முகநூற் பதிவுகள்: செம்மீனில் கடற்கரையின் அந்தகாரத்தில் வசந்தத்தின் வடிவமாய் உருவெடுத்து உலாவிய அந்தக் குரலை மறக்க முடியுமா? புகழ் பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே காலமானார்பெங்களூர், அக். 24, 2013 - புகழ்பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் வியாழனன்று காலமானார். அவருக்கு 94வயது நீண்டகாலம் நோய்வாய்பட் டிருந்த அவர் 5 மாதங்களுக்கு முன்னர் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அதிகாலை 3.50 மணிக்கு மராடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரிந்த போது மகள் சுமிதா தேப் மற்றும் அவரது மருமகன் ஞானராஜன் தேப் ஆகியோர் அருகில் இருந்தனர். அவரது இறுதிச் சடங்கு மாலையில் நடைபெற்றது. மன்னா டேவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங் களூரில் உள்ள ரவீந்திரா கலாஷேக்த்ராவில் வைக்கப்பட்டுள்ளது. மன்னா டே கொல்கத்தாவில் 1919ம் ஆண்டு பிறந்தார். அவர் நாட்டின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்.அவர் தனது இறுதி காலத்தில் பெங்களூரில் இருந்தார்.

மும்பையில் 50க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார்.  இந்தி மற்றும் பெங்காலி அசாமிஸ், மலையாளம், கன்னடம் குஜராத்தி, மராத்தி மொழிகளில் 3500 திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். அவர் ஷோலே படத்தில் “ யே தோஸ்தி “என்ற புகழ்பெற்ற பாடலையும் ஆனந்த் படத்தில் “ஜிந்தகி “என்ற பாடலையும் பாடியுள்ளார்.  புகழ்பெற்ற மலையாளப் படமான ராமு காரியத்தின் 'செம்மீன்' திரைப்படத்திலும்  இவர் பாடியுள்ளார்.  அவர் 50ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படப் பாடல்களை பாடி வந்தார். அவரது குரல் தனித்துவம் மிக்கதாக திகழ்ந்தது.

அவரது குரலை வேறுஎந்த பாடகரும் பிரதிபலிக்க முடியாதவகையில் சிறப்பு மிக்கதாக காணப்பட்டது. எந்த பாடலை பாடுவதற்கு முன்பாகவும் அவர் அந்தப்பாடலை அதிக அளவில் பாடி தன்னை தயார் படுத்திக்கொள்வார்.

நன்றி: முகநூல் நண்பர்கள்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R