விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்][விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்]
 
- இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10,2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது புதுப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் தற்போதைய தலைப்புடன் வெளியிடப்படுகிறது.அது மீண்டும் இங்கே வெளியிடப்படுவது, ஏப்ரல் 5,2009ல் ஆனந்தபுரத்தில் முடிவுற்ற தீர்க்கமான போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக. அப்போது நான் எழுதியிருந்தது, ஆனந்தபுர யுத்தம் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணோட்டத்தில் தற்போது நடைபெறும் யுத்தத்தைப் பற்றிய கணிப்பினை தீர்மானிப்பதற்கு ஏற்ற ஒரு தருணம் என்று.   - டி.பி.எஸ்.ஜெயராஜ் -

 ”அப்போது வெளி வாதிலின் தலைவனான வீரமிக்க ஹொறாசியஸ் வெளிப்படுத்தியது: “இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் மரணம் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ வந்தடையவே செய்யும். அவனது முன்னோர்களின் சாம்பலுக்கும் மற்றும் அவனது கடவுள்களின் கோவில்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் நிலையினை எதிர்கொள்வதைக் காட்டிலும் சிறப்பான ஒரு மரணத்தை எப்படி ஒருவனால் தழுவிக்கொள்ள முடியும்”: - தோமஸ் பேபிங்டோன் மக்கியுலே

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அதன் 33 வருட போராட்டத்தின் பழைய வரலாற்றில் பல பாரிய பின்னடைவுகளைச் சந்தித்த  அனுபவத்தைக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டங்களிலெல்லாம் கெட்டதே நடக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட தீர்க்கதரிசிகளின் தவறான கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கியபடி இயக்கமானது எப்போதும் இந்த அடிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு அதன் அரசியல் மற்றும் இராணுவப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்திருக்கிறது. இருந்தபோதிலும் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரதேசத்தை சேர்ந்த ஆனந்தபுரத்தில் ,ஏப்ரல் முதல் வாரத்தில் அது அடைந்திருக்கும் தோல்வியானது அதன் தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டிலுமே வித்தியாசமாகத் தெரிகிறது.

தற்போதைய போர் செல்லும் முக்கியமான தருணத்தில் மிகத் தெளிவாக சொல்லக்கூடியது புலிகள், மிகச் சிறப்பாகச் சண்டையிடக்கூடிய  தளபதிகளின் பரந்த அணிவரிசையையும், அதேபோல பெரும் எண்ணிக்கையிலான போராளிகளையும் ஒரு ஒற்றைப் போரில் இழந்திருக்கிறார்கள் என்று.

விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்]

625க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ போராளிகளின் இறந்த உடல்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, இறந்தவர்களை அடையாளம் காண்பதில் ஒரு விசேட இராணுவப்; புலனாய்வுப் பிரிவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். படிப்படியாக சில விபரங்கள் வெளிப்பட்டு வருகின்றன. இந்த தோல்வியையிட்டு எல்.ரீ.ரீ.ஈ உத்தியோகபூர்வ மௌனத்தைக் கடைப்பிடிப்பதோடு,அதன் பிரச்சார வலையமைப்புகள் ஊமையாகிவிட்டன, ஆனால் கெட்ட செய்திகள் மெதுவாக இருந்தாலும் உண்மையாக பரவி வருகின்றன.

ஆனந்தபுரம் சண்டையில் இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களை எல்.ரீ.ரீ.ஈ யின் முக்கியஸ்தர்கள் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று விளக்கி வருகிறார்கள். மிகவும் பிரபலமற்ற முறையில் சமயச்சடங்குகளையும் மற்றும் மரணச்சடங்குகளையும் நடத்துமாறு உறவினர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல பல்வேறு புலித்தலைவர்களும் மற்றைய புலி அங்கத்தவர்களின் நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களுக்கு தங்களைவிட்டு பிரிந்து சென்ற தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரிவித்து வருகிறார்கள்.

இறந்த புலிகளில் கேணல். தீபன் (இறந்தபின் பிரிகேடியராக பதவி உயர்த்தப்பட்டார்)அவர்களின் இழப்பு, ஒருவேளை அந்த அமைப்புக்கு ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய தனியான ஒரு இழப்பாக இருக்கும். எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் 25 வருடங்களுக்கு மேலாக நீண்ட அனுபவமுடைய மூத்த தலைவரான இவர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளையைச் சேர்ந்தவர், எல்.ரீ.ரீ.ஈயின் வடபகுதி முன்னிலையின் போராட்ட அமைப்பின் ஒட்டுமொத்த தளபதியாக கடமையாற்றினார். வேலாயுதபிள்ளை பகீரதக்குமார் என்கிற தீபன், கந்தையா பாலசேகரன் என்கிற பால்ராஜின் மறைவுக்குப் பின்னர் எல்.ரீ.ரீ.ஈயின் உண்மையான துணை இராணுவ தளபதியாகவும் இருந்தார். தீபனின் தொடர்புக்கான சங்கேதப் பெயர் “டொங்கொ பப்பா” என்பதாகும். அவர் ஒரு முன்னாள் பெண் போராளியினை மணமுடித்திருந்தார், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 

