பேரோடும் புகழோடும்
பெரும்பணி ஆற்றும்
சீரோடும் சிறப்போடும்
சிந்தனையைத் தூண்டும்
ஈரோடு மக்கள்
சிந்தனைப் பேரபையின்
உலகத்தமிழ்ப் படைப்பரங்கில்
உங்கள்முன் நிற்கிகிறேன்
பிச்சினிக்காடு  நான்
பிறந்தது தமிழ்நாடுதான்
எனினும் எனக்கு
சிங்கப்பூர்
இரண்டாவது தாய்நாடு
தமிழ்நாடு

ஐம்பதாண்டு அதன்பெருவளர்ச்சியில்
இருபத்தைந்தாண்டு எனக்கும் சொந்தம்

தாய்மொழி
தமிழ்மொழியை
அரசுமொழியாய்
அலங்கரிக்கும் நாடு
எனவேதான்
எனக்குச் சிங்கப்பூர்
இரண்டாவது தாய்நாடு
தமிழ்நாடு
ஆனால்
ஈரோடு எனக்குத்
திருத்தலம்
மனிதனின் மானம் காக்கும்
ஆடைக்கு நூல்தரும்
மனிதனை மனிதருள்
மாணிக்கமாக்கும்
சிந்தனைக்கும் நூல்தரும்
ஈரோடு எனக்குத்
திருத்தலம்

ஈரோட்டில் இன்று
கவிதைத்திருவிழா
கவிதைக்குத் திருவிழா

ஈரோடு இன்று
கவிதையாய்ப்பூத்து
கவிதையாய்க்காய்த்து
கவிதைத்தோட்டமாய்க்
காட்சி அளிக்கிறது

கவிதைத்திருவுழா
கவிதைக்குத்திருவிழா
கவிஞனுக்கு இதுதானெ பெருவிழா

எனவே
ஈரோடுதான்
எனக்குத்திருத்தலம்

சிங்கப்பூரில்
கவிமாலையை
நிறுவிய கவிஞன் நான்
ஆனால்
ஈரோட்டில்
இன்றையமாலை
இனிய கவிமாலை

கவிதை  உலகில்
சிங்கங்கள் சிற்பிகள்
சிகரங்கள் இமயங்கள்
கணியன் பூங்குன்றன்கள்
காளமேகங்கள் வானம்பாடிகள்
ஒன்றுகூடும் உன்னதமாலை

சிலம்பாட்டம் கவிதையில்
செய்யயும்மாலை
சிந்தனைத் தேன்துளியைத்
தூவும்மாலை
ஞானஒளி கவிதைவழி
காட்டும் மாலை
மணக்கும் மாலையல்ல
கவிதையாய்க் கனக்கும் மாலை

இன்றையமாலை
இனியமாலை
அந்த
அரியமாலையை
அனைவருக்கும் தந்த
ஈரோடு
மக்கள்சிந்தனைப்பேரவையை
இதயத்தால் வணங்குகிறேன்

திருத்தலம் சென்று
திரும்பும் பயணம்
திருத்தலப் பயணமாகும்

திருத்தலம் சென்று
திரும்பும் பயணம்
தினந்தோறும் நடக்கிறது
திசைதோறும் நடக்கிறது

திருத்தலப் பயணம்
நதிதாண்டியும்
மலைதாண்டியும்
கடல்தாண்டியும்
கண்டம்தாண்டியும் நடக்கிறது

நடக்கும் இந்தப்பயணம்
நடையில் நடக்கிறது
காரில் நடக்கிறது
கப்பலில் நடக்கிறது
வானிலும் நடக்கிறது

நடக்கும் இந்தப்பயணம்
எதற்காக நடக்கிறது?
நடக்கும் இந்தப்பயணம்
நடப்பது எதற்காக?

கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் இருக்கிறது

திருத்தலப் பயணம்
சென்று திரும்பினால்……

வருத்தும் துன்பத்தின்
வலிமை குறையலாம்
வருத்தத்தின் வாயில்
அடைக்கப்படலாம்
துன்பத்தின் நுழைவு
தடுக்கப்படலாம்
நுழைந்த துன்பம்
துடைக்கப் படலாம்
கிடைக்காத அமைதி
கிடைக்கப்பெறலாம்
எட்டாத சொர்க்கம்
எட்டுமென எண்ணலாம்

இப்படி
எதைஎதையோ எண்ணித்தான்
திருத்தலப் பயணம்
திசைதோறும் நடக்கிறது
தினந்தோறும் நடக்கிறது

இவைவேண்டி பயணமென்றால்
இதைதீர்க்கும் பயணமென்றால்
நடக்கட்டும் திருப்பயணம்
நட்டம் நமக்கில்லை

திருத்தலங்கள் எல்லாம்
திருத்தும் தலங்களா?
இல்லை நம்மை
வருத்தும் தலங்களா?

கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது

கலப்படத்தைக் கவனமாய்க்
கடைபிடிக்கும் கயவன்
திருத்தலம் சென்று
திருந்தி திரும்பினால்
அதுதான் திருத்தலம்
ஆம்
அது
அவனைத் திருத்திய தலம்

திருத்தலம் சென்று
திரும்பியும்
திரும்பியும்
கலப்படம்செய்வதில்
கவனம் கூடினால்
திருத்தலம் தேவையா’?
திருத்தலப்பயணம்தான் தேவையா?
தெய்வமும்
கலப்படத்தொழிலுக்கு உதவியா?

கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது

வஞ்சகம் சூழ்ச்சி
வன்கொடுமை துரோகம்
பொறாமை திருட்டு
ஏதும் குறையாமல்
ஏகபோகமாய்
செய்து பிழைப்போர்கள்

திருத்தலம் சென்று
திரும்பினால் நன்மையா/?
திருந்தினால் நன்மையா?

திருத்தலம் சென்று
திரும்பவும் செய்தால்
தெய்வமே அதற்கு உடந்தையா

கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது

திருத்தலம் சென்று
தெய்வம் வணங்கி
திரும்பாமல்
ஒரு
திருப்பம் நிகழாமல்
முட்டி மோதி
நெருக்கடியில்
மூச்சுவிட மறந்ததையும்


இயற்கைப்பெருந்துணையால்
இறைவனடிச் சேர்ந்ததையும்
செய்தியாய்ப் படிக்கிறோம்
செய்தியாய்ப் பார்க்கிறோம்

திருத்தலம் சென்றோரை
திருப்பி அனுப்பாமல் – உயிரை
வழிப்பறிசெய்வதில்
வல்லமை அதிகம்
இயற்கைக்கா? இறைவனுக்கா?

கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது

திருத்தலம் என்றால்
திருத்தலம் சென்றால்
திருப்பம் மனதில் நிகழவேண்டும்
திருத்தம் வாழ்க்கையில் நிகழ்த்த வேண்டும்

உடலை உயிரை
வருத்திக்கொண்டு
ஊர்விட்டு உறவுவிட்டு
வருவோரை மேலும்
வருத்தினால் எப்படி
திருத்தலமாகும்?

கேள்வி எழுகிறது
மனசு
கேட்காமல் கேட்கிறது

திருத்தலம் என்றால்
திருத்தலம் சென்றால்

பொய்யும் புரட்டும்
திருட்டும் கொலையும்
அடியோடு அகலவேண்டும்

மனசெல்லாம் அறம்பூத்து
மணம்வீச வேண்டும்
கணந்தோறும் கொடை செய்து
கரம்சிவக்கவேண்டும்

அறிவில் தெளிவும்
அன்பு மொழியும்
ஆன்றோர் வழியில்
சான்றோ ராக்கும்
தலமே எனக்குத்
திருத்தலமாகும்

ஆம்
ஈரோடு எனக்குத்
திருத்தலமாகும்

மக்களைச் சந்திக்க
மக்களைச் சிந்திக்க
வழிகாட்டும் திருத்தலம்
வழிபோடும் திருத்தலம்
ஈரோடு அன்றி
எது வேறுதலம்?

சான்றோர் வருகின்ற
சான்றோரை அழைக்கின்ற
சிந்தனைப் பேரவையால்
சிறந்தது இத்தலம்
ஈரோடு
ஒரு
சிந்தனைத்தலம்
சிந்திக்கும் தளம்

எனக்கொரு வேண்டுதல்
என்னிடம் இருக்கிறது

இத்தனைமுறை திருத்தலம்
சென்று திரும்பினால்
நினைத்தவை எல்லாம்
நிறைவேரும் என்பதுபோல்
எனக்கொரு வேண்டுதல்
என்னிடம் இருக்கிறது

அது என்ன
வேண்டுதல்?

ஆண்டுக்கொருமுறை
ஈரோடு வரவேண்டும்
அதுவும்
ஆகஸ்டில் வரவேண்டும்

புத்தகக் கடலில்
மூழ்கி மூழ்கி
மூச்சடக்காமல்
முத்தெடுக்க வேண்டும்
காரணம்
மூளைக்குக் கொஞ்சம்
மூலதனம் வேண்டும்

அதை
வைப்புநிதியாய் வைத்து
வாழ்க்கையை நடத்த வேண்டும்
இல்லமும் உள்ளமும் வளம்பெற வேண்டும்
இல்லை இல்லை
ஒரு
வரலாறு படைக்கவேண்டும்

வாங்கிய மூலதனத்தின்
வட்டி பெருகாமல்
படித்து முடிக்கவேண்டும்
படிப்படியாய் சிந்தனையில்
பரிணாமம் பெறவேண்டும்
பரிமாணம் கூடவேண்டும்

ஆம்
எனக்குத்திருத்தலம்
ஈரோடுதான் – இங்கே
ஆண்டுக்கொருமுறை
வரவேண்டும்
ஆகஸ்டில் வரவேண்டும்
ஆயுள்முழுதும் வரவேண்டும்

வேண்டுதல் இதுதான்
விருப்பமும் இதுதான்

வேண்டி விடைபெறுகிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R