கலாநிதி தர்மசேன பத்திராஜா

பிரபல சிங்களத்திரைப்பட இயக்குநரும் கல்வியாளருமான கலாநிதி தர்மசேன பத்திராஜா இன்று கண்டியிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத்திரைப்பட உலகில் தான் இயக்கிய திரைப்படங்கள் மூலம் தடம் பதித்தவர் இவர். தமிழில் வெளியான எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் 'பொன்மணி' புனைகதையினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுக் கலையுலகில் கவனத்திற்குள்ளாகிய 'பொன்மணி' என்னும் தமிழ்த்திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் சிங்களத்திரையுலகில் மட்டுமின்றி இலங்கைத்தமிழ்த்திரையுலகிலும் தவிர்க்கப்பட முடியாத இயக்குநர்களில்ருவராகத் தடம் பதித்தவர் இவர்.

இவர் இயக்கிய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவை சர்வதேசத்திரைப்பட விழாக்களில் (மாஸ்கோ, இலண்டன், இத்தாலி, இந்தியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்றவையுட்பட) திரையிடப்பட்டுள்ளன. இவர் பல சர்வதேசத்திரைப்பட விழாக்களில் நடுவராகவும் விளங்கியிருக்கின்றார். இவரது படைப்புகளைப்பற்றிய ஆவணத்திரைப்படங்கள் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டுள்ளன. இவரது திரைப்படங்கள் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளன. இலங்கைச்சினிமாவுக்கு இவராற்றிய பங்களிப்புக்காகக் 'கோல்டன் லயன்' விருதினையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது 'சுவரூபா' (Swaroopa) திரைப்படம் எழுத்தாளர் காப்காவின் 'உருமாற்றம்' (Metamorphosis ) நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட திரைப்படமாகும். இவரது 'சக்கராங்' (Sakkarang - 2014) திரைப்படமான இலங்கையில் ஆங்கிலேயரின் காலனியாட்சியில் பெளத்த ஆலயமொன்றின் வருடாந்த நிகவுகளில் பங்கு பற்றும் பாரம்பரிய நாட்டியக் கலைஞர்களின் வாழ்வை விபரிக்கும் திரைப்படம். பிரதான நாட்டியக்கலைஞரான சுபா, மற்றும் அவரது மனைவியான ரதி ஆகியோரின் வாழ்வினூடு, இப்பாரம்பரிய நாட்டியக்கலைஞர்களின் மீது புரியப்பட்ட அடக்குமுறை, அவர்களது மூலம், உரிமைகள் ஆகியவற்றை நாடானது நிலப்பிரபுத்துவத்திலிருந்து நவீனத்துக்கு மாறும் காலகட்டப்பின்னணியில் விபரிப்பதாகும்.

'மடுயம் டவச (Matuyam Davasa - Some day in the Future - 2001] இரண்டு வாடகைக்கு அமர்த்தப்படும் கொலையாளிகளான லயனல், தம்மிகா ஆகியோரின் தலைமுறை வாழ்க்கையினை (அவர்களைப்பற்றி நாட்டின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சமயத்தில்) விபரிப்பதாகும். 'சொல்டடு உன்னகே - Sodadu Unnahe - Old Soldier - 1981- இராணுவ வீரர், விலைமாது, குடிகாரன், விலைமாதினை வைத்து காசு உழைப்பவன் ஆகிய நான்கு நண்பர்களின் வாழ்வை விபரிக்கும். இலங்கையின் சுதந்திரதின நிகழ்வொன்றின் போது நடைபெற்ற வாண வேடிக்கைகள், கொண்டாட்டங்களின்போது இரண்டாவது உலக மகாயுத்தத்தில் பங்குபற்றியிருந்த நண்பர்களிலொருவரான இராணுவ வீரரின் நனவிடை தோய்தலின் மூலம் இந்நால்வரும் நாட்டின் சுதந்திரத்தின் மூலம் அடைந்தது எவையெவை, இவர்களின் எதிர்காலம் என்ன என்பது பற்றி நோக்கும் திரைப்படம் இத்திரைப்படம். மாலினி பொன்செகா, ஜோ அபே விக்கிரமா, ஹென்றி ஜெயசேன மற்றும் நீல் ஆல்ஸ் ஆகியோர் மேற்படி கதாபாத்திரங்களில் நடித்திருப்பர்.

