[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]

இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரிஅரிக்கமேடு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சிற்றூர். இது முன்பே முனைவர் மார்டிமர் வீலரால் 1942 இல் அகழாய்வு செய்யப்பட்ட ஒரு இந்தோ - உரோம தளம். இதுவே தொல்லியல் அகழாய்வுகள் மண்ணடுக்கியல் (stratigraphy)  நெறிமுறையைப் பயன்கொண்டு செய்யப்பட்ட முதல் தளம். அவர் இத்தளத்தை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையானது என நாள்குறித்தார். அவருடைய அகழாய்வில் பெரும் எண்ணிக்கையில் பானைஓட்டு பிராமிப் பொறிப்புகள், உரோமர் மட்கலங்கள், உரோமக் காசுகள், உரோமர் குடியேற்றங்கள் ஆகியன கண்டறியப்பட்டன. அவர் இதன் காலக் கணக்கீட்டை கருப்பு - சிவப்புநிற மட்கலன்கள், உரோமக் காசுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறை 1991 - 1993 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை உடனுழைப்போடு (colloboration) இத்தளத்தில் மற்றுமொரு அகழாய்வைப் பொறுப்பேற்று நடத்தியது. இந்த அகழாய்வுகள் சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த தொல்பொருள்களையும் ஈட்டித் தரவில்லை. மட்கலங்களான  கருப்பு - சிவப்புநிற மட்கலம் போன்றனவும் சிறு தொல்பொருள்களான மணிகள் வளையல்கள் போன்றனவுமே சிறு அளவில் கண்டறியப்பட்டன என்பது முனைவர் வீலரால் தரப்பட்ட காலக்கணக்கீட்டைப் பெரிதும் உறுதி செய்கின்றது. இந்த அகழாய்வுகள் மேலதிகமான சான்றுகளைப் பெறும் நோக்கிலேயே நிகழ்த்தப்பட்டன.

முனைவர் சா. குருமூர்த்தி எடுத்துரைக்காத, சென்னைப் பல்கலைக்கழகப் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால்  பற்பல தளங்களில் மேற்கொள்ளப்படட் தொல்லியல் அகழாய்வு விவரங்கள் பின் வருமாறு:


தளப் பெயர்                    மாவட்டம்       ஆண்டு                    காலம்

திருக்காம்புலியூர்                கரூர்           1962 - 1963                   இரும்பு
அழகரை                       கரூர்           1964                          இரும்பு
(திருக்காம்புலியூர் & அழகரை தொல்லியல் அகழாய்வுகள் சென்னைப் பல்கலையால் நூலாக வெளியிடப்பட்டு உள்ளது)
கல்லேறிமலை                 வேலூர்         1979                          இரும்பு
அதியமான்கோட்டை            தருமபுரி        1981 – 198                     இரும்பு
குட்டூர்                        தருமபுரி        1983                           இரும்பு
திருவாமத்தூர்                 விழுப்புரம்      1987                            இரும்பு
முடிக்காடு                     கடலூர்        1989                           இரும்பு
படவேடு                      திரு. மலை    1992 – 1993                    இடைக்காலம் (மாநில தொல்லியல் துறை இணைந்து)
பாலூர்                       காஞ்சிபுரம்     2001 – 2005                   இரும்பு
மேல்சித்தாமூர்                விழுப்புரம்     2005 - 2006                    இரும்பு

அனுப்பியவர்: சேசாத்திரி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R