எழுத்தாளர் முருகபூபதி -Letchumanan Murugapoopathy <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Jun. 18 at 1:23 a.m.

அப்பா நினைவாக......

அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்கட்கு வணக்கம். தந்தையர் தினத்தில் -- உங்கள் அப்பா நினைவாக நீங்கள் எழுதியிருந்த பதிவு சிறப்பானது. உங்கள் அப்பா ஒரு முழுமையான மனிதராக வாழ்ந்திருப்பது தெரிகிறது. பொதுவாக பல எழுத்தாளர்களுக்கும் அவர்களின் தந்தைமாருக்கும் இடையே முரண்பாடுகள்தான் பெருகியிருந்துள்ளன!?

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், பாலகுமாரன், ஜெயமோகன்... முதலான எழுத்தாளர்கள் தங்கள் தந்தைமாருடன் எங்கெங்கே முரண்பட்டார்கள் என்பதை எழுதியிருக்கிறார்கள்.

ஜெயகாந்தன் , மரணப்படுக்கையிலிருந்த தந்தையை புறக்கணித்துவிட்டு வந்தவர். இந்த எழுத்தாளர்களின் சுயவரலாறு தெரிந்தால் அதிர்ச்சியடைவோம். இந்நிலையில் உங்கள் தந்தையார் உங்களது நல்ல தோழராகவே விளங்கியிருப்பது தெரிகிறது.

வருடாந்தம் தந்தையர், அன்னையர் தினங்களில் எமது எழுத்தாளர்கள் இதுபோன்ற பதிவுகளை எழுதி, அவர்களின் நினைவுகளைக் கொண்டாட முடியும். அதற்கு உங்கள் நினைவுப்பதிவு முன்னுதாரணமாக இருக்கும். உங்கள் தந்தையார் பற்றிய பல செய்திகளை அறிந்து அவர் மீது எமக்கும் மதிப்புண்டாகிறது. தந்தைமார் பிள்ளைகளுக்கு நண்பர்களாக இருப்பது அபூர்வம்! உங்கள் நினைவுப் பதிவு எனது தந்தையார் பற்றி எழுதவும் என்னைத்தூண்டுகிறது.

நன்றி.

அன்புடன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா


வணக்கம் முருகபூபதி. உங்கள் கடிதத்துக்கு நன்றி. உங்கள் தந்தையார் பற்றிய நனவிடை தோய்தலைப் படிப்பதற்கு ஆர்வமாகவுள்ளேன். அன்புடன் - வ.ந.கி -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R