1000 கவிஞர்களின் கவிதைத்தொகுப்புஎழுத்தாளர் யோ.புரட்சி32  நாடுகளைச்சேர்ந்த 1000 தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து செல்லமுத்து வெளியீட்டகம் (வள்ளுவர்புரம்) என்னும் பதிப்பகம் வெளியிடவுள்ளது. இத்தொகுப்பின் வெளியீட்டுக்கான செயலியக்குநராக இருக்கின்றார் இளம் எழுத்தாளர் யோ.புரட்சி. ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தில் பங்கு பற்றி, சிறை சென்று மீண்டு வந்த இவரைப்போன்ற பலர் தமிழ் இலக்கியத்தில் தம்மை ஈடுபடுத்தித் தடம் பதித்து வருவது பாராட்டத்தக்கது. இதுபோன்றதொரு தொகுப்பு சங்க காலத்தொகுப்புகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு எண்ணிகையான கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கி வெளிவருவதாக நான் கருதுகின்றேன்.

பொதுவாகக் குழுக்களாக இயங்கும் அமைப்புகளால், எழுத்தாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளே வெளிவருவதால் பெரும்பாலும் இலை, மறை காயாக இருக்கும் கவிஞர்கள் பலரின் கவிதைகளை அத்தகைய தொகுப்புகளில் காண முடிவதில்லை. இவ்விதமானதொரு சூழலில் 1000 தமிழ்க்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு என்பது இக்காலகட்டத்தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை வரலாற்றில் ஆவணப்படுத்தும் தொகுதியாக நிச்சயமாக விளங்குமென்று கருதுகின்றேன்.

இன்று எவ்விதம் நூற்றுக்கணக்கான சங்ககாலக் கவிஞர்களின் கவிதைகளை ஆவணப்படுத்தி எமக்கு வெளிப்படுத்தும் அகநானூறு, புறநானூறு, நற்றினை, ஐங்குறுநூறு  போன்ற சங்க காலத்துத் தொகுப்புகள்  விளங்குகின்றனவோ அவை போன்று இத்தொகுப்பும் விளங்கும். இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களின் பின்னரும் இக்காலகட்டத்துத் தமிழ்க்கவிஞர்களை அவர்களது கவிதைகளுடன் எதிர்காலத்துத் தமிழர்களுக்கு  அறிமுகப்படுத்தும்  தொகுப்பாக இத்தொகுப்பு  விளங்கும். வாழ்த்துக்கள். இவ்விதமானதொரு தொகுப்புக்காகத் தன் கடும் உழைப்பை வழங்கும் எழுத்தாளர் யோ.புரட்சியின் முயற்சி நிச்சயம் வெற்றியடையும். கடும் உழைப்புக்கேற்ற பயன் நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R