இரபீந்திரநாத் தாகூர்க.இரமணிதரன்- புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாத முக்கிய படைப்பாளிகளில் ஓருவர் கந்தையா இரமணிதரன், ' சித்தார்த்த சேகுவேரா', 'பெயரிலி', 'திண்ணைதூங்கி'யுட்படப் பல்வேறு புனைபெயர்களில் எழுதிவரும் இவர் தனித்துவமான மொழி நடைக்குச் சொந்தக்காரர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன் பங்களிப்பை நல்கி வருபவர். அவரது 'அலைஞனின் அலைகள்: கூழ்' என்னும் வலைப்பதிவிலிருந்து இம்மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீள் பிரசுரமாகின்றன. - பதிவுகள் -



Monday, April 11, 2005

தன்கா - I
தன்கா ஐந்து.
மூலப்பெயர்ப்பு: 1997 ஜூலை,
25
திருத்திய பெயர்ப்பு: 2005 ஏப்ரில், 11

*ஒரு மொழியின் சிறப்பான கவிதை இலக்கியவடிவத்தினை அப்படியே இன்னொரு மொழியிலே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரலாமென்று தோன்றவில்லை; புதிதாக அந்த வடிவத்துக்குரிய மூல மொழியல்லாத மொழியொன்றிலே படைக்கப்படும் கவிதைகளிலே சிலவேளைகளிலே இவ்வாறான படைத்தல் சாத்தியப்படலாம்; ஆனால், மொழிபெயர்ப்பிலே மூலக்கவிதையின் கருத்து, படிமம், வடிவம், சொல் ஆகிய நான்கினையும் ஒருங்குசேர உருக்கி எடுத்துப் பெயர்ப்புறும் மொழியின் தனித்துவத்தினையும் மீறாமற் தருவதென்பது அசாத்தியமானது. அதனால், மொழிபெயர்ப்பாளர் மூலக்கவிதையின் நான்கு ஆக்கு பண்புக்கூறுகளிலே எதை முக்கியப்படுத்துகிறார் என்ற தனிப்பட்ட விருப்பிலேயே பெயர்க்கப்பட்ட கவிதை அமைகிறது. என்னைப் பொறுத்தமட்டிலே, பெயர்ப்பிலே படிமம், கருத்து, சொல், வடிவம் என்கிற இறங்குவரிசையிலேயே கவிக்கூறுகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். (இறுகிய இலக்கணப்படி பார்த்தால், ஹைகூ, தன்கா, ஸீஜோ ஆகியவற்றிலே ஓரளவுக்கு கருத்தும் படிமமும் வடிவமுங்கூட பிணைந்தபடிதான் இருக்கின்றன என்பதையும் காணவேண்டும். ஹைகூவிலே பருவகாலம் பற்றிய கவிதை என்பதும் மீறப்படக்கூடாதென்பது, அதன் சீர்களைக் குறித்த விதிகளோடு சேர்ந்து வருகின்றதென்பது ஓர் உதாரணம்; தமிழிலேயே ஹைகூ வடிவத்தினை இலக்கணப்படுத்தலாம் என்ற வாதமும் ஹைகூ மாரிநுளம்புகள்போல பரவிய காலத்திலே மரபுக்கவிதைக்காரர்களிலே சிலராலே வைக்கப்பட்ட வாதம்).

ஆக, இந்த தன்காக்கள் அந்த வகையிலேயே பெயர்க்கப்பட்டிருக்கின்றன (ஏற்கனவே, ஐப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய், பின்னால், அங்கிருந்து தமிழுக்கு வருகின்றபோது, ஏற்பட்டிருக்கக்கூடிய சிதைவுகளையும் எண்ணிக்கொள்ளவேண்டும்; மொழிபெயர்ப்பிலே இழக்கப்படுவது கவிதை - கிட்டத்தட்ட, வேறுவேறு காவி அலைகளூடாகக் கடத்தப்படும் இசையிலே சேரும் இரைச்சலோடு கேட்பார் வானொலியிலே மீளப்பெறுதல்போல)


1.
the cold walk,
silence
between us
the creek running
under ice

கூதல் நடை,
எம்மிடை
மௌனம்
பனி கீழ்
சிற்றோடை ஓடும்


2.
hazy autumn moon
the sound of chestnuts dropping
from an empty sky
I gather your belongings
into boxes for the poor

புகார்க் கூதிர் மதி
வெற்று வான் நின்று
வாதம்பருப்பு வீழ் ஒலி
ஏழைகட்காய்ப் பெட்டிகளுள்
உன் உடமை சேர்த்து நான்

3.
night cries . . .
wild geese leaving winter
bring winter -
I wear remembrance
in a necklace of shells

