கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அன்று     கப்பலிலே ஏறிவந்து- இலங்கைக்
                 கரைசேர்ந்த முப்பாட்டன் சோற்றுக்காய்
                 காடுவெட்டி தேயிலைநாட்டி-வெள்ளைக்
                 காரனுக்காய் உழைத்தாரே.

எட்டு       அடிகொண்ட லயமென்று -நீண்ட
                அடுத்தடுத்தக் குடிசைக்குள்ளே -கொத்து
                அடிமைபோல் வாழ்ந்தேதான் -சொந்த
                அறிவுமங்கிக் கிடந்தாரே.

 பத்து       மணிநேரம் வேலைசெய்தும்-தினம்
                மடியேந்தி பிச்சைகேட்கும் -வாழ்வின்
                மகிழ்ச்சியினை இழந்தபடி- நித்தம்
                மாடாக உழைத்தாரே.

சிந்தும்   வியர்வைக்குப் பரிசாக-சொற்ப
               வேதனத்தை மட்டுமவன்-பெற்று
               வெள்ளைக்காரன் உயரபாடு பட்டு 
               வேதனையால் உழன்றாரே.

ஓர்நாள் அவன்மாண்ட பின்னாலே-வந்த
                அவன்பிள்ளை பேரப்பிள்ளை-எல்லாம்
                அடுத்தடுத்து அவன்வழியே வாழ்ந்து 
                அடிமாடாய் போனாரே.

அந்த       வெள்ளைக்காரன் போனபின்னே-பெற்ற
                விடுதலைக்கு பின்னாலே-வாழ்வில்
                விடிவெள்ளி தோன்றுமென்று-எண்ணி
                வெறுங்கனவு கண்டாரே.

கண்ட     கனவெல்லாம் பலிக்குமென்று-இன்றும்
               காத்திருந்து காத்திருந்து-கட்டை
               கல்லறைக்கு போகுமட்டும்-இங்கே
               கஷ்டமோன்றே கண்டாரே.

நாடு       சுதந்திரத்தைக் கண்டபின்னும்-வாழ்வில்
              சுதந்திரத்தைக் காணாமல்-வாடி
              சுமைதாங்க முடியாமல்-ஏழ்மை
              சுட்டெரிக்க வீழ்ந்தாரே.

இன்னும்  உழைப்பைமட்டும்சுரண்டுகின்ற-. பேர்கள்
                  உறிஞ்சிட்டார் இவருதிரம்-என்று 
                  உயர்வுக்கு வழிகேட்டுப் -போனால் 
                  உதைக்கின்றார் சொல்லாலே.

எங்கள்   தேசத்தின் பொருளாதாரம்-இவர்கள்
               தேர்தல்வரும் காலங்களில் தெய்வம்
               திருவிழாக்கள் முடிந்திட்டப் -பின்னால்
               தேய்ந்தசெருப் பானாரே.

என்றும் எவன்செத்தால் எனக்கென்ன வென்று
                எமன்போல பகல்வேசம் போட்டு
                இவருயிரை வாங்குகின்றக் கூட்டம் 
                எடுப்பாய்வாழ் கின்றாரே.

இப்படி   வாழுகின்ற கொடுங்கூட்டம் அழிந்து
              வாழாத ஏழைகளும் -வாழ்வில்
              வசந்தத்தை காணுமொரு விடியல்
              வரும்நாளுக் கேங்குகின்றாரே.!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R