தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத்திருவிழாவில் ஈழத்து எழுத்தாளர் இளங்கோவனுக்குக் கௌரவம்..!"பல்துறை ஆற்றலாளரான வி.ரி.இளங்கோவன் அவர்களது கவிதைத் தொகுதியினை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் உலகத் தமிழர் படைப்பரங்கில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கலை - இலக்கியவாதியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கும் இளங்கோவன் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டிற்கும் எமக்குமிடையே தமிழ் இலக்கியப் பாலமாக - தொடர்பாளராக விளங்குகிறார். பல நூல்களை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சிறந்த படைப்பாளியான அவரது கவிதைத் தொகுதியை உலகத்த தமிழர் படைப்பரங்கில் வெளியிட முன்வந்தமைக்காக அவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது."

இவ்வாறு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும் எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன் கடந்த 12-ம் திகதி பகல் (12-08-2018) ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர் படைப்பரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம், இலக்கியவித்தகர் வி. ரி. இளங்கோவனது "ஒளிக்கீற்று" கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.

"ஒளிக்கீற்று" கவிதைத் தொகுதியை வெளியிட்டு வைத்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஈரோடு மாவட்டச் செயலாளர் ஓடை பொ. துரைஅரசன் பேசுகையில், ஈழத்துக் கவிஞர்கள் பலரின் கவிதைகள் யதார்த்தப் பூர்வமானவை. அந்தவகையில், முற்போக்குச் சிந்தனை வயப்பட்ட இளங்கோவனின் கவிதைகள் அவரது அனுபவங்களைப்  பிரதிபலிக்கின்றன, சிந்தனையைத் தூண்டுகின்றன.
மரபு சார்ந்தும், மரபு சாராமலும் உணர்வுகளின் ஊற்றாக அவரது கவிதைகள் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. அவருக்கு எமது பாராட்டுக்கள்." எனக் குறிப்பிட்டார்.  நூலாசிரியர் இளங்கோவனது உணர்ச்சிமிகுந்த ஏற்புரை சபையோரின் பாராட்டுதலைப் பெற்றது. ஓடை பொ. துரைஅரசன் நூலை வெளியிட, மூத்த வழக்கறிஞர் யு. கே. செங்கோட்டையன் அதனைப் பெற்றுக்கொண்டார். படைப்பாளிகள், இலக்கிய அபிமானிகள், பேராசிரியர்கள் உட்பட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றிய இலங்கை, மலேசியா நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளது உருவப் படங்களும், அவர்கள் குறித்த விவரங்களும் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.

அன்று மாலை இடம்பெற்ற சிந்தனை அரங்கில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வேண்டுகோளுக்கு இணங்க நினைவுப்பரிசு - விருதை நடிகர் சிவகுமார் இளங்கோவனுக்கு வழங்கிக் கௌரவித்தார்.

தனது சில நூல்களையும் வி. ரி. இளங்கோவன் நடிகர் சிவகுமாருக்கு அன்புடன் வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மறுநாள் (13-08-2018) மாலை இடம்பெற்ற சிந்தனை அரங்கில் நடிகர்கள் பார்த்திபன், சத்தியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் நடிகர் பார்த்திபன் தனது "கிறுக்கல்கள்" என்ற நூலை இளங்கோவனுக்கு வழங்கிக்  கௌரவித்தார்.

ஈரோடு புத்தகத் திருவிழா தமிழ்நாட்டில் மிகப்பெரிய நிகழ்வாக இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. 250 - க்கு மேற்பட்ட புத்தக அரங்குகள் இங்கு இடம்பெற்றிருந்தன. தினமும் தமிழகமெங்குமிருந்து கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பல்லாயிரம் மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை கடந்த 14 வருடங்களாக சிறப்பான ஒழுங்கமைப்பில் புத்தகத்திருவிழாவை நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.

 

மேலும் சில நிகழ்வுக் காட்சிகள்:

தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத்திருவிழாவில் ஈழத்து எழுத்தாளர் இளங்கோவனுக்குக் கௌரவம்..!

தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத்திருவிழாவில் ஈழத்து எழுத்தாளர் இளங்கோவனுக்குக் கௌரவம்..!

 

- தமிழகத்திலிருந்து: சோழ. நாகராஜன்
Cholas Nagarajan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R