்பர்களுக்கு
வாசனை திரவியமும்
இன்னோரன்ன பொருட்களும்
கொண்டு வரலாம்

இன்னும் நீ
உன் காதலிக்கும் இரகசியமாய்
ஏதேனும் கொண்டுவரலாம்

எல்லோருக்குமான உன் வருகையில்
எனக்கு மட்டும் பகிரங்கமாக
நீ கொண்டு வருவதென்னவோ
மரணம் மட்டுமே

அத்தனைப் பேருக்கும்
பெருநாளாக நீ வரும் நாள்
வந்துவிடக்கூடாது என்பதுதான்
என் பிரார்த்தனையாய்

நீ வருகின்ற பண்டிகையில் நாளில்
உயிரே வந்ததாய் உணரும்
உறவுகளுக்கு ஆனந்த பந்தியாகி
நாட்டுக்கோழின்னா நாட்டுக்கோழின்னு
நா ருசித்து நீ மகிழும் நிமிஷத்தை 
எண்ணிய மரண பீதியில்
அதிகாலையிலே அலறுகிறேன்

ஆனாலும் சேவல் கூவிடிச்சு என்று
எழுந்து அவரவர் கடமைகளில் மூழ்கும்
உன் குடும்பத்துக்கு மட்டுமல்ல
உனக்கும் கூட எப்படி புரியும்
பஞ்சரத்துச் சேவல் என் தவிப்பு?


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R