இரவு அழுகிறது . . .
காட்டு வாத் தகல் பனிக்காலம்
கொணர் பனிக்காலம் -
ஒரு சிப்பிக்கழுத்தணியில்
நான் பூண்பேன் நினைவுகள்


4.
watching her sweep up
November's fallen leaves
I am love shaken . . .
her body moving almost
as it did when we were young

கார்த்திகை வீழ்(த்து) இலை
கூட்டு(வாள்) அவள் நோக்கி
காதல் உலுப்பி(னோனாய்) நான் . . .
இளமைப்பருவத்தே இழைந்ததுபோல
இன்னும் அசையும் அவள்மேனி


5.
New Year's Eve -
on a ladder
a moon-faced man
washes the face
of a clock.

புத்தாண்டின் புலர்வு -
ஏணி நில்லொரு
மதிமுக மனிதன்
மணிக்கூட்டின் முகம்
கழுவுதலாம்.
# posted by -/பெயரிலி. @ 10:52 PM 5 comments
Sunday, April 10, 2005

தோட்டக்காரன்
இரபீந்திர நாத் தாகூரின் தோட்டக்காரன் எனக்குப் பிடித்ததொரு தொகுதி. அவருக்குப் புகழைத் தந்ததாகச் சொல்லப்படும் கீதாஞ்சலிகூட அந்த அளவுக்குப் பிடித்ததில்லை. என் குறை ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு 1987 இற்கும் 1992 இற்கும் இடையிலே தோட்டக்காரனிலே சில பூக்களை முழி பெயர்க்க முயற்சித்தேன்.



22

When she passed by me with quick steps, the end of her skirt
touched me.
From the unknown island of a heart came a sudden warm breath of
spring.
A flutter of a flitting touch brushed me and vanished in a
moment, like a torn flower petal blown in the breeze.
It fell upon my heart like a sigh of her body and whisper of her
heart.

விரைந்து அடியிட்டு
அவள் என்னைக் கடக்கையிலே
தொட்டுச் சென்றது அவள்
பாவாடை முனை எனையே.

இதயத்தின் முன்னறியாத் தீவிருந்து
எழுந்து வந்தது ஓர் உடனடி
வசந்தத்தின் சூடான சுவாசமிங்கு.

ஒரு தாவு தொடுகையின் சிறகடிப்பு
என்€ன உரசி, பின் மறைந்தது கணத்தே,
ஓர் உதிர்ந்த மலர் இதழ்
தென்றலில் ஊதப்பட்டது போலிங்கே.

அது தாக்கிப் போனது என் மனதை
அவள் உடலின் பெருமூச்சென,
அவள் இதய இரகசிய உச்சரிப்பென.
(தாகூரின் "தோட்டக்காரன்" -22)


47

If you would have it so, I will end my singing.
If it sets your heart aflutter, I will take away my eyes from
your face.
If it suddenly startles you in your walk, I will step aside and
take another path.
If it confuses you in your flower-weaving, I will shun your
lonely garden.
If it makes the water wanton and wild, I will not row my boat by
your bank.

அவ்வண்ணம் நீ எண்ணம் கொண்டிருப்பின்,
நிறுத்துகிறேன் நான் என் நிகழ்காலப் பாடுதலை.

அஃது உன் இதயம் படபடக்கப்
படுத்துமென்றால்,
எடுக்கிறேன் என் கண்கள் உன்
முகமிருந்து வேறெங்கோ.

அது உன் நடையில் உடன்
அதிர்ச்சியினைக் கொடுக்குமென்றால்,
அடி விலக்கி, நான் எடுப்பேன்
அதுவில்லா வேறு பாதை,

அது உன் பூமாலை பின்னுதலில்
குழப்பம் உனைப் படுத்துமென்றால்,
தவிர்க்கின்றேன் உன்
தனிமைத் தோட்டத்தை இனி நான்.

அது நீரை விளையாட்டுக்காட்டி,
வெறியோட்டிப் பார்க்குமென்றால்,
வலிக்கமாட்டேன் என் ஓடம் - இனி
உன் நதியின் கரையினிலே.
(தாகூரின் "தோட்டக்காரன்" -47)


48

Free me from the bonds of your sweetness, my love! No more of
this wine of kisses.
This mist of heavy incense stifles my heart.
Open the doors, make room for the morning light.
I am lost in you, wrapped in the folds of your caresses.
Free me from your spells, and give me back the manhood to offer
you my freed heart.

என் அன்பே,
விடுதலை செய் என்னை
இனிமையின் தளையிருந்து. - வேண்டாம்,
இனிமேலும் இந்த முத்தம்
பொதி போதை மது.

இந்த செறி நறும்புகையின்
புகார்மண்டலம் புதைக்கின்றது
ஒரு கட்டுக்குள் என் மனதை.

