யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லூரூடாக பருத்திதுறைக்கு போகும் வீதியில் 8கி மீ தூரத்தில் கல்வியங்காடு.கிராமம் உள்ளது ஒரு காலத்தில் கள்ளிக்காடாக் இருந்த 700 ஏக்கர் கொண்டதாக ஒருந்த இக கிராமத்தின் பெயர் , காலப் போக்கில் மருவி கல்வியன்காடு ஆயிற்று . இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். கால்நடைச் செல்வங்களாக கறவைப் பசுக்களும், ஆடுகளும் இகிரமத்தில் வளர்க்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் பரராஜசேகர மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த போது கல்வியங்காடு அம்மன்னனின் அவைப் பிரதிநிதியான சூரியமூர்த்தி தம்பிரானின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் அமைந்தது எனக் கல்வியங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது.. கல்வியங்காடு சந்தைக்கு அருகே பல வருடங்களாக பலசரக்கு கடை நடத்துபவர் இராசையா அவரின் மகன் சிவகாந்தன் (காந்தன்) 8 கி மீ தூரம் நடந்து சென்று வண்ணார்பன்னையில் உள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றான். அவ்வளவு தூரம் நடந்து சென்று கல்வி பயில அந்தக் கல்லூரியை தெரிந்து எடுக்க வேண்டிய காரணம், . காந்தனின் தாய் மாமன் சிவலிங்கம் (சிவா) அந்த கல்லூரியில் படித்து,. அதன் பின் கொழும்பு பல்கலைக் கழகம் சென்று படித்து பொறியாளரானவர்

கொழும்பில் உள்ள வோக்கர்ஸ்(Walkers) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்தார் . தன்னைப் போல் தன். மருமகனும் அக்கல்லூரியில் படித்து பொறியாளராக வரவேண்டும் என்பது அவர் விருப்பம் அதன் விளைவே காந்தன் என்ற சிவகாந்தன் மூன்று கிலோ நிறை உள்ள புத்கங்களை சுமந்து கொண்டு, வியர்வை சிந்த கல்லூரிக்கு படிக்கச் செல்வது அவனுக்கு கிடைத்த தண்டனை . கோப்பாயில் இருந்து வரும் அவனோடு படிக்கும் அவனின் இரு நண்பர்கள் சொந்தத்தில் சைக்கில் வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு போதும் காந்தனை தங்களோடு சைக்கிளில் கல்லூரிக்கு வரும்படி கேட்டதில்லை.


யாழ்ப்பாணம், ஒரு விவசாய மாவட்டம். மற்றும் ஒரு பெரிய நடுத்தர மக்கள் தொகை ஆகியவை, பாரம்பரிய சைக்கில் கலாச்சாரத்தி லிருந்து ஒரு மோட்டார் சைக்கில் கலாச்சாரத்துக்கு , மாறியுள்ளது . யாழ்ப்பாண மக்களை சோம்பேறியாக்குவதற்கு புலம்பெயர்ந்தோரரே காரணம் என ஊடகங்கள் குற்றம் சாட்டின. சில பல்கலைக்கழக மாணவர்கள் தமது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில், மோட்டார்-பைக் மூலம் தனது வளாகத்திற்கு செல்கிறார். 1983 இல் உள்நாட்டுப் போரில் வெற்றிபெறுவதற்கு முன், ஒவ்வொரு வீட்டிற்கும் அநேகமாக ராலே பிராண்ட் சைக்கிள் பின்னுக்கு கரியரும், முன்னுக்கு ஒரு பாஸ்கட்டும் இரவில் வெலிங்டன் தியேட்டரில் இரண்டாம் ஷோ போக்குவரத்துக்கு தேவையான வடிவமாக இருந்தது , ஒரு கிராமத்திற்கு சராசரியாக ஒரு மோட்டார்-பைக்கைக் கொண்டது. வடக்கில் மோதல் கணிசமான பகுதியில் சிறிய அல்லது எரிபொருள் இல்லாமல், குடியிருப்பாளர்கள் எல்லா இடங்களிலும் பயணம் செய்ய சைக்கிள்களைப் பயன்படுத்தினர். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிநோச்சிகு பலர் சைக்கிளில் பயணித்தனர். அதே நேரத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் தமது தினசரி போக்குவரத்துக்காக சைக்கிள்களையும் பயன்படுத்தினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் . பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தில் 32 கி மீ தூரத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சைக்கிளில் சென்றார். . உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ஒவ்வொரு வீட்டிலும் யாழ்ப்பாணத்தில் சராசரியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இன்று வரை யாழ்ப்பாணத்தில் சுமார் 7௦௦௦0 மோட்டார் பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 20% க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மோட்டார் பைக்கை வைத்திருக்கிறார்கள்.. முன்னதாக ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் ஒப்பிடும்போது எரிபொருள் நுகர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மக்கள் அன்றாடம் பொருளாதார ரீதியாகவும் பணக்காரர்களாகவும் பணியாற்றியுள்ளனர், அத்தியாவசியமான விடயங்களில் தமது பணத்தை செலவழித்துள்ளனர். இன்று யாழ்ப்பாண இளைஞர்கள் கனடா . அவுஸ்த்ரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் ஈழத்து புலம்பெயர்ந்தோரிடம் இருந்து சும்மா வரும் பணத்தில் வாழ்கின்றனர், மற்றும் சோம்பேறியாகி பொதை மருந்துக்கு அடிமையாகி பாலியல் வன்முறை செய்து வருகின்றனர். குற்ற செயலைப் புரிந்து விட்டு சில மாபியா குழுக்கள் விரைவில் தப்பி ஓட பெரும் உதவியாக மோட்டார் சைக்கில் இருக்கிறது என்பது பலரின் கருத்து

