இலங்கை  படைப்பாளி  ப. ஆப்தீன் ஈழத்து  ஆக்க  இலக்கியப்  படைப்பாளியும்  மல்லிகைப்பந்தல் தோழருமான  எழுத்தாளர்  நாவல்நகர்  ப.ஆப்தீன்  அவர்கள் சுகவீனமுற்ற  நிலையில்   கடந்த  9   ஆம்திகதி   கொழும்பில்  தனது  77 ஆவது  வயதில்  காலமானார். அவரது  மறைவு  ஈழத்து  இலக்கிய  உலகில்  மட்டுமல்ல மல்லிகைப்பந்தல்   தோழமை  வட்டத்திலும்  ஒரு  வெறுமையை ஏற்படுத்தி விட்டது.

மலையகத்தைப்  பிறப்பிடமாகக்  கொண்டிருந்தாலும்  பல்வேறு பிரதேசங்களில்  ஆசிரியராகப்  பணியாற்றியதன்  காரணமாக,  முற்போக்கு  சிந்தனையுடன்  மனித  நேயப் பார்வையுடன்   சமூகப் பொறுப்புணர்ச்சியுடன்   படைப்புக்களைத்  தந்தவர்.
மல்லிகையால்   வளர்த்தெடுக்கப்பட்ட  படைப்பாளி.  இவரது  முதலாவது  சிறுகதைத்  தொகுப்பு  "இரவின்  இராகங்கள் " மல்லிகைப்பந்தல்  வெளியீடாக      வந்தது.  அதே  தொகுப்பு தமிழகத்தில் NCBH   இல்  மறுபதிப்பாக  வெளிவந்தது.  அடுத்த  அவரது சிறுகதைத்  தொகுப்பும்   மல்லிகைப்பந்தல்  வெளியீடாக   "நாம் பயணித்த  புகைவண்டி "  எனும்  பெயரில்  வந்தது.

இவர்  எழுதிய. " கருக் கொண்ட  மேகங்கள் " நாவல்  சிங்கள-தமிழ்-முஸ்லிம்  மக்கள்  இடையே  நிலவும்  ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும்  ஒரு  நாவலாக  வெளிவந்தது.

இறுதியாக  கொடகே  வெளியீடாக  வந்த  இவரது  "கொங்காணி" எனும்  சிறுகதைத்  தொகுப்பு  மலையக  மக்களின்   வாழ்வியலை அவர்களின்  சொல்லாடல்களுடன்     சொன்னது      மட்டுமல்லாமல், சமகால  ஈழத்து  மக்களின்  வாழ்வியலையும்  உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் காட்டிச் சென்றுள்ளது.

மலாய் சமூகத்தைச்  சேர்ந்தவராக  இருந்தமையால்  இலங்கை  வாழ் மலாய்  சமூகத்தினரை  அடையாளப்படுத்தும்  வகையிலான  ஒரு வரலாற்று  நாவலை   எழுதிக் கொண்டிருந்த  நிலையில்  மறைந்து விட்டார்.   அவரது  மறைவு  ஈழத்து   இலக்கியத்திற்கு  மட்டுமல்ல மல்லிகைப்பந்தல்   தோழமை   வட்டத்தினருக்கும்  ஒரு   பெரும் இழப்பு  என்றே  சொல்லவேண்டும்.
அவரது  இறுதிச்சடங்கு    10.10.2015   காலை  கொழும்பில் நடைபெற்றது.

தகவல்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R