களனியா ரஜமகா விகாரைப்பிள்ளையார் களனி ரஜ மகா விகாரைSave மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் 'வெளிக்களக் கட்டடக்கலை' (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.

இப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka  என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம்.  இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக   விளங்கிய 'அடங்காத்தமிழன்' என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.

களனி ரஜா மகா விகாரை இலங்கையின் சிங்கள மக்களைப்பொறுத்தவரையில், குறிப்பாகப் பெளத்த சமயத்தைவரைப்பொறுத்தவரையில் மிகவும் சரித்திர , சமய முக்கியத்துவம் வாய்ந்தது. கெளதம புத்தர் பரிநிர்வாண நிலையடைந்து , எட்டு ஆண்டுகள் கடந்து, மூன்றாவது தடவையாக இலங்கைக்கு வந்த சமயம் கி.மு.500 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டதாக பெளத்தர்களால் நம்பப்படுகிறது. கோட்டை இராச்சியத்தில் புகழ்பெற்று விளங்கிய இப்பெளத்த ஆலயம் பின்னர் போர்துகீசர் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுப் பின்னர் கீர்த்தி சீறீ ராஜசிங்கன் காலத்தில் மீள்புனருத்தானம் செய்யப்பட்டது.

கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன்எமது 'வெளிக்களக்கட்டடக்கலை'ப் பாடத்துக்கான விஜயத்தின்போது ஒருமுறை விரிவுரையாளர் அஞ்சலேந்திரனுடன் களனி ரஜமகா விகாரைக்கும் சென்றிருந்தோம். யாழ்தேவியில் கொழும்பு நோக்குப் பயணிக்கையில் , பண்டைய பெளத்தர்களின் புனித நகர்களிலொன்றாகிய அநுராதபுரத்தைப் புகைவண்டியில் கடக்கையில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயகிரி விகாரை, ரூவன் வெலிசாய மற்றும் ஜீத்தவனாராம தாதுகோபங்களைப் பார்த்திருந்த எனக்கு களனி விகாரையே முதன் முதல் நான் நேரில் சென்று பார்த்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விகாரையாகும்.

இந்த விகாரைக்கான விஜயத்தை நினைக்கையில் எனக்கு உடனடியாகத்தோன்றுமொரு விடயம் விகாரையின் பின்புறச் சுவரிலுள்ள இந்துக்கடவுள் ஒருவரின் சிலைதான். அவர்தான் கண தெய்யோ என்று பெளத்த சிங்களவர்களால் அழைக்கப்படும் பிள்ளையார். அந்தப்பிள்ளையாரையே இங்குள்ள புகைப்படமொன்றில் நீங்கள் காண்கின்றீர்கள்.

தென்னிலங்கையில் இவை போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல புராதனக் கட்டடங்களுள்ளன.இவற்றையெல்லாம் நாம் சுற்றுலாக்களில் சென்று பார்க்கவேண்டும். துரதிருஷ்ட்டவசமாக நாட்டில் இதுவரை நிலவிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாக இவ்வகையான பழமையின் சின்னங்களையெல்லாம் இனக்கண் கொண்டு பார்க்கும் போக்கு நிலவியது. அந்நிலை இனியாவது மாற வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் சகல வகையான சமூக, அரசியல் முரண்பாடுகளெல்லாம் காலப்போக்கில் நீங்கி, மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத்திரும்பும் நிலை உருவாகட்டும். உருவாகுமென்று நம்புவோம். பாருங்கள் இது போன்ற ஆலயங்களில் இந்துக்கடவுள்களும், பெளத்தக்கடவுள்களும் எவ்வ்வளவு ஒற்றுமையாக விளங்குகின்றார்கள். நாம்தாம் வெளியில் அடிபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

 


முகநூல் எதிர்வினைகள்:

1. Maheswaran Murugaiah அநேகமாக எல்லா புத்த விகாரைகளிலும் பிள்ளையார் சிலை காணப்படுகின்றது .தங்களின் காவல் தெய்வம் என்றும் சொல்வார்கள்

2. Pena Manoharan நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் அநுராதபுரம் ரூவானவெலிசாய கோயிலில் உட்பிரகாரத்தில் எல்லாளன் ஒரு திசையில் யானைமீதும் எதிர்த்திசையில் துட்டகைமுனுவும் இருந்ததை என் பால்யத்தில்....அறுபதுகளில் பார்த்த ஞாபகம்.இது சரிதானா என்பதைப் பழைய படங்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.2015 இல் நான் போனபோது இரண்டு சிலைகளும் வெளிப்பிரகாரத்தில் தற்காலிகக் கூடாரத்தில் மூடி வைக்கப்பட்டிருந்தது.உங்கள் கணினி...கட்டிடத் தொழில்நுட்ப ஞானத்தால் என் கூற்றை ஆய்வு செய்து உண்மைநிலை உரைக்க முடியுமா நண்பரே..

3. Thilina Kiringoda Giri, Anjalendran came for only two sessions of experiencing in Architecture in the first year. Two weeks later Prof. KRS Pieris sacked him as a Visiting Lecturer because he had criticized Prof. Pieris.

4. Giritharan Navaratnam //Two weeks later Prof. KRS Pieris sacked him as a Visiting Lecturer // Hi Kiringoda, it is news to me. I still remember visiting Kelaniya Raja Maha Vihara with him. It was a memorable visit for me. For me, it looks like he came more than two sessions. May be I am wrong. Kelaniya visit is still fresh in my memory. We also visited few beautiful houses and Independence Square with him, I think.

5. Thilina Kiringoda Do not forget that I was the batch rep.

6.Athanas Jesurasa '// பாருங்கள் இது போன்ற ஆலயங்களில் இந்துக்கடவுள்களும், பெளத்தக்கடவுள்களும் எவ்வ்வளவு ஒற்றுமையாக விளங்குகின்றார்கள். நாம்தாம் வெளியில் அடிபட்டுக்கொண்டிருக்கின்றோம்.// - சடப் பொருள்கள் சண்டை பிடிக்க முடியாதுதானே! அதே பிள்ளையார் சிலைகளைக் குளத்தில் வீசிவிட்டு, "பிள்ளையார் குளிக்கப் போய்விட்டார்" (கணதெய்யோ நான்ட கியா) என்று கூக்கிரலிட்டதெல்லாம் யதார்த்தத்தில் நடந்துமுள்ளன!

7. Siva Sivakumaran I remember him as a quite outspoken architect, speaking his mind not fearing about the established architects or academics. Can't think of anyone else of that calibre - perhaps Vidura is another one...

8. Giritharan Navaratnam Hi kiringoda , Siva, Siva Sivakumaran , is one year senior to us. I hope you remember him.He was staying at Molpey with Baskaran & Kunasingam..

9. Siva Sivakumaran Thilina, to further refresh your memory, I left Justin's just before you joined.

10.Thilina Kiringoda Siva Sivakumaran I remember you. During my first year, your batch mates Hiran Leitan and Praneeth Amaratunga and I were in the same boarding house at Rawatawatta. After they had left RL Ravichandra joined me. From your batch only 7 are remaining in the country. Dotta, Dottie, Ganepola, Panapitiya, Anura Jayathilaka and Dharshanie. From ours Piyal, Saba, Nihal Bada, Kulatunga, Mandawela, Saroja, Champa and Chaya are in the country. Shanthi and Aryadasa passed away. We are planning to celebrate the 40th year of our getting together in October this year. I am trying to collect contact details of our batch mates who are domiciled abroad. If you know any pl forward it to me via e-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R