இறந்த புலிகளில் கேணல். தீபன் (இறந்தபின் பிரிகேடியராக பதவி உயர்த்தப்பட்டார்)அவர்களின் இழப்பு, ஒருவேளை அந்த அமைப்புக்கு ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய தனியான ஒரு இழப்பாக இருக்கும். எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் 25 வருடங்களுக்கு மேலாக நீண்ட அனுபவமுடைய மூத்த தலைவரான இவர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளையைச் சேர்ந்தவர்,

தீபனுடன் சேர்த்து, பெண்போராளிகளின் உயர்மட்ட தளபதிகள் நால்வரும்கூட இதில் கொல்லப்பட்டார்கள். மாலதி படையணியைச் சேர்ந்த விசேட தளபதி விதுஷா. மற்றும் அவரது துணைத் தளபதியும், மாலதி படையணியின் தளபதியுமான கமலினி, சோதியா படையணியின் விசேட தளபதி, துர்கா மற்றும் அவரது துணைத் தளபதியும், சோதியா படையணியின் தளபதியுமான மோகனா ஆகியோரே கொல்லப்பட்ட அந்த நாலு உயர்மட்ட தளபதிகள்.

ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி பெண்கள் பிரிவு அரசியல் பொறுப்பாளர் தமிழினியும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கொல்லப்பட்ட ஏனைய மூத்த புலித் தலைவர்களில், விசேட தளபதியும்,மற்றும் ஜெயந்தன் காலாட்படையணியின் தளபதியுமான கீர்த்தி மற்றும் நாகேஸ் ஆகியோரும் அடங்குவர். ஜெயந்தன் படையணியானது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த புலிப் போராளிகளால் உருவாக்கப்பட்டதாகும்.

மாணிக்கப்போடி மகேஸ்வரன் என்கிற கீர்த்தியின் சொந்த இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசடித்தீவு ஆகும், அவர் முன்பு புலிகளின் கிழக்கு மாகாண புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.செல்வரட்னம் சுந்தரம் என்கிற நாகேஸின் சொந்த இடம் பெரியபோரைதீவு, முன்னர் அவர் மாவட்ட இராணுவத் தளபதியாக கடமையாற்றியிருந்தார். இவர்கள் இருவருமே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் விசுவாசிகளாக இருந்தனர், மற்றும் வினாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா வடக்கின் மேலாதிக்கத்தை காரணங்காட்டி தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது, மண்ணின் மைந்தர்களாக இருந்தபோதும் கருணாவுக்கு எதிராக போராட இவர்கள் தயங்கவில்லை.

விடுதலை மற்றும் அமுதன் என்று அறியப்பட்ட கடாபியின் மரணம் மற்றொரு மாபெரும் இழப்பாகும். வடமராட்சிப் பகுதியின் வதிரியிலுள்ள கொட்டாரவத்தையைச் சேர்ந்த இவர் ஒரு சமயம் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராகவும் கடமையாற்றியிருந்தார். இந்தியா – லங்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்பு சுதுமலையில் பிரபாகரன் ஆற்றிய பிரபலமான சொற்பொழிவின்போது, தலைவருக்கு பின்னால் நின்ற இரண்டு மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் கடாபி.

விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்

பின்னர் கடாபி இம்ரான் - பாண்டியன் படையணியின் தளபதியானார். ஒரு சமயம் அவர் ராக்கெட்டில் இணைக்கப்பட்ட எறிகுண்டு(ஆர்.பி.ஜி) பிரிவிற்கு பொறுப்பாகவும் இருந்தார். இந்திய அரசாங்கத்தினால் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்குவதற்கு பயிற்சி வழங்கப்பட்ட பத்து அங்கத்தவர்களைக் கொண்ட படையணியில் கடாபியும் ஒருவர். பின்னர் கடந்த நூற்றாண்டின் 90 களில் எல்.ரீ.ரீ.ஈ சில சாம் - 7 ஏவுகணைகளைப் பெற்றுக் கொண்டபோது கடாபி அவைகளைச் சுடும் நிபுணராக மாறினார். ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சொந்தமான பல விமானங்களை தனது தோளில் சுமந்து சுடும் ஏறிகணைகளால் கடாபி சுட்டு வீழ்த்தியிருக்கிறார். அவர் ஒரு ஆயுத நிபுணரும் கூட மற்றும் ஐரோப்பாவில் விசேட பயிற்சி பெறுவதில் சில மாதங்களை செலவிட்டும் உள்ளார்.சமீபத்தில் புலிகளின் பயிற்சிப் பள்ளியில் விசேட படைகளுக்கு பயிற்சி வழங்குவதற்கு பொறுப்பாகவும் கடாபி கடமையாற்றியுள்ளார். எல்.ரீ.ரீ.ஈயின் தீரமிக்க உயர்மட்ட சிறப்பு படைப்பிரிவிற்கு, பின்னர் முன்னாள் புலித் தலைவரான ஹரிச்சந்திரன் என்கிற ராதாவின் பெயர் சூட்டப்பட்டது.இந்த சிறப்பு படைப்பிரிவினை தலைமையேற்று வழிநடத்தியவர் சிலம்பரசன். அவரும் கொல்லப்பட்டார்.

