கவிதை: கனவில் வந்த என் தோழி!

இன்று பூர்ணமி.
அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் ,
அதெனக்குப் பிடிக்கும், மிகவும்.
பல் வர்ணங்களில் பாவாடை தைத்தழகு
பார்ப்பேன்.
தேவையான பொருட்களைத்
தேடித் தயார் செய்து,  
மல்லிகை பறிக்கப் பின் வளவு
சென்றேன்.
அழகாகக் பூத்துக் குலுங்கியபடி
கிணற்றடியில்
அப்பா கட்டிய மல்லிகைப் பந்தல்.
மொட்டுகள் பறித்து
மாலை கட்டினேன்.
அம்மா காட்டிய வழியினிலே
அபிஷேகம் .
அவள் ஆபரணங்களையொரு தட்டில்
வைத்துக் குழந்தையாய்க்குளிப்பாட்டி
துடைத்துப் புதுப்பாவாடை
அணிவித்து, அலங்கரித்து,
நெற்றியில் குங்குமம் வைத்து,
மாலை அணிவித்ததும்,
மனதுக்குக்குள் ஏதோ ஒரு நெகிழ்வு.

வாய் மட்டும் அபிராமி அந்தாதியை
பாடிக் கொண்டிருந்தது.
காலத்தின் கோலமோ?
நாலைந்து தலைமுறைத் தொடர்பு....
நாட்டில் நடந்த கலவரங்களால்
திக்குத் திக்காய்ச் சிதறிப் போனோம்.
அம்பாளை அங்கேயே விட்டு விட்டு
அகத்திலொரு சங்கடம்; வேதனை.
வருடங்கள் பல கழிந்து போயின.
ஆனாலும் மனதில் ஏற்பட்ட உணர்வுகள்
அப்படியே பதிந்து விட்டன.
கனவில் ஒரு நாள் வந்தெனைத் தோழியென
அணைத்து நீ அழைத்தாய்.
'உன்னுடனேயே வந்து விட்டேன்'
எனச் சொன்னது
அவளே.
நான் பாக்கியசாலி.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R