 

1965 ஆம் ஆண்டில் 500 ரூபாயுக்கு வாங்கிய பாவித்த ரலி சைக்கில் இராசையா குடும்பத்து சக்குப் போடு போட்டது . இராசையா அசைகடி மகன் பாவிகாதபோது சனி ஞாயிறுகளிலும் விடுதலை தினங்களிலும் யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி சந்தைகளுக்கு பொய் வர அதை பாவித்தார். தோடு மாணவி செல்லம்மாவை பின் வியை கரியரில் ஏற்றிகோடு அடிக்கடி நல்லூருகு போய் வருவார். இராசையா குடும்பத்திற்றகு ரலி சைக்கில் செய்த சேவைக்கு பிரதி உபகாரமாக அதை துடைத்து செயினுக்கு எண்ணை பஊசி புது சைக்கில் போன்ற தொற்றத்தோடு வைத்திருப்பதில் திருப்தி அடைந்தான் காந்தன். எவரும் இரவலுக்கு சைக்கிளை பாவிக்க கேட்டால் அவன் கொடுக்க மறுத்து விடுவான் டயரில் காற்று போய் விட்டால் காற்றடிக்கும் பம்பும் சைக்கிளில் இருந்தது. அல்லாவிட்டால் காற்றடிக் முருகேசு கடையில் 50 சதம் கொடுக்க வேண்டி வரும் சைகிலுக்கு எதாவது பெரிய பிரச்சனை வந்தால் கோப்பாய் - இருபாலை சந்தியில் உள்ள முருகேசுவின் சைக்கில் திருத்துவதும் வாடகைக்கு விடும் கடைக்குப் போவான் .முருகேசு சைக்கில் ரிப்பேர். பஞ்சர் ஓட்டுவது போன்றவற்றில் இருந்து வரும் வருமானத்தோடு ஒரு மணித்தியாலதுக்கு ஒரு ரூபாய் வீதம் சைக்கில் வாடகைக்கு விட்டு வருமானம அவருக்கு வந்தது . பாவித்த சைக்கில்கள் விற்கும் தரகு வேலையும் முருகேசு பார்த்தார் நல்லூர் திருவிழா காலத்தில் வாகனம் பொய் வர தடை(Barrier) போட்ட இடத்துக்கு அப்பால் சைக்கிள்கள் எடுத்து செல்ல முடியாது . அந்த இடத்துக்கு அருகே சைக்கில்கள். செருப்புகள் பாதுகாத்து கொடுக்கும் கடை ஒன்றை தன மகனின் பொறுப்பில் வைத்திருந்தார். நல்ல பிரையாசைக்காரன்

காந்தன், ரெலி தம்பிக்கு ஏதும் பரச்சனை என்றால் முருகேசுவின் கடைக்கு தம்பியை கூட்டிச் செல்வான். ரலி சைக்கிலை இரபிசையா குடும்பத்தில் ஒருவராக கருதி “ரலி தம்பி” என்று அழைத்தனர்

ஓரு நாள் காந்தன் முருகேசுவின் கடைக்கு சைக்கிளில் சென்ற பொது:

“என்ன காந்தன் சைக்கிலை புது சைக்கில் போல வைத்திருகிறீர். கவனமாக பார்க்கிறீர் போல இருக்கு எவ்வளவுக்கு வாங்கினனீர் “?

“ஓம் அண்ணை மூன்று வருசத்துக்கு பாவித்த சைக்கிலாக அப்பா 1965 இல் வாங்கித் தந்தவர் . எதோ 500 ரூபாய் என்று அப்ப சொன்னது எனக்கு நினைவு இருக்கு.”

“இப்ப சைக்கிளை விற்கிறது என்றல் சொல்லும் இரண்டு மடங்கு காசு வாங்கித் தான் . இப்ப எல்லோரும் சைக்கில் பாவிக்கிறது குறைவு”

“நான் என் ரலி தம்பியை விற்க மாட்டேன் அதைப் பற்றி கேளாதையும்”, பதில் சொல்லி விட்டு அங்கு நிற்காமல் காந்தன் போய் விட்டான்.