ராதா படையணியின் துணைத் தளபதி அன்பு.அவர் தீவிரமான காயங்களுக்கு ஆளாகி உயிரோடு பிடிபட்டார். அதேபோலவே பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவின் தலைவர் அஸ்மியும்  மோசமாகக் காயமடைந்ததால் உயிரோடு பிடிக்கப்பட்டார். இந்த இருவருடைய விதியும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.கிட்டு எறிகணைப் பிரிவின் தலைவர் மணிவண்ணன், மற்றும் குட்டி சிறீ மோட்டார் பிரிவின் தலைவர் கோபால் ஆகியோரும் கொல்லப்பட்டனர். எஸ்பி.தமிழ்செல்வனின் கீழ் நிருவாக உத்தியோகத்தராகவும் மற்றும் துணை அரசியல் பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்த எஸ்.தங்கன் என்பவரும் உயிருடன் இல்லை என்று உறுதிப்படுத்தப் படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் தொலைக்காட்சியான நிதர்சனத்துக்கு பொறுப்பான சேரலாதனும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

கொல்லப்பட்ட இதர மூத்த புலித் தலைவர்களில், அடையாளம் காணப்பட்டவர்கள், ரூபன், பஞ்சன், நேரு, அன்ரன், மாங்குயில், அமுதா, இனியவன், ஆதித்யன், மற்றும் சித்ராங்கன் ஆகியோர்களாகும். ஒரு மூத்த கடற்புலியான மகிந்தன் என்பவரும் கொல்லப்பட்டார்.

இந்த மூத்த புலித் தலைவர்கள் ஏப்ரல் முதல் வாரத்திலேயே கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்களின் சாவுக்கு காரணமான இராணுவப் போராட்டம் மார்ச் 30 ந்திகதி ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இரண்டு மூத்த புலித் தலைவர்கள் மார்ச் 31ல் கொல்லப்பட்டனர். சாள்ஸ் அன்ரனி காலாட் படையணியின் கோபித், மற்றும் சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைவரும் விசேட தளபதியுமான அமுதாப் ஆகியோரோ அந்த இருவரும். ஒரு ஒற்றைப் போரில் எப்படி இவ்வளவு உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், ஏன் இவ்வளவு உயர்மட்டத் தலைவர்களும் ஒரே இடத்தில் அடைபட்டார்கள், என பலவிதமான அதிர்ச்சி கலந்த குழப்பம் நிலவுகிறது. என்ன நடந்தது என்பதை விளங்கிக்கொள்ள முந்தைய நிகழ்வுகளைப் பற்றிய சுருக்கமான ஒரு மீள் - சுழற்சி அவசியமாகிறது.

கடந்துபோன சமீபத்தைய நாட்களில் எல்.ரீ.ரீ.ஈ ஒரு தீவிரமான இராணுவப் பின்னடைவினால் பாதிக்கப்பட்டிருந்தது. அது இராணுவத்தினர் முன்னோக்கி நகர்வதும் மற்றும் புலிகள் பின்வாங்கிச் செல்லுவதுமான ஒரு நிகழ்வாக இருந்தது, ஏனெனில் பாதுகாப்பு படையினர் எல்.ரீ.ரீ.ஈயைக் காட்டிலும் ஆட்பலம், சுடுகலன் சக்தி,வான்படை சக்தி, மற்றும் ஆயுதபலம் என்பனவற்றில் அளவுக்கு அதிகமான உயர்ச்சியை கொண்டிருக்கிறார்கள்.

இராணுவத் தேர் இடைவிடாது முன்னோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது, மற்றும் புலிகள் தற்சமயம்,ஏ -35 நெடுஞ்சாலை (பரந்தன் -  முல்லைத்தீவு வீதி)க்கிடையில் ஒருபக்கம் நந்திக்கடல் மற்றும் சாலை கடலேரிகளும் மறுபக்கத்தில் இந்துசமுத்திரத்துக்கும் இடைப்பட்ட கரையோரமாகவுள்ள சிறிய பட்டி போன்ற பிரதேசத்துக்குள் அடைபட்டுள்ளார்கள்.

