முனைவர் பாரதி ஹரிசங்கர் [முனைவர் பாரதி ஹரிசங்கர் 2007இல் கனடா வந்திருந்தபொழுது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றி 'பதிவுகள்' இதழில் வெளியான கட்டுரையும், 'பதிவுகளி'ல் வெளியான அவரது படைப்புகள் சிலவும் ஒரு பதிவுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. -பதிவுகள் ]அண்மையில் தமிழகத்திலிருந்து கலாநிதி பாரதி ஹரிசங்கர் கனடாவுக்குக் 'கனடியக் கற்கைநெறி'க்கான 'சாஸ்திரி அறக்கட்டளைப்' புலமைப் பரிசில் பெற்று விஜயம் செய்திருந்ததை ஏற்கனவே பதிவுகள் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். அதன் பொருட்டுக் கனடாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றிருந்த பாரதி ஹரிசங்கர் தன் பயணத்தின் இறுதி இலக்காகத் 'டொராண்டோ'வுக்கும் வந்திருந்தார். 'டொராண்டோப் பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த அவரை எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா மற்றும் வ.ந.கிரிதரன் ஆகியோர் சந்தித்தனர். அருகிலிருந்த உணவகமொன்றில் சந்தித்துச் சிறிது நேரம் கலந்துரையாடினர். பாரதி ஹரிசங்கரின் நிகழ்ச்சி நிரல் மற்றும் குறுகிய நேர அறிவிப்பு காரணமாக அவருடனொரு விரிவான கலந்துரையாடலினை ஏற்பாடு செய்ய முடியாது போய்விட்டது. இருந்தாலும் மேற்படி சந்திப்பானது குறுகியதாக அமைந்திருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

எந்தவித ஆரவாரமுமில்லாமல் மொழிபெயர்ப்புத் துறையில் மிகவும் பயனுள்ள பங்களிப்பினைத் தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றிவருபவர் பாரதி ஹரிசங்கர். நிறைகுடம் தழும்பாது என்பது இவரைப் பொறுத்தவரையில் மிகவும் உண்மையானதொரு கூற்று.

ஏற்கனவே இவரது நூல்கள், மொழிபெயர்ப்புகள் பல வெளிவந்துள்ளன. Shakti : Multidisciplinary Perspectives on Women’s Empowerment in India என்னும் ஆங்கில நூலின் தொகுப்பாசிரியர்களிலொருவர். இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில பதிவுகள் சஞ்சிகையிலும் 2003 காலகட்டத்தில் வெளிவந்துள்ளன. தற்போது சென்னைப் பல்கலைக் கழகத்தில் Reader ஆகப் பணிபுரிகின்றார். இவரது புலம் பெயர் தமிழர்கள் பற்றிய கட்டுரையொன்று அண்மையில் The Literary Criterionஇல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்படி சந்திப்பின்போது தமிழ் இலக்கிய உலகம், பாரதி ஹரிசங்கரின் தற்போதைய கனடா விஜயம் மற்றும் தற்போது அவர் ஈடுபட்டுள்ள இலக்கியத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் பலமொழிபெயர்ப்புகளைச் செய்யவிருப்பதாகவும், இவை பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமுட்படப் பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும குறிப்பிட்ட பாரதி ஹரிசங்கர் ஏற்கனவே தான் பதிப்பித்த நூல்கள் பற்றியும் தகவல்கலைப் பகிர்ந்து கொண்டார்.

மேற்படி சந்திப்பின்போது எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா ஆகியோருடன் கலாநிதி பாரதி ஹரிசங்கரும் அவரது மகனுமிருப்பதையே இங்குள்ள புகைப்படத்தில் காண்கிறீர்கள்

இம்முறை அவரது விஜயம் குறுகியதாக அமைந்து விட்டபோதும் எதிர்காலத்தில் இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடும் வகையில் நிச்சயம் அவரது சந்திப்பு அமையுமெனத் தெரிவித்தார். அத்துடன் மேற்படி சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும் தனது மகிழ்ச்சியினைத் தெரிவித்த பாரதி ஹரிசங்கர் பதிவுகளுக்கு மேலும் சில கனடிய பூர்வகுடிப் படைப்பாளிகளின் மொழிபெயர்ப்புகளை அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டார். மேற்படி சந்திப்பின்போது எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா ஆகியோருடன் கலாநிதி பாரதி ஹரிசங்கரும் அவரது மகனுமிருப்பதையே இங்குள்ள புகைப்படத்தில் காண்கிறீர்கள்.