காந்தனின் மாமா சிவா கனடாவுக்கு புலம பெயர்ந்து பொய் சில வருடங்களுக்குப் பின் ஒரு தடவை 1990 இல் ஊருக்கு வந்த பொது காந்தன் சைக்கிலில் யாழ்ப்பாணம் பல்கலை கழகம் போய் வருவதை கண்டார் . தன் சொந்த செலவில் யமஹா அல்பா (Yamaha Alpha) மோட்டார் சைக்கிலொன்று இரண்டு இலட்சத்துக்கு இராசையா குடும்பத்துக்கு வாங்கிக் கொடுத்தார். அவர் தன மருமகன் காந்தன் தன மகள் மைதிலியை திருமணம் செய்யப் போவதுக்கு கொடுக்கும் சீதனத்தின் அட்சரமாக அந்த மோட்டார் சைக்கிலை வாங்கிக் கொடுத்தார்,

விலை மதிப்பு கூடிய மோட்டார் சைக்கில், இராசையா குடும்பத்தில் குடி புகுந்து ரலி தம்பியை புறகணிக்க வைத்தது ரலி சைக்கில் ஸ்டோர் ரூமில் கவனிப்பார் அற்று கதூசி படிந்து கிடந்தது.

சிறு வருடங்களுக்கு பின் இராசையாவும் காந்தனும் தங்களின் தேகநலத்தில் மாற்றம் ஏற்றப்ட்டதை கண்டனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அதிகமாக தாகமெடுத்தல் , அளப்பரிய பசி. சோம்பல் . பார்வை குன்றியதைக் கண்டு தம் குடும்ப் வைத்தியரிடம் இருவரும் போனார்கள் . பல பரிசோதனைகளுக்குப் பின் ஒரு நாள் டாக்டர் அவரகள் இருவரையும் அழைத்துப் பேசினார்: இராசையா.

“ இராசையா உமக்கும் உம் மகனுக்கு நீரழிவு நிலை 2 வியாதி (Diabetes Type 2) இருக்கிராதை பரிசொதனை காட்டுகிறது

“டாக்டர் இந்த வியாதி எங்கள் பர்மபரையில் இல்லையே::

"இருக்கலாம்.  உங்கள் இருவருக்கும் மோட்டார் சைக்கில் வான்கிய பின் தேகப்பியாசம் முந்திபோல் இல்லை. எடுக்கும் உணவும் மாறு பட்டிருக்கு. சோறு, மா சத்து உள்ள உணவு அதிகம் சாபிடுகிறீர்கள் போல் இருக்கு. இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நீர் சந்தைக்கும் மகன் படிப்புக்கும் எப்படி .போகிறீர்கள் ? நடந்தா அல்லது சைக்கிலிலா:

“இல்லை கனடாவில் இருக்கும் என் மச்சான் வாங்கி தந்த இரு லட்கசம் பரறுமதியான் மோட்டார் சைக்கிளில் டாக்டர்”.

“அப்போ நீங்கள் முந்தி வைத்திருந் ரலி சைக்கிலுக்கு என்ன நடந்தது

“ அதை நாங்கள் இப்போ பாவிப்பதில்லை . எங்கள் வீட்டு ஸ்டாரில் ரூயல் ஒரு மூலையில் கிடக்குது பாவிக்கிறோம்:

“அங்கு தான் உங்களுக்கு பிரச்சனை . யங்கள் இருவருக்கும் போதுமான தேகப்பியாசம் இல்லை “

“டாக்டர் மோட்டார் சைக்கிளில் சொகுசாக, விரைவில் பயணம் செய்யலாம்”

“சொகுசு வாழ்கையை வருத்தம் தேடி வரும். நீரழிவு வியாதியை பணக்காரர்களின் வியாதி என்றும் சொலவாரகள. இது காலப் போக்கில் நீரகத்தை பாதிக்கும் விவசாயிகளுக்கு இந்த வியாதி குறைவு. காரணம் அவர்கள் வியர்வை சிந்தி வேலை செய்கிறார்கள்; இப்போ வீட்டில் சைக்கில் வைத்து கொண்டு சொகுசாக மோட்டார் சைக்கில் ஓடுகிறீர்கள். அதுவும் ஒரு காரணம் உங்களுக்கு நீரழிவு வருவதுக்கு. இனி மோட்டோர் சைக்கில் பாவிக்காமல் உங்களுடலைய ரெலி சைக்கிளை பாவியுங்கள். ஒரு நாலு மைல்கள் தினமும் அந்த சைக்கிளில் ஓடுங்கள். உங்கள் வேலைக்கு சைக்கிளில் போங்கள் .தூரப் பயணத்துக்கு மோட்டார் சைக்கிலைப் பாவியுங்கள் இதை செய்து ஆறு மாதத்துக்கு பின் பின் என்னை வந்து பாருங்க” என்றார் டாக்டர்

டாக்டரிடம் இருந்து வீடு திரும்பிய இராசையாவும் காந்தனும் முதலில் செய்த காரியும் ஸ்டார் ரூமுக்குள் கவனிப்பாறற்று கிடந்த ரலி தம்பியை தூசி தட்டி பாவிப்புக்கு ஆயித்தம் செய்தார்கள். இராசையாவின் மனைவி செல்லம்மவுக்கு அவர்கள் செய்வதின் அர்த்தம் புரியவில்லை.

(யாவும் புனைவு)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.