இராணுவத்தின் ஐந்து படையணிகள் மற்றும் விசேட படையணிகள் என 50,000க்கும் மேற்பட்ட படைவீரர்கள் முற்றுகையிட்டுள்ளார்கள். இந்த சுற்றிவளைப்பு வியூகத்தை உடைத்து படையினரை பின்னுக்குத் தளளும் துணிச்சலான முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். மார்ச் மாதக் கடைசியில் மூத்த தளபதிகள் சொர்ணம் மற்றும் லோறன்ஸ் ஆகியோர் தலைமையில் எதிர் தாக்குதல் நடத்தியபோது சிறியளவு வெற்றியினை எல்.ரீ.ரீ.ஈ பதிவு செய்திருந்தது. இராணுவத்தினரை அவர்களின் முன்னணி பாதுகாப்பு நிலையிலிருந்து 600 – 700 மீற்றர் வரை எல்.ரீ.ரீ.ஈ பின்னுக்குத் தள்ளியிருந்ததுடன் வடக்;குப் பக்கமாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றிருந்தனர்.

எனினும் இராணுவத்தினர் அணிதிரண்டு வந்து திரும்பத் தாக்கினர். அவர்கள் புலிகளை துரத்தியடித்து ஒருவாறு தங்களின் பழைய நிலைகளை திரும்பக் கைப்பற்றினார்கள். சொhணம் மற்றும் லோறன்ஸ் ஆகிய இருவருமே காயத்துக்குள்ளானார்கள். மேலும் பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியும் அவரது முதுகிலும் மற்றும் தோளிலும் சிறு சிறு காயங்களுக்குள்ளானார். இந்தப் பின்னடைவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர் தாக்குதலை இராணுவத்தின்மீது தொடுக்க எல்.ரீ.ரீ.ஈ திட்டம் தீட்டியது. பாதுகாப்பு படைகளை தடைப்படுத்தி பாரிய அடி கிடைக்கும்படி கவனமாக திட்டமிட்ட நடவடிக்கையை மேற்கொள்வதே அந்த திட்டம்.

வெளிப்படையாக புலித்தலைவர்கள் ஆனந்தபுரத்தை மையமாகக் கொண்டு புதுக்குடியிருப்பு -இரணப்பாலை – புதுமாத்தளன் வீதியில் ஆயுதப் படைகளுக்கு எதிராக பாரிய எதிர் தாக்குதலை மேற்கொள்வதற்காக சுறுசுறுப்பாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். இரணப்பாலைக்கான வீதி புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஏ – 35 நெடுஞ்சாலை மேலாக கிழக்கி நோக்கிச் செல்கிறது. மற்றொரு வீதி, இரணப்பாலை கிழக்கிலிருந்து ஆரம்பித்து புது மாத்தளனை நோக்கி கடற்கரையோரமாகச் செல்கிறது. இந்த வீதியில் பச்சைபுல்மோட்டையில் ஒரு சிறிய சந்தி உள்ளது, அங்கிருந்து ஒரு சிறிய வீதி பழம் மாத்தளனை நோக்கிச் செல்கிறது.

ஆனந்தபுரம் மற்றும் இரணப்பாலை ஆகியவை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்தவை, மற்றைய பிரதேசங்கள் காரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்தவை,ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிப் போராளிகள் ஆனந்தபுரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிட்ட எதிர் தாக்குதலை நல்ல முறையில் அணுகுவதற்காக தயார் படுத்தப்படலானார்கள். புதுக்குடியிருப்பு –  இரணப்பாலை – புதுமாத்தளன் வீதியின் உள்ளேயும் அதனைச் சுற்றியுமுள்ள பகுதிகளின் பாதுகாப்பு சாள்ஸ் அன்ரனி காலாட் படையினரின் கைகளிலேயே இருந்தது. என்ன நடந்தது என்றால் பிரிகேடியர்.சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழுள்ள 58வது படையணியும்,ஜெனரல். கமால் குணரத்னவின் தலைமையின் கீழுள்ள 53வது படைப்பிரிவும்,கேணல்.ரவிப்பிரிய வழிநடத்தும் பணிப்படை 8 வது பிரிவும் மார்ச் 30ல் ஒரு வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையை நடத்தினார்கள்,அது விரைவான பலனை அறுவடை செய்தது.