- ஊர்க்குருவி -

பதிவுகள்: யூலை 2007 இதழ் 91  -மாத இதழ்


பதிவுகளில் வெளிவந்த கலாநிதி திருமதி பாரதி ஹரிசங்கரரின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்!

என் காதல்
ஊட்ஜரூ நுநுக்கல் (Oodjeroo Noonuccal)
தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்

என்னை அடைவதா? இல்லையில்லை
மற்றவருக்குப் புரிந்த காதலை என்னால் தரமுடியாது.
ஏனெனில் நான் ஒரு இலட்சியத்தை மணந்துள்ளேன்.
மற்றதையெல்லாம் நான் துறக்க வேண்டும்.
நீ என்னை - என் உடல், ஆன்மா, மனம்
அனைத்தும் உனதாகக் கொள்கிறாய்.
என் முதல் அன்பு என் மக்களுக்கே.
அதன் பின். மனித குலத்திற்கு.

ஒரு பிரஜையாக என் தனித்துவத்தை
நான் இழந்து விட்டேன்.
அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை.
ஒருவனால் கொள்ளவும் தனதாக்கவுமுடியாது.

பழைய இன வேற்றுமை என்னைச் சூழந்து கொள்கிறது.
வெறுப்பும் இகழ்ச்சியும் தாக்குகின்றன.
தோல்வியில்லாமல் சண்டையிட நான்
சுதந்திரமாக வேண்டும். நான் பலமடைய வேண்டும்.

சரி செய்ய பழைய தப்புகளுண்டு.
மனிதனின் குரோதத்தை சகிக்க வேண்டும்.
நீண்ட பாதை. தனிமையான பாதை.
ஆனால் இலக்கோ நிச்சயமானது.


வேடன்
ஆர்ச்சி வெல்லர் [Archie Weller]
தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்

தனது இரத்தத்தால் பச்சைப் புல்லை சிவப்பாக்கிய
கங்காருவிற்காக ஒரு பாடல் பாடுகிறேன்.
அஸ்தமிக்கும் சூரியனுக்கெதிரில் கருப்பாக
கடைசி சோக நாட்டியம் டியவனுக்காக
பாடுகிறேன். ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இன்றிரவு வேடனின் வயிறு நிறையும்.
வானத்தை நோக்கி எம்பும் தீப்பொறிப்போல
என் குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கும்.
சிறகசைக்கும் பற்வைகள் போல
குன்றுகள் மீது ஓடும் மழை
நீரோடை போல மகிழ்ச்சியாக
என் தமையனின் கண்ணீரில் நானிருக்கிறேன்.
ஐயோ! தமையனே!
விரிந்த பரந்த நிலத்தில் நடை பயில
தனிமையான வலிமையான மலைகள்
இந்நாட்டை ளுகின்றன.


தலைப்பிள்ளைகள்
ஜாக் டேவிச் [Jack Davis]
தமிழாக்கம் டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்

என் தலைப்பிள்ளைகள் எங்கே! பெருமூச்சுடன் கேட்டது அந்தப் பழுப்பு பூமி. வெகு நாட்களுக்கு முன் என் கருப்பையிலிருந்து அவர்கள்

வந்தனர். என் தூசிலிருந்து உருவாக்கப்பட்டனர்- ஏன்? ஏன் அவர்கள் அழுகிறார்கள்? அந்த ஆன்மாக்களின் ஒலிகள் ஏன் மயங்கிக் கிடக்கின்றன?

அவர்கள் சிரிப்பொலியைக் கேட்க என் காதுகளைத் தீட்டிக்கொள்கிறேன். நான் கொடுத்த நீதிகளும் கதைகளும் எங்கே?
என் இளைய பிறப்புக்களே! என்னவாயிற்று சொல்லுங்கள்?
குகைகளில் அவர்களது ஆவிகளே வாழ்கின்றன.

