கவிதை: இன்பத்திற்குண்டோ இணை!

அடிவானணைக்கும்
நீள் வெளி, நீல வெளி.
விரையும் வெண் மேகம்,
என்னகம் கவர்ந்தன;
கவர்வன.
எப்பொழுதும்!
எப்பொழுதும்!
பதின்மப்பொழுதுகளில்
கல்லுண்டாய் வெளிதனில்
நடாத்திய
நீண்ட பயணங்கள்!
அடிவானணைக்கும் கடல் நங்கை
ஒருபுறம்.
விரியும் விரிவெளி
மறுபுறம்.
காற்றிலாடும் வயல்வெளிகள்,
ஆங்கு சிறகடிக்கும் கிளிக்கூட்டம்,
தூரத்தில் தவமியற்றும்
நவாலி மண்மேடுத்துறவிகள்,
நெஞ்சினில் களியேற்ற,
தண்தென்றல்
மேனி வருடிச்செல்லும்.
இன்பத்திற்குண்டோ
இணை.

வன்னிமண் வாழ்வு:
வனங்கள், வானரங்கள்,
வான் பாயும் வளம்மிகு குளங்கள்
சிறகடிக்கும் பட்சிகள்,
பல்வகை உயிர்கள்,
விருட்சங்கள்
மலிந்த வாழ்வு.
அவை என்றும்
கவர்ந்தன; கவர்வன.
காலவெளி கடந்து
குளத்து நீர், நீந்தும் நண்பர்,
கொடியிடை வெண், செம் பெண்கள்
நினைவுக்குருவிகளின் சிறகடிப்பில்
நிலவிடுமின்பத்திற்குண்டோ
இணை.

வயற்புறக் கிராமத்து
இரவுகள்!
பொழியும் மழைத்தாரை!
பட்டோடு சடசடக்கும்
இன்னொலி!
வயற்புறத்து மண்டுகங்களின்
வாய்ப்பாட்டின்னிசை!,
இடையில் வெட்டி
இடித்தொளிரும்
இடி மின்னல்!,
இதைமீறியோரின்பமுண்டோ
இந்நிலத்தில்.

நெடுவிருட்சத்தோழர்தம்
ஒற்றுமை கண்ட வியத்தலுடன்,
ஊடறுக்குமொரு பாதை
ஊடே பயணித்தல்,
இலைவெளியூடு
இடையிடையே தலைகாட்டும்\
இளவெயிற்கதிர்கள்.
அவைதம் இதமிகு
இளஞ்சூடு,!
அப்பயண அடிமையெனவே
ஆனேன்; ஆகின்றேன்
நான்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R