58 வது படையணி புதுக்குடியிருப்பு வடக்கிலிருந்து, தென்கிழக்கு மூலம் தெற்குப் பக்கத்துக்கும்,53வது மற்றும் 8வது படையணிகள் புதுக்குடியிருப்பு தெற்கிலிருந்து வட கிழக்கு மூலம் வடக்குப் பக்கத்தக்கும் விரைந்து முன்னேறி புதுக்குடியிருப்பு வீதி வழியாக பச்சைப் புல்மோட்டை சந்தியில் எல்.ரீ.ரீ.ஈயின் நிலைகளுக்குப் பின்புறமாக ஒன்றிணைந்தன. பச்சைப் புல்மோட்டையில் மிகப் பெரிய போர் மூண்டது,அங்கு புலிகளின் தடைத் தாக்குதல் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் விசேட தளபதி கோபித்தினதும்,மற்றம் தளபதி அமுதாப்பினதும் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது,அதில் அவர்கள் இருவருமே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


2.

விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்]இந்தச் சம்பவம் மூலமாக முன்னிலைப் படுத்தப்பட்ட ஆனந்தபுரத் தோல்வி, எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு ஒரு பாரிய இழப்பு என்பதை நிரூபித்தது. இந்த வீரமான போராளிகளான கோபித் மற்றும் அமுதாப் என்பவர்களது இழப்பு,அவர்களது தொண்டர்களிடத்தில் சோர்வடையும் நம்பிக்கையற்ற விளைவை ஏற்படுத்தியது. இந்த மன உறுதி தளர்வடைந்தது, புலிகளின் தற்காப்பு அரண்கள் பலவீனமாவதற்கான காரணமாக இருக்கலாம்,அதன் விளைவாக ஆயுதப் படைகள் விரைவாக அதனை உடைத்துக் கொண்டு,ஒன்றிணைவதற்கும்,சுற்றி வளைப்பதற்கும் வழியமைத்தது. பாரிய தாக்குதலுக்கு ஆயத்தமாக தங்களை தயார் படுத்திக்கொண்டிருந்த ஆனந்தபுரத்து புலிவீரர்கள் எதிர்பாராதவிதமாக திடீரென நிலத்தில்; தனிமைப் படுத்தப்பட்டார்கள். உயர்மட்ட புலித் தலைவர்கள் ஆனந்தபுரத்தில் தாங்கள் தனித்து விடப்பட்தை உணர்ந்தார்கள், மற்றும் பிரபாகரன்கூட அந்த நேரத்தில அங்கு இருந்திருக்கலாம் என்று சந்தேகம் நிலவியது. இராணுவம் வேகமாக நகர்ந்து புலிகளின் நிலைகளை சுற்றி வளைத்துக் கொண்டது. ஒரு முற்றுகைக்கான முன்னேற்றம் அதில் இருந்தது.பிரபாகரன் அங்கிருக்கவில்லை, மார்ச் 26 ந்திகதியே அவர் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். ஆனால் ஏனைய முக்கிய புலிகள் மாட்டிக் கொண்டனர்.

கஜபாகு படையணியின் 4வது, 6வது, 8வது, 12வது, 14வது, மற்றும் 20வது பிரிவுகளும்,5வது விஜயபாகு, 9வது கெமுனு கண்காணிப்பு பிரிவுகளும்,ஸ்ரீலங்கா இலகு படைப்பிரிவின் 11வது மற்றும் 20வது பிரிவுகளும்,விசேட படையணி 1ம் மற்றும் 2 கொமாண்டோ படைப் பிரிவுகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன .இதேவேளை புலிகளின் அவசர வழங்கல்களுக்கான பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த அம்பலவன் பொக்கணையிலிருந்து, பச்சைப் புல்மோட்டைக்கு வரும் ஒரு ஒற்றையடிப்பாதையும் இதனால் தடைப்பட்டது. இதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலி அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்கள், பிரதானமாக தென்னந் தோட்டங்களும் பனை மரங்களும் நிறைந்த இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் சுற்றி வளைக்கப்பட்டு அடைபட்டனர்.இந்த முற்றுகையை உடைக்க அவசரமான ஒன்றாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் தனது தோழர்களுக்கு உதவுவதற்காக ஆயுதங்களுடன் கடல் வழியாக ஒரு குழுவை அனுப்பினார். வலைஞர் மடத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த இந்தப் படகுகள் வரும் வழி எங்கும் சண்டையிட்டபடி பட்டியடிக் கடற்கரைக்கு அருகே கரையிறங்க எண்ணியிருந்தது.