மெளனம். - நீங்கள் பதில் சொல்லக் கூசுகின்றீர்கள்.
முகத்திலறைந்த அறை போல ஒரு கேள்வி உள்ளது.
என் கறுத்த பெருமைமிக்க இனம் – மடிந்து புறக்கணிக்கப்பட்டு இறந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அங்கே பதிலும் இருக்கிறது.

[ஆஸ்திரேலிய பூர்வீகக் கவிஞர்கள் மூவரின் கவிதைகளைப் 'பதிவுகள்' இதழிற்காகத் தமிழாக்கம் செய்து தந்திருக்கின்றார் டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்.]

பதிவுகள்: யூன் 2007 இதழ் 90 -மாத இதழ்


கனடா நாட்டு பழங்குடியின கவிதைகள்!

- தமிழ் மொழியாக்கம்: முனைவர் வை பாரதி ஹரிசங்கர்
(இணைப் பேராசிரியர், ஆங்கிலத்துறை தொலைதூரக் கல்வி நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம், சென்னை, இந்தியா) -

1

Someone
R.Z. Nobis
யாரோவொருவர்
- நோபிஸ் -

என்னை சுற்றிலும் பார்க்கும் போது
இதயம் கனக்கிறது
என் மக்களுக்கும் எனக்கும்
என்ன நடக்கிறது?
எண்ணங்கள் வெளிப்பட்டு மெதுவாக
தலைக்கேறுவதை உணர்கிறேன்
துயரம், குழப்பம்
இறந்துவிட்டவரைப்பற்றிய
தொலைந்துவிட்ட உணர்வுகள் --

என்னை பற்றிய கேள்விகள் --
நம் அனைவருக்கும் என்னவாயிற்று?
ஒரு காலத்தில் தலை நிமிர்ந்து நின்றோமே
நமக்கு கவலையில்லையா?
“எனக்கு அக்கறை உண்டு“ வருகிறது ஒரு குரல்
என் எண்ணங்களின் ஆழத்திலிருந்து
“நான் என்றென்றும் கரிசனப்படுவேன்
நான் இறக்கும் மட்டும் கூட
நான் ஒருவன் மட்டுமே
அக்கறையுள்ளவனா? சொல்லுங்கள்!
நான் தனியல்ல என்று தயவுசெய்து
யாராவது சொல்லுங்களேன்.“


2

Sunset at Portage (from the bus depot)
- George Kenny -

போர்டேஜில் ஓர் அஸ்தமனம்
( பேருந்து நிலையத்திலிருந்து)
- ஜார்ஜ் கென்னி

வின்னிபெக்கின் சூரியன் இறக்கிறது
கடைசியாக

மான்ட்ரியல் வங்கியின்

அந்த நீல சின்னத்தில்

பளிச்சிடும் பாஸ்பரஸ் நியான் விளக்குகள்
மனிதனின் படைப்பு

மிஞ்சுகிறது

கடவுளின் தொழிற்நுட்பத்தை.

3

They Say We Do Not Show Our Feelings
Chief Dan George

நாம் நமது உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை
என அவர்கள் கூறுகின்றனர்
பழங்குடியினத் தலைவர் டான் ஜார்ஜ்

நாம் நமது உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை
என அவர்கள் கூறுகின்றனர்
இது அவ்வாறல்ல
எல்லாம் அகத்தினுள்
இதயம் உணர்வுகளின் வளமையைத் துடிக்கின்றது

முகம் பேசுவதோ
கடந்து செல்லும் வருடங்களின் மொழியைத்தான்

4

Creation
- Lee Maracle -

படைப்பு
- லீ மாரகிள்
-

எனக்கு ஒன்றும் தெரியாது
அண்ட இரகசியங்களைப்பற்றி
அதைவிட குறைவாக
படைப்பைப்பற்றி

எனக்கு தெரியும்
கால வெளியில் பின்னோக்கி
சென்றால்
மேன்மேலும் பாட்டிகள்

முன்னோக்கி சென்றால்
மேன்மேலும் பேரக்குழந்தைகள்
நான் இரு சாரார்க்கும்
கடமைப்பட்டுள்ளேன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பதிவுகள் ஏப்ரில் 2009 இதழ் 112 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R