எழுத்தாளர் தமயந்திஎழுத்தாளர் தமயந்தி சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல புகைப்படப்பிடிப்பாளரும் கூட. இதுவரை கால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் உருவாகிய மிகச்சிறந்த புகைப்படக்காரராக இவரையே நான் கருதுவேன். சிறந்த எழுத்தாளர் ஒருவர் எவ்விதம் மானுட வாழ்வை அணுகிப்படைப்புகளை அணுகுகின்றாரோ, அவ்விதமே காட்சிகளையும் அணுகும் சிறந்த புகைப்படப்பிடிப்பாளர் தமயந்தி. உயிர்த்துடிப்புடன் விளங்கும் புகைப்படங்களை மட்டுமல்ல சூழற் சீரழிவுகளையும் பார்ப்பவர்தம் உள்ளங்களைத் தைக்கும் வகையி்ல் புகைப்படங்களாக்குவதில் வல்லவர்.

'காக்கைதீவுக் கொக்கு' என்னும் தலைப்பில் அவர் பதிவு செய்திருந்த இப்புகைப்படம் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது. இது பற்றி என் எதிர்வினையினைப்பின்வருமாறு பதிவு செய்திருந்தேன்:

"நண்பரே, கல்லுண்டாய் வெளி , நவாலி மண் கும்பி, காக்கைதீவுக் கடற்கரை, அராலிப் பாலம் போன்றவற்றையும் உள்ளடக்கிய புகைப்படங்கள் இருந்தாலும் பகிர்ந்துகொள்ளவும். ஒரு காலத்தில் காலையும், மாலையும் அப்பிரதேசத்து அழகைப்பருகி மெய்ம்மறதிருந்தவன். இப்புகைப்படம் அந்நினைவுகளை மீண்டும் படம் விரிக்க வைக்கின்றன."

அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:

"நண்பா, நீங்கள் கேட்கும் இடங்களெல்லாம் முன்புபோல அல்ல. பிளாஸ்டிக் மற்றும் நச்சுக் கழிவுகளின் குப்பைத் திடல்களாக உள்ளன.
அராலி வயல்வெளிகளெல்லாம் விதைக்கப்படாத நிலங்களாக மட்டுமல்ல, பொலித்தீன் குப்பைகளால் நிறைந்து போயுள்ளன."
சுற்றுச் சூழற் சீரழிவு என்பது மிகவும் ஆபத்தானதொன்று. சமூக, அரசியற் தலைவர்கள் இவ்விடயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்துவதுடன் , மேலும் சூழல் சீரழியாதவாறு பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிக அளவில் எடுக்க வேண்டிய தருணமிது. இது சமபந்தமான தமயந்தியின் புகைப்படங்கள், காணொளிகள் மக்கள் மத்தியில் அதிகளவில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இவரது இப்புகைப்படங்கள், காணொளிகள் கலைத்துவம் மிக்கவை மட்டுமல்ல சமூதாயப்பிரக்ஞையும் மிக்கவை.
'காக்கைதீவுக் கொக்கு'
தமயந்தியின் 'காக்கைதீவுக் கொக்கு'

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R