கடற்படையினர் தங்கள் சிறு கப்பல் தொகுதியைப் பயன்படுத்தி கடும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த படியினால் படகுகளை கரையிறங்க அனுமதிக்கவில்லை,அதனால் இது நடைமுறைச் சாத்தியமாகவில்லை, ஏற்கனவே காயமடைந்திருந்த லோறன்ஸின் தலைமையில் புலிகள் சுமார் 120 வரையான போராளிகளை வலுப்படுத்துவதற்காக மேலும் அனுப்பினார்கள். மிகவும் கடுமையான நுண்ணிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர், இரண்டு பேரூந்துகளையும் மற்றும் ஒரு பார ஊர்;தியையும் அழித்தொழித்தனர்.  இந்த மூன்று வாகனங்களில் வந்தவர்களில் அநேகமாக எல்லோருமே கொல்லப்பட்டதுடன்,வாகனங்கள் கிட்டத்தட்ட எரி சாம்பல் போலாயின.உயிர்தப்பிய ஒரு சிலர் வாகன அணியில் எஞ்சியிருந்த இரண்டு வாகனங்களில் வந்தவர்களுடன் சேர்ந்து தப்பியோடினார்கள். லோறன்சும் பத்திரமாக திரும்பினார்.

இறுதியாக ஏப்ரல் 3ல்  கேணல் பானுவின் தலைமையில் கணிசமான தொகையிலான போராளிகள் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவி பாதுகாப்பாகத் தப்பினார்கள். இந்த முயற்சியில் பானுவும் காயமடைந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் துணை இராணுவத் தளபதியாக கடமையாற்றிய தீபனுக்கும்,பானுவுடன் சேர்ந்து தப்பிச் செல்வதற்கான ஒரு வாய்ப்புக் கிட்டியது.ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தினங்களிலும் தீபன் இரண்டு தடவை காயமடைந்தார்.

தீபனுடன் நீண்ட காலமாக பழகியுள்ள பானு தன்னோடு தீபனையும் தூக்கிச் செல்ல விரும்பினார்.முன்னிலைகளில் தீரமுடன் போராடி துணிச்சலான போராளி எனப் பெயர் பெற்றிருந்த தீபன் அதற்கு மறுத்துவிட்டார்.தன்னுடைய சக போராளிகளை தனித்துவிடவோ அல்லது கைவிடவோ தன்னால் முடியாது என்று அவர் கூறிவிட்டார்.” நான் வெளியே வருவதானால் என்னுடைய தொண்டர்களுடன்தான் வெளியே வருவேன் இல்லாவிட்டால் அவர்களுடனேயே செத்து மடிவேன்” என்று அவர் பானுவிடம் தெரிவித்ததோடு.பின்னர் பொட்டு அம்மானுக்கும் அறிவித்தார்.

இந்த செய்தியை இடைமறித்துக்கேட்ட இராணுவத்தினர், தீபன் தன்னுடைய போராளிகள்மீது கொண்டுள்ள விசுவாசத்தையும், அவர்களுக்காக உயிர் விடவும் தயாராகவுள்ள விருப்பத்தையும் எண்ணி ஆச்சரியமடைந்தார்கள். தீபனின் நடத்தை, இராணுவத்தின் உயர் படையணியினரிடையே உள்ள அதிகாரிகள் பலரினதும் பாராட்டுக்கு இலக்கானது. புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானுக்கும் பெண் புலித் தலைவர் விதுஷாவுக்கும் இடையே நடைபெற்ற மற்றொரு உரையாடலை இடைமறித்துக் கேட்டபோது, அவள் அவசரமாக உணவு விநியோகத்தையும் படை உதவியையும் கோரிப் புலம்புவதை கேட்க முடிந்தது. மிகவும் விரக்தியுற்ற நிலையிலிருந்த பொட்டு,கிட்டத்தட்ட அழுகை வெடிக்கும் குரலில் தனது அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போய் விட்டன என்றும் தங்களால் இந்த தடையைத் தாண்டி ஊடுருவ முடியவில்லை என்றும் சொல்லியிருந்தார்.

முற்றுகைக்கு உட்பட்டிருந்த புலிகளின் தலையெழுத்து சுவரின் மேலெழுதியதுபோல மரணத்தை விடாப்பிடியாக உறுதிப்படுத்தியது. தீபன் தன்னுடைய அங்கத்தவர்களுக்காக தன்னையே தியாகம் செய்திருந்த போதிலும், பானுவுடன் தப்பியவர்களைத் தவிர எஞ்சியிருந்த தீபனின் முற்று முழுதான கட்டளைக்கு உட்பட்டிருந்த புலிகள் அவர்களைப்போல அதிருஷ்டம் செய்திருக்கவில்லை. ஆபத்தான சூழ்நிலை இருந்தபோதிலும், தீபன் வழி நடத்திய புலிகள் மூன்று நாள் முற்றுகையையும் தொடர்ந்து தாக்குப் பிடித்து வந்தனர். புலிகள் உணவு, நீர், மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவித்தனர்.இருந்தபோதிலும் முற்றுகைக்கு உட்பட்டிருந்த புலிகள் தளர்ந்து விடவில்லை.

