கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அத்தானே அத்தானே!

எந்தன் ஆசை அத்தானே!

கேள்வி ஒன்று கேட்கலாமா.... உனைத்தானே!.. – வான்

ஓலியில் கமழ்ந்து இனித்த  அந்தக் குரலின்

துயரம் என்னை அதிர வைத்தது!

புரட்சியில் வடிவெடுத்து

புது யுகங்களில்...

கலை இலக்கியங்களை

வகைப்படுத்தியவளே!

விதைப்புகள் தகர்ந்ததால்

சடுதியாய்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டு முனகினாயோ...

அதிசயமான அதிசயனின்

அரவணைப்பில் ஆழ்ந்தவளே...

உயர்ந்த கருத்துக்களில்

பொங்கிய விழுமியங்கள்

ஆழ்கடலின் மௌனம்போல்

அகவயத்தில் தொலைத்து

பூமியின் மடியில் மௌனித்து ஆழ்ந்தாயோ!

இத்துப் போகின்ற வாழ்க்கையில்

கூண்டுக் கிளிபோல்

கலையின் பிடிப்பை

அடக்கிக் கனத்தாயோ!

பாசப்போராட்டம்...

திட்டமிட்ட பிரயத்தனம்...

உணர்ச்சியில் வரிசையிட்டு

காலமும் நதியும்போல்

முடிவின்றி நீட்டினாயோ!

தானாக இல்லாமல் நீ

தனியாகத் தவித்தாயோ!

சாதிக்காத சிந்தனைகள்

உச்சக் கணங்களாகி உன்னுள்

தேய்ந்து மறைந்ததுவோ!

மரணமோ கவலையல்ல – எல்லோரும் மரணிப்போம்

உறக்கத்தில் இன்று தொட்டுக்கொள்கிறது என்னை...

கலையின் அழகால்

காலத்தை வென்று அர்த்தத்தை ஈர்க்கட்டும்

கவிதைக் கோலங்கள் போட்டு

கமலினியை நினைவில் ஊட்டட்டும்!


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R