திறந்து விடு வாயில்களை;
காலை ஒளிக்கு
வெளி இங்கு நீ அமை.

உன்னிடத்தே தொலைந்துள்ளேன்,
கட்டுக்கட்டான உன் மென்
இன்பத் தொடுகைகளிற் சுற்றுப்பட்டு.

விடுவி எனை உன் மந்திர
உச்சாடனங்கள் விட்டு வெளி;
மீளக் கொடுத்து விடு என் ஆண்மை - உனக்கு,
நான் அர்ப்பக்க வேண்டும் என்
கட்டற்ற விடுதலை இதயம் என்பதற்காய்.
(தாகூரின் "தோட்டக்காரன்"-48)


28

Your questioning eyes are sad. They seek to know my meaning as
the moon would fathom the sea.
I have bared my life before your eyes from end to end, with
nothing hidden or held back. That is why you know me not.
If it were only a gem I could break it into a hundred pieces and
string them into a chain to put on your neck.
If it were only a flower, round and small and sweet, I could
pluck it from its stem to set it in your hair.
But it is a heart, my beloved. Where are its shores and its
bottom?
You know not the limits of this kingdom, still you are its queen.
If it were only a moment of pleasure it would flower in an easy
smile, and you could see it and read it in a moment.
If it were merely a pain it would melt in limpid tears,
reflecting its inmost secret without a word.
But it is love, my beloved.
Its pleasure and pain are boundless, and endless its wants and
wealth.
It is as near to you as your life, but you can never wholly know
it.

உன் வினாவெழுப்பும் விழிகள்
சோகத்திற் தாம் மிதக்கும்.
அவை, கடல் ஆழம் அளக்க விழை
முழுமதிபோல - என் பொருளறிய
வழி தேடும்.

உன் கண் முன்னே
ஆதி முதல் அந்தம் வரை
நான் நிர்வாணப்படுத்தி வைத்தேன்,
என் வாழ்வு எல்லாமே; எதும்
மறைத்திடாது, என்னுள்ளே
தரித்துப் பதுக்கிடாது.- அதனாற்றான்,
இன்னும் புரியவில்லை இங்கே என்னை, நீ.

அஃது ஓர் இரத்தினம் மட்டும் என்றிருந்தால்,
ஆயிரம் துண்டங்களாய் நான் உடைத்து,
கோர்த்திருப்பேன் எல்லாமே உன் கழுத்துக்காய்
ஒரு கொடிமாலையென.

அது, வட்டமாய், சிறிதாய், மதுரமாய்,
ஒரு மலர் மட்டும் என்றிருந்தால்,
தண்டிருந்து கிள்ளி எடுத்திருப்பேன் நான்
அஃது உன் கூந்தலிலே சூட்டி வைக்க.

ஆனால், அஃது என் இதயம்,
என் அன்புக்குரியவளே.
எங்கெனச் சொல்ல
அதன் கரைகளும் ஆழங்களும்?

நீ அறியாய் இவ் விராஜ்யத்தின் எல்லைகளை,
இத்தனைக்கும், அதன் வீற்றிருக்கும்
இரா நீ என்றானபோதும் இங்கே.

அது மட்டும் ஒரு சுலபப் புன்சிரிப்பில்
மலரும் நொடிநேர மகிழ்வு என்றால்,
காண முடியும் அதை நான்; கூடவே,
கண நேரத்தில் வாசித்தும் இருப்பேன்.

அது ஒரு வலி மட்டும் என்றானால்,
தான் ஒரு சொல் எடுத்துச் கூறாமலே
உள்ளகத்து கிடக்கையெல்லாம்
தெள்ளிய கண்நீ­ர்துளியில்
அள்ளிப் பிரதிபலித்து ஆங்கே
உருகிக் கரைந்திருக்கும்.

ஆனால், இது காதல்,
என் அன்புக்குரியவளே.

இதன் மகிழ்வும் வலியும்
வரம்பற்றவை;
அதன் தேவையும் செல்வமும்
முடிவற்றவை.

அது உனக்கு மிகவும் அருகானது,
உன் உயிர்போல, ஆனால்,
என்றுமே முழுதாய் அறியாய்
அதை நீ.
(தாகூரின் "தோட்டக்காரன்"-28)


62

In the dusky path of a dream I went to seek the love who was mine
in a former life.

Her house stood at the end of a desolate street.
In the evening breeze her pet peacock sat drowsing on its perch,
and the pigeons were silent in their corner.

She set her lamp down by the portal and stood before me.
She raised her large eyes to my face and mutely asked, "Are you
well, my friend?"
I tried to answer, but our language had been lost and forgotten.

I thought and thought; our names would not come to my mind.
Tears shone in her eyes. She held up her right hand to me. I
took it and stood silent.

Out lamp had flickered in the evening breeze and died.

ஒளி தளர்ந