புலிகளை சரணடையச் சொல்லி ஒலிபெருக்கிகள் மூலம் தமிழில் வேண்டுகோள்கள் விடப்பட்டன.ஆனால் பெரும்பான்மையான புலிகள் சரணடைய விடுத்த அழைப்புகளை கவனத்தில் கொள்ளவேயில்லை. பல்வேறு சமயங்களிலும் சிறு குழுக்களாக 116 புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். ஆனால் மற்றவர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் துணிச்சலான மரபுப்படி அளவுகடந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலும் முழங்காலில் மண்டியிட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும், தங்கள் கால்களில் நின்று சாவதே மேல் என்ற எண்ணத்துடன் எதிர்த்துப் போரிட்டனர்.ஏப்ரல் 3ம் திகதி நள்ளிரவுடன் போராட்டத்தின் தன்மை மாற்றமடைந்தது. விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் பாரிய வான்வழி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களும் இடம் பெற்றன. ஏப்ரல் 4ந்திகதி முழுவதும் கிட்டத்தட்ட 30,000 க்கும் மேற்பட்ட எறிகணைகள் ஏவப்பட்டதாகத் தெரிகிறது.

ஏப்ரல் 5 ந்திகதி ஞ}யிறுடன் இவை அனைத்தும் முடிவடைந்ததுடன், இராணுவத்தினர் படிப்படியாக எல்.ரீ.ரீ.ஈயினரின் உடல்களைக் கண்டெடுத்து அவற்றை அடையாளம் கண்டு வரலாயினர். திங்கட்கிழமைக்குள் சுமார் 525 உடல்களைக் கண்டெடுத்ததுடன் அவற்றில் கிட்டத்தட்ட 60 உடலகள் அடையாளம் காணப்பட்டன. அநேகமான புலிகள் சயனைட் குப்பிகளைக் கடித்து அதன் உள்ளடக்கத்தை விழுங்கியது மூலம் உயிரிழந்திருந்தனர்.

திங்கட்கிழமையளவில் மேலும் 100 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் சுமார் 60 உடலகள் உப்பிய நிலையில் வயல் ஒன்றில் கிடந்து கண்டெடுக்கப் பட்டிருந்தன. மற்றைய 40 உடல்களும் போராளிகள் மறைவிடம் தேடி ஒளிந்திருந்த இரண்டு சிறிய கட்டிடங்களுக்கு உள்ளிருந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டிருந்தன. குறைந்தது 18 – 20 காயமடைந்த போராளிகள் உயிரோடு பிடிபட்டனர். அவர்களில் சிலர் உயர்மட்ட வரிசையில் உள்ள புலிகள் ஆவர். தற்காலிக குழியொன்றில் இலை தழைகளால் தங்களை மறைத்துக் கொண்டு ஒளிந்திருந்த மூன்று பெண்களும் கண்டு பிடிக்கப் பட்டனர்.

தீபன் மற்றும் விதுஷா உட்பட இறந்த புலிகள் சிலரது புகைப்படங்களை இராணுவம் வெளியிட்டிருந்தது. இறந்த புலிகளின் உடல்களை வரிசையாக கிடத்தி வைத்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.அந்தப் படங்களில் காட்டப்பட்டிருந்த உடல்களின் நிலை படு பயங்கரமாக இருந்தது. இது பலத்த சந்தேகத்துக்கு இட்டுச்சென்றது. புலம்பெயர் நாடுகளிலிருந்த புலிகளின் ஆதரவு சக்திகளிடமிருந்து, எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடிக்க எரி குண்டுகள், மற்றும் நச்சு வாயு உட்பட இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டன என்கிற குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கின.

எப்படியாயினும் சில இந்திய பகுப்பாய்வாளர்கள், இந்த தோல்வியானது, வெற்றிகரமான எதிர்தாக்கங்களை வலுப்படுத்தும் படையினரின் திட்டமிட்ட மரபார்ந்த உதாரணமாக தோன்றுகிறது என்கிற ஐயப்பாட்டையே இத்தகைய குற்றச்சாட்டுகள் வெளிப்படுத்துகின்றன எனத் தெரிவித்தார்கள். மற்றைய தகவலறிந்த வட்டாரங்கள்,நச்சு வாயு இல்லை என்று தீர்ப்பளித்து ஆனால் வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுகள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என ஆலோசனை வழங்கின. இராணுவ முன்னரங்குகளில் இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் படவில்லை, ஆனால் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை கடுமையாக தடைசெய்யப் பட்டுள்ளது.

