-  வே.ம.அருச்சுணன் – மலேசியா பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே........!

2014  ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?

மாயமாகிப்போன விமானம்
பீரங்கித் தாக்குதல்
வானில் சிதறிய செல்வங்கள்
மீண்டும் வருவார்களா நம்மோடு
மகிழ்வோடு உறவாடுவார்களா?
அந்த மரணத்துளிகள்
கனவிலும் வேண்டாம்
ஆத்மாக்கள் அமைதி பெறட்டும்.........!

நம்பிக்கை ஒளிதரும்
2015 ஆம் ஆண்டே
நலம் சேர்க்க வாரீர்
நாடும் மக்களும் வளம் பெற
மலர் தூவி வாழ்த்துக........!

தமிழர்கள் இங்கே
ஒற்றுமையில் தலைதூக்கி
சோதனைகளைப் பொடியாக்கி
தன்மானச் சிங்கங்களாய் வீர்கொண்டு
தமிழ் காக்கும் மொழியினராய்
சமயம் வாழ்விக்கும் நல்லோராய்
பொருளியலில் காலூண்றி
வாழ்தல் வேண்டும்..........!

நாட்டுச் சுதந்திரத்தில்
தமிழர் பங்கு பெரிதென்போம்
நாட்டு வளர்ச்சியில் முதுகெழும்பாய்
பல்லாண்டு துடிப்பாய் இயங்கிவிட்டோம்
நாடு வளர்ந்துவிட்டது
ஏணியாய் இன்னும் நாம் யாசகம்
புரிதல் அநீதியன்றோ..........?

அரசியலில் சுழியம் என்போம்
நாளுக்கொன்றும் ஆளுக்கொன்றும்
பேசியே கொல்கின்றார்
நம்பியவர் நட்டாற்றில்
பத்துவிரல்கள் மூலதனம்
சுயமுன்னேற்றம் வேண்டி
உழைப்போம் உயர்வோம்..........!

மாற்றம் ஒன்றே மாறாதது
வாழ்வின் நீதியை ஏற்போம்
வாழ்வை மாற்றுவோம்
சந்ததி நிலைப்பதற்கு
சிந்தனை செய்வோம்
இலக்கு வகுத்தல் நீதியென்போம்
கூடிவாழ்தல் கோடி நன்மை என்போம்
சாதனைப் படைக்கப் புத்தாண்டில்
உறுதி கொள்வோம்..........!

புத்தாண்டே புனித வாழ்வைத் தந்திடு
இனம் காக்க பூரிப்பாய் வாழ்த்திடு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R