இன்னுமொரு முக்கியமான திரைப்படம் பரா டிகே - Para Dige - On The Run - 1980 - கொழும்பு நகரத்தில் வாவும் இளந்தம்பதியினரின் நகரத்து மானுட வாழ்வுச் சிக்கல்களை விபரிக்கும். விஜய குமாரதுங்க, இந்திரா அபேயசேன, வசந்தி சதுராணி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படமிது. மாலினி பொன்செகா, விஜய குமாரதுங்க நடிப்பிலுருவான 'பம்பரு அவிட் (bambaru ævit) - The Wasps Are Here - 1978- திரைப்படமும் முக்கியமானது. மீனவ சமுதாயத்தில் நடைபெறுவதாக அமைந்துள்ள திரைக்கதையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் இளம் பெண்ணான மாலினி பொன்செகாவுக்கும், அவளை விரும்பும் அக்கிராமத்து மீன்பிடி வர்த்தகத்தைத் தம் கைகளில் வைத்திருக்கும் விஜய குமாரதுங்காவுக்குமிடையிலான வாழ்வுப்பிரச்சினைகளை விபரிக்கும் திரைக்கதையானது பாரம்பரிய இலங்கைச் சமூகத்தின்மீது நவீனத்துவம், மற்றும் இன மோதல்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை வெளிப்படுத்தும். விஜய குமாரதுங்க மற்றும் மாலினி பொன்செகா நடிப்பிலுருவான eyā dæn loku ḷamayek ‒ How to be an Adult • 1975 திரைப்படமும் இன்னுமொரு முக்கியமான திரைப்படம். சிறிய கிராமத்து மானுட வாழ்வானது எதிர்கொள்ளும் சிக்கல்கள், மன அழுத்தங்களை விபரிக்கும் திரைப்படம். கணவனை இழந்த பெண்ணொருத்தி தன் மகளைத்தனியாக வளர்த்தெடுப்பதையும், அதற்காக அவள் கிராம சேவகரின் அரவணைப்பில் வாழ்வதையும், இந்நிலையில் மகள் சுசீலா அழகாக வளர்ந்து வயதுக்கு வருவதையும் , அவளது அழகு அக்கிராமத்து சேவகர் உட்படக் கிராமத்தின் இளைஞர்களை ஈர்ப்பதையும்,எவ்விதம் கிராமத்துச் சூழலானது அவ்விளம் பெண்ணின் வாழ்வை நிர்ணயிக்கின்றது என்பதையும் வெளிப்படுத்தும் திரைப்படமிது. சுபாசினி, பாலச்சந்திரன், கமலா தம்பிராஜா, மற்றும் டாக்டர் நந்தி ஆகியோரின் நடிப்பிலுருவான தமிழ்த்திரைப்படமான 'பொன்மணியும்' குறிப்பிடத்தக்கது.. வட மாகாணத்துக் கிராமமொன்றின் சமூகச்சூழல் எவ்விதம் மானுட வாழ்வைப் பாதிக்கின்றது என்பதை விபரிக்கும் திரைப்படம். தமிழ் மக்களிடையே திகழும் சீதனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை மற்றும் மதம் ஆகியவை எவ்விதம் பொன்மணி என்னும் பெண்ணொருத்தியின் மானுட வாழ்வை, கனவுகளைச் சீரழிக்கின்றன என்பதை விபரிக்கும் கதையினை எழுதியிருப்பவர் காவலூர் ராஜதுரை.

இவர் இயக்கிய திரைப்படங்கள் வருமாறு:

1974 : අහස් ගව්ව / ahas gavva ‒ L'Espace aérien ‒ One League Of Sky
1975 : එයා දැන් ලොකු ළමයෙක් / eyā dæn loku ḷamayek ‒ How to be an Adult
1977 : பொன்மணி / poṉmaṇi ‒ Younger Sister
1978 : බඹරු ඇවිත් / bam̆baru ævit ‒ L'arrivée des guêpes ‒ The Wasps Are Here
1980 : පාර දිගේ / pāra digē ‒ On The Run
1981 : සොල්දාදු උන්නැහෙ / soldādu unnæhe ‒ Old Soldier
1994 : වාසුලි / vāsuli ‒ Whirl Wind
2001 : මතුයම් දවස / matuyam davasa ‒ Some Day In The Future
2014 : ස්වරූප / svarūpa ‒ Metamorphosis
2014 : සක්කාරං / sakkāraṁ ‒ Sakkarang

[நன்றி: http://www.suravi.fr/pathiraja_dharmasena.html ]

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து அவரைப்பற்றிய சிறுகுறிப்பினையும் உங்களுடன் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.:

கலாநிதி தர்மசேனா பத்திராஜா ( Dr.Dharmasena Pathiraja) [ பிறப்பு மார்ச்சு 28, 1943 கண்டி, இலங்கை - இறப்பு 28 சனவரி 2018 (அகவை 0) ]

தர்மசேன பத்திராஜா (Dharmasena Pathiraja, மார்ச் 28, 1943 - சனவரி 28, 2018) இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனரும், கல்வியாளரும் ஆவார். பொன்மணி என்ற தமிழ்த் திரைப்படம் உட்பட ஏறத்தாழ பத்து முழுநீளத் திரைப்படங்கள், ஏழு ஆவணப் படங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்கள் இவரது படைப்புகளாகும்.

வாழ்க்கைச் சுருக்கம்
கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற தர்மசேனா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1967 இல் சிங்களம், மற்றும் மேற்கத்தைய கலாசாரத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறை, மற்றும் நிகழ்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆத்திரேலியா, மொனாசுப் பல்கலைக்கழகத்தில் வங்காளத் திரைப்படத்துறை குறித்த ஆய்வை மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.

தர்மசேன பத்திராஜா களனிப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், இலங்கை ஊடகப்பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

திரைப்படத் துறையில்
பத்திராஜா 1970 ஆம் ஆண்டில் சத்தூரோ என்ற பெயரில் 10-நிமிடக் குறும்படம் ஒன்றைத் தயாரித்தார். நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆகாசு கௌவா என்ற முழுநீள சிங்களத் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இது அவருக்குப் பல திரைப்பட விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது. 1975 இல் வெளியான "பெரிய பையனாக வருவது எப்படி" (எயா தன் லொக்கு லமயாக்) திரைப்படம் மாஸ்கோ 9வது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவரது பம்பரு அவித் (1978) என்ற திரைப்படம் மாஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டது. இலங்கையில் இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படத்துக்கான சனாதிபதி விருதுகள் கிடைத்தன.

இவர் தயாரித்த பொன்மணி தமிழ்த் திரைப்படம் இந்தியாவில் 1980 இல் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

நூல்கள்
திரையரங்கக் கலை பற்றி இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

மறைவு
தர்மசேன பத்திராஜா 2018 சனவரி 28 அன்று கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R