1. வன்மம்

- மாதங்கி -

கவிதை வாசிப்போம் வாருங்கள்!மேற்கூர்ப் பெருநகர
நாற்சந்தி முகப்படியில்
அறிவு சீவிகள் சிலர் கூடிநின்று
ஆளுக்காள் அடிபட்டனர்
சொட்டை பேசினர்
சொல்லெறிந்து மோதினர்

பிரமிளின் மிச்சமே
பின்நவீன எச்சமே
முள்ளிலா மீனே
வா…. வா
மூக்கிலே குத்துவேன்
முதுகிலேறி மொத்துவேன்

கல்லுக்கும் வன்மம்
கற்றுத் தரவல்ல
சொல்லின் செல்வர்களென்றால்
சும்மாவா?

குவியலாய்க் கிடக்கும்
கூழாஞ்சொல் பொறுக்கி
கன்னங்காதுடைய
என்னமாய் வீசி எறிந்தனர்

வயிறு வளர்க்கிறதுக்கு
இஞ்சையும் வந்து
இடியப்பமவிச்சு விற்க
நானென்ன
இளிச்ச வாயனோ

பிழைப்பின் பேர் சொல்லி
சாதி பிரித்தாண்ட
சந்ததி எழுத்தாள்வான்
ஒருவன்
வீசியெறிந்த
எள்ளலைச் சுமந்து
ஏவுகணையொன்று
சந்தியில் வீழ்ந்து
சன்னமாய்ச் சிதறியது!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


2. வாழ்க்கை தத்துவம்

- இணுவை சக்திதாசன்  -

கவிதை வாசிப்போம் வாருங்கள்!ஆடத் தெரியாதவன்
மேடை சரியில்லை என்பதுவும்
ஓடத் தெரியாதவன்
வீதி சரியில்லை என்பதுவும்
வாழத் தெரியாதவன்
சமூகம் சரியில்லை என்பதுவும்
சிந்திக்கத்தக்க ஒன்று

தவறை தவறென்று
ஒத்துக்கொள்ளாதவரை
எல்லாம் தவறாகத் தான் தெரியும்.
கண்ணில் தூசி விழும் வரை
எண்ணிக் கூடப் பார்பதில்லை தூசியை

நீதியை தேடித் தோற்றாலும்
தீராசை இன்னும் கைவிட வில்லை

நல்லது கெட்டதை அறிந்தாலும்
சொல்லும் துணிவு வந்திடவில்லை 
சரி பிழைக்கு அப்பால் 
சமன்படுத்தி பார்ப்பது தான்
வாழ்க்கைத் தத்துவம்

தம் வாழ்வை இரை மீட்டு
அவரவர் திருந்தினாலே
சமன்பாடு தானாகவே
ஒருங்கிணைக்கப்படும்
கூட்டல் கழித்தல் செய்து பார்த்தால்
குப்பைகள் தான் மிஞ்சும்

இயற்கைக்குள்ளும்
இயலாமைக்குள்ளும்
இலக்கியத்துக்குள்ளும்
இயங்கிக் கொண்டிருப்பது
பூச்சியம் ஒன்றுதான் 

புள்ளி போடுவது பின் அது
கோலமாவது - அழகை
வெளிப்படுத்துவது
ரசிப்புக்கு உள்ளாவது
எல்லாமே
சமற்படுத்தலின் போதுதான்.
தத்துவமாகிறது வாழ்கை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


3. கன்னியின் எண்ணம்.

-  பிரகாஷ் -


கவிதை வாசிப்போம் வாருங்கள்!

மாலை நேர மயக்கம்
இளந்தென்றல் வீசும் காலம்
சாரல் காற்றும் வீசும்
சாளரத்தின் வழியே
சில்லென்ற தூரல் விழும்!
மாரனின் நெஞ்சம் தன்
அவளைத் தேடும்.
முல்லை மலரோ தேனுண்னும்
வண்டை தேடும்
மன்னவன் தன்னை கூடும் நாளை
எண்ணியிருப்பாள் இளங்கன்னி
நெஞ்சின் ஓரம்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R