எம் இனிய 'பதிவுகள்' வாசகர்கள், படைப்பாளிகள். அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துச்சொரிவதாக.

சின்னஞ்சிறு இலங்கைத்தீவில் இச்சித்திரைப்புத்தாண்டிலாவது இனங்களுக்கிடையில் கூடிய புரிந்துணர்வு பிறக்கட்டும். மக்களுக்கிடையில் இருக்கும் பல்வகை வேறுபாடுகளும் இல்லாதொழியட்டும். இருப்பில் அமைதியும், இன்பமும் கொழிக்கட்டும். பகை முரண்பாடுகள் நட்புரீதியில் அணுகக்கூடிய நட்பு முரண்பாடுகளாக மாறட்டும். முரண்பாடுகளுடன் இணைந்து ஆரோக்கிய வாழ்வினை , இருப்பினை அனைவரும் எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்க்க இச்சித்திரைப்புத்தாண்டு வழி வகுக்கட்டும்.

சித்திரைப் பெண்ணிவள் பதிக்கும் இன்ப
முத்திரையில் இவ்வுலகம் இலங்கட்டும்
.