1. புல்.

vetha_new_7.jpg - 11.42 Kbபுல்லில் படுத்து வானம் பார்
அல்லல் தீர்க்கும் பாதைக்கு ஊர்!
மெல்லென மனவுடல் களைப்பழிக்கும் இச்சை
சில்லெனக் கண்களைக் குளிர்விக்கும் பச்சை.
புல்வெளி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்.
பல் வகைப் புற்கள் நல் மருந்தாம்.
புல் பூமாதேவியின் பாதுகாப்புக் கவசம்.
உல்லாசம் சீவன்களிற்குப் புல்லில் புரள்தல்.

புல்லில் காகிதம் செய்தனர் கி.மு2400ல்.
புல்லின் அரசன் அறுகம் புல்லாம்.
அகரம் புல், அருகன் புல்லாகிய
அறுகம் புல்லில் பல இனங்களுண்டு.
ஏகப்பட்ட பெயர்கள் அருகன் புல்லிற்கு.
காகா மூலி, ஆரோக்கியப் புல்,
குழந்தைகளிற்குக் குருமருந்து, பிள்ளையார் புல்,
விஷ்ணு மூலியென்றும் சித்தர் வழங்குகிறார்.

தலைவலி, கண்ணுபாதைக்கு நற்பசுமை விருந்து.
விலையில்லை உலகிலிதற்கு வேறொரு மருந்து.
நீர் வாழ் தாவரங்களும் புல்லினமே.
தர்ப்பை, அறுகம்புல் நீரின்றி வளரும்.
தர்ப்பை இரத்த அழுத்தத்தைக் கட்டப்படுத்தும்.
தர்ப்பைக் காற்றால் தொற்றுநோய் நெருங்காது.
நீரில் அழுகும் தன்மையற்றது தர்ப்பை.
சூரியகிரகணம் இதன் வலிமையை அதிகரிக்கும்.

6-7-2015


2. வாழ்வியற் குறட்டாழிசை.

இல்லறம்.

vetha_new_7.jpg - 11.42 Kbஆணும் பெண்ணும் மனமொத்து இணைந்து(இணைக்கப்பட்டு)
வாழும் வாழ்வு இல்லறம்

‘இல்லறம்’ பெயரில் பல இணைகள்
பொல்லா வாழ்வு அமைக்கிறார்கள்.

நல்ல மனைவி(கணவன்) குழந்தை கொண்டவர்
நல்லறமாக வாழ்வைச் செலுத்தலாம்.

பெயரிற்குச் சோடியாகவும் இல்லத்தில் மிக
துயருடன் வாழ்வது இல்லறமல்ல.

கணவனும், மனைவியும் ஒத்த ஒழுக்கம்
அமைந்தவரானால் இல்லம் சிறக்கும்.

இல்லறத்தில் நல்ல குழந்தைகள் வாழ்வில்
மாபெரும் செல்வம் ஆகும்.

இல்லத்தில் பெற்றவர் முன் மாதரியானால்
பிள்ளைகள் அவ்வழி தொடர்வர்.

நற் குடும்பம் அமைப்போர் வாழ்வு
வெற்றியுடைய இல்லறம் ஆகும்.

கணவனோ, மனைவியோ கெட்ட வழி
சென்றால் இல்லறம் பாழாகும்.

நல்ல இல்லறம் தலை நிமிர்ந்து
வாழும் தகுதி தரும்.