அருண். விஜயராணிஇலங்கையில்   இலக்கியம்  பேசி  எழுதி  வாழ்ந்த  ஒருவரை அந்நியதேசத்தில்  கொண்டு  சென்றுவிட்டால்,  அது  கண்ணைக்கட்டி காட்டில்  விட்டதற்கு  சமம்  என்று  சொல்வார்கள்.  இலங்கையில் அவ்வாறு   இதழ்களிலும்    வானொலியிலும்  தனது  பெயரை ஆழமாகப்பதித்திருந்த  அருண். விஜயராணி  கணவருடன்   மத்திய கிழக்கு,    இங்கிலாந்து  என்று  பயணித்து  இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு   வந்தபொழுது    இங்கும்  கண்ணைக்கட்டிய வாழ்க்கைதானோ...?  என  யோசித்திருப்பார்.

ஆனால்,  அவர்  இங்கு  வந்த  காலத்தில்  இலங்கையிலிருந்து  வந்த சிலர்  தமது  பொதிகளுடன்  இலக்கியத்தையும்  சுமந்து வந்திருந்தனர்.   அதனால்  விஜயராணிக்கு  அவுஸ்திரேலியா நால்வகை  பருவகாலங்களைக்கொண்டிருந்தாலும்  கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில்   வசந்த காலம்தான்.

இலங்கையில்,   மத்திய  கிழக்கில்,  இங்கிலாந்தில்  அவர் வாழ்ந்தபோது  செய்ய இயலாமல்போன  ஒரு  ஆக்கபூர்வமான செயலை  அவர்  இங்கு செய்தமைக்கு  இங்கிருந்த  அவருக்கு இங்கிதமான  இலக்கியச்சூழல்தான்  காரணம்.  இங்குதான்  அவருடைய   முதல்  கன்னிமுயற்சி  கன்னிகாதானங்கள்  நூல் வெளியானது.

1989  ஆம்  ஆண்டு  அவர்  இந்த  கங்காரு  நாட்டுக்குள்  வந்தது  முதல் 2015   ஆம்  ஆண்டு  இறுதியில்  இங்கிருந்து  விடைபெற்றது வரையில், அவர்  சுவாசித்தது  கலை,  இலக்கியக்காற்றைத்தான். அவர்  இணைந்திருந்த  சில  கலை,  இலக்கிய  சமுகச்செயற்பாடுகள் பற்றி  பலரும்  எழுதிவிட்டார்கள்.   அதனால்  அதுபற்றி  மேலும் சொல்வதைவிடுத்து,   அவர்  எமது  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தில்  எத்தகைய   வகிபாகம்  ஏற்றிருந்தார் என்பதை   குறிப்பிடலாம்.

" அறிந்ததை  பகிர்தல்  அறியாததை  அறிந்துகொள்ள  முயல்தல் " என்ற  தாரகமந்திரத்துடன்  எமது  நண்பர்  முருகபூபதி  2001  ஆம் ஆண்டு   மெல்பனில்  இரண்டு  நாட்கள்  அடுத்தடுத்து  எழுத்தாளர் ஒன்று  கூடலை  முதல்  தடவையாக  ஒழுங்கு  செய்திருந்தார். அதில்  மெல்பன்,  சிட்னி,  கன்பரா  மாநிலங்களிலிருந்தும் இலங்கையிலிருந்தும்   பல  எழுத்தாளர்கள்  கலந்துகொண்டனர். பின்னர்  2002  இல்   சிட்னியிலும்  2003   இல்   மெல்பனிலும்   நடந்தன. மெல்பனில்    மீண்டும்  நடந்தபொழுது  தமது  தந்தையார்  ஓவியர் அமரர் கே.ரி. செல்வத்துரை  அவர்களின்    நினைவாக  மாணவர்கள் மத்தியில்  ஓவியப்போட்டி  நடத்துவதற்கு  முன்னின்று  உழைத்தார். அதற்கு   எமது  நண்பர்  ஓவியர்  ஞானசேகரம்  நடுவராக பணியாற்றினார்.  அவ்வாறே  2004  ஆம்  ஆண்டு  கன்பராவில் நடந்தபொழுதும்  அங்கும்  ஓவியப்போட்டிக்கு  ஏற்பாடு செய்திருந்தார்.

பின்னாளில்   இந்த  எழுத்தாளர்  ஒன்றுகூடல்  ஒரு  அமைப்பாக பதிவுசெய்யப்பட்டதும்,  அதில்  இணைந்துகொண்ட  ஸ்தாபக உறுப்பினரானார்.   இதுவரையில்  15   எழுத்தாளர்   விழாக்கள் அவுஸ்திரேலியாவில்   நடந்துவிட்டன.

2009  ஆம்  ஆண்டு  மீண்டும்  மெல்பனில்  நடந்தபொழுது இச்சங்கத்தில்   தலைவராக  இருந்திருக்கின்றேன்.   விஜயராணி இறுதியாக  2015  இல் நடந்த  விழா   தவிர்ந்த  ஏனைய  அனைத்து விழாக்களிலும்  ஆக்கபூர்வமாக  இயங்கியவர்.

2010  இல்  அவர்  தலைவராக  இருந்தபொழுதுதான்  பத்தாவது எழுத்தாளர்   விழா  மெல்பனில்  நடந்தது.  அச்சமயம்  சர்வதேச சிறுகதை,   கவிதைப்போட்டிகள்  இடம்பெற்றன.  அத்துடன்  பூமராங் என்ற   சிறப்பு  மலரும்  வெளியிடப்பட்டது.விஜயராணி  எப்பொழுதும்  பெண்கள்  குறித்தே  தமது  ஆக்கங்களை எழுதிவந்தவர்.    பெண்களின்  குரலாக  ஒலித்தவர்.   அந்தக்குரல் ஓய்ந்திருந்தாலும்,  அவரின்  குரல்  இன்றும்  அவுஸ்திரேலியா வானொலிக்கலையகங்களில்  சேமிப்பாகவே  வாழ்கிறது.   அவருடைய   பெண்ணிய  சிந்தனைகள்  இதழ்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதனால்  அருண். விஜயராணி   என்றும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே   நாம்  உணருகின்றோம். ( 31-01-2016 அன்று அவுஸ்திரேலியா  மெல்பனில்  வெளியிடப்படும் விஜயதாரகை  இதழில்   இடம்பெறும்  கட்டுரை)

அனுப்பியவர்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R