பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ:  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் கலந்துரையாடல்

25-06-2017, ஞாயிறு மாலை 5-30 மணிக்கு.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிறு மாலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

எஸ்.ஆர்.பிரபு வணிக வெற்றியோடு நல்ல தரமான படங்கள் எடுப்பதிலும் நல்லார்வம் கொண்டவர். அண்மையில் வெளியாகி மக்களாலும் பாராட்டப்பட்ட ஜோக்கர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இவரே. வெளியானது முதல் பல்வேறு விருதுகளையும் இப்படம் பெற்று வருகிறது.

சினிமாவின் முதுகெலும்பாக இருக்கும் தயாரிப்பாளர்கள் கடந்து வந்த பாதை, அவர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் சிக்கல்கள், அல்லது சவால்கள், தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் உள்ள தகவல் பரிமாற்றங்கள் என எஸ்.ஆர்.பிரபுவுடன் கலந்துரையாட பல தலைப்புகள் உள்ளன. அத்தோடு சினிமாவில் நாட்டமுள்ள இளைஞர்கள் முதல் எவரும் ஒரு சினிமா உருவாக அதன் ஆரம்பத்திலிருந்து படம் முடிந்து திரைக்கு வரும் வரையில் உள்ள படிப்படியான வளர்ச்சி நிலையினை அறிந்துகொள்வது முக்கியம்.

அதற்கான வாய்ப்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் நடைபெறப்போகிற இந்தக் கலந்துரையாடலை ஆர்வலர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.

ஞாயிறு மாலை மறவாமல் ப்யூர் சினிமாவிற்கு வந்துவிடுங்கள்… தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் விவாதிக்கலாம்.

6 மணி வரை மட்டுமே உள்ளே வர அனுமதி. 6.01 க்கு வந்தாலும் அனுமதியில்லை. எனவே நண்பர்கள் 6 மணிக்குள்ளாக வந்துவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் 5.30க்கு சரியாக வந்துவிட்டால் விரும்பும் இடத்தில் அமர்ந்துக்கொள்ளலாம்.

தமிழ் ஸ்டுடியோ <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R