முற்றுகை சமயங்களில் உள்ளே மறைந்திருக்கும் பிடிவாதமான போராளிகளை கிளறி வெளிக் கொணர்வதற்கு இவைகள் பயன்படுத்தப் படுகின்றன.பலூஜா ,ஈராக், போன்ற இடங்களில் அமெரிக்காவும், குரொஸ்னி, செச்சினியா போன்ற இடங்களில் ரஷ்யாவும், லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலியர்களும் இத்தகைய எரி குண்டுகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா கொரியா,மற்றும் வியட்னாம் போன்ற இடங்களில் இதனை பாவித்துள்ளது, அதேவேளை குர்தீஸ் மககளுக்கு எதிராக சதாம் ஹ_சைன் இதனைப் பயன்படுத்தியுள்ளார். இவைகள் இரசாயன ஆயுதங்கள் என்கிற பிரிவின் கீழ் வகைப்படுத்தப் படவில்லை.படங்களில் காட்சி தரும் கொல்லப்பட்ட புலிகளின் உடலகள் “வில் பீற்” என அழைக்கப்படும் இந்த வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டிருக்கலாம் என்பதை அடையாளப்படுத்துகின்றன.

கண்டெடுக்கப்பட்ட இந்த உடல்கள் அவசரமான முறையில் தகனம் செய்யப்பட்டதும் மேலும் சந்தேகத்தை தூண்டியது. பாதுகாப்பு நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்தது. அவசரமாக தகனம் செய்யப்பட்டதற்கு அந்த உடல்களின் பழுதடைந்த நிலையே காரணம் என அது தெரிவித்தது.

இந்த முன்னேற்றங்களைத் தவிர,மூத்த தளபதி சொர்ணம் கடும் காயங்களுக்கு ஆளானதுடன் மற்றொரு தலைவரான லோரன்சும் முந்தைய அனர்த்தங்களினால் சிறு காயங்களுக்கு உட்பட்டிருந்தார். ஆனந்தபுரத்தில் ஏற்பட்ட தோல்வியின் விளைவாக எல்.ரீ.ரீ.ஈ, மூன்று 130 மி;மீ அட்டிலெறி,ஒரு 85 மி;மீ பவுண்டர்,ஐந்து 81 மி;மீ மோர்ட்டார்,நான்கு 12.7 மி;மீ விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் முந்தைய சண்டைகளின்போது அட்டிலறியைப் போலவும் மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கி போலவும் பயன்படுத்தலாம் என நிரூபித்த மிகவும் நுண்ணிய சிறிய ஆயுதமான 30 மிமீ பல்குழல் மிதித்தியக்கும் துப்பாக்கி உட்பட அநேக ஆயுதங்களையும் இழந்தது.

இந்த பல்குழல் மிதித்தியக்கும் துப்பாக்கியில் 30 மி;மீ குழாய்கள் நான்கு பொருத்தப் பட்டிருக்கும், ஒரு பல்குழல் ராக்கட் எறிகணையைப்போல ஒரே சமயத்தில் இந்த நான்கு குழாய்கள் வழியாகச் சுட முடியும். அதன் அடிப்பாகத்தில் உள்ள மிதியை காலால் சுழற்றுவதன் மூலம் அதனை சுடுவதற்கு பயன்படுத்தலாம்.இராணுவ ஆய்வாளர்களின் கருத்துப்படி ஆனந்தபுரத்து தோல்வியானது, எல்.ரீ.ரீ.ஈ யினால் உருவாக்கப்பட்டிருந்த உறுதியான இறுதி நிலைப்பாட்டிற்கு ஒரு பாரிய திருப்பு முனைபோலவே அமைந்துள்ளது. இப்போதிருந்து கொஞ்சக் காலமாக இராணுவப் படைகள், எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து பாரிய எதிர் தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருந்தன.எதிர் நோக்கிய அந்த எதிர் தாக்குதல், எல்.ரீ.ரீ.ஈ திட்டமிட்டபடி நடந்திருந்தால் இராணுவத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கிடைத்திருக்கும்.

வஞ்சனையாக அட்டவணைகள் மாறிப்போய், எதிர்பார்த்திருந்த தாக்குதலை இராணுவம் வெற்றிகரமாக முறியடித்து விட்டது எல்.ரீ.ரீ.ஈயினால் எதிர்பார்க்கப்பட்ட  எதிர்தாக்குதலுக்கு முன்பாக இராணுவம் முந்திக்கொண்டதால்,எதிர்பார்த்த விளைவுகளுக்குப் பதிலாக சற்றும் எதிர்பார்க்காத வெற்றிகள் கிட்டியதுடன் அதனை முறியடிக்கவும் இராணுவத்தால் முடிந்தது. இந்த முயற்சியினால் எல்.ரீ.ரீ.ஈ ஒருபோதும் சரிசெய்யப் படாத அளவுக்கு, பாரியளவில் தீர்க்க முடியாத ஒரு பின்னடைவை அடைந்துள்ளது.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

http://www.thenee.com/html/090412-2.html
http://www.thenee.com/html/100412-2.html