- தம்பா (நோர்வே) -வானம்  கொழித்து  
வனமும் செழித்த மண்ணில்
நல்லிணக்கம் விளைந்ததில்லை.

பஞ்சம் பிளைக்க வந்தவரை
தஞ்சம் களைத்து
வஞ்சகம் பிளைக்க வைக்கிறது.

மத்தியகிழக்கில் தெறித்து விழுந்த பொறி
தென்கிழக்கால் காட்டுத் தீயானது எப்படி?

தரைபட்ட உயிரை காக்க
ஒரடி குழந்தை அரையடி சேற்றில்
பல மைல்களை உழுது வருகிறது.
கைக்குழந்தைக்கு கழுத்திலும் மார்பிலும்
சேற்றுப்புண் பார்த்திடும் மாயமென்ன?

தாகம் தாளாது
சேற்றுமண்ணை குவித்து
தண்ணீர் கட்டி குடிக்க விளைய
அதனுள் சிறுநீர்கழித்து
களிப்புறும் காவல்படையும்
ஏளனம் செய்து மகிழும் துறவியும்  
உடைகளில் பிரிந்து நின்றனர்.  நடக்க தள்ளாடும் முதியவர்களை
எல்லைவரை விரட்டி
கண்ணிவெடிகளை பரப்பி 
தத்திச்செல்லும் கிளிக்கோடு விளையாட
நிர்பந்திகிறது சாத்வீகம்.

மனிதம் துறவுபூண
துறவு ஆயுதம்பூண
ஆயுதம் அதிகாரம் பூணுகிறது.
தினம் தினம் பௌர்ணமியை கொன்று
அமாவாசையை ஆரவாரித்து
ஆனந்தம் கொள்கின்றனர்.

ராணுவமயப்பட்ட மதமும்
மதவயப்பட்ட ராணுவமும்
இரு குழல் துப்பாக்கி போன்றது.
எத்திசைகளிலும்  கனல் கக்கி
தர்மங்களை கருகவைக்கிறது.

வரலாறு வன்னித்தமிழனை
வறுத்தெடுக்க சித்தப்பிரமையானவன்,
மியன்மார் காடுகளில் சேற்றுப் பிணமாகிறான். 

எமக்கென்ன பர்மாக் கடற்கரையில்
`wifi´ சரியில்லை என
ஐநா விற்கு ஒரு முறைப்பாடு
`email´  எழுதிவிடவேண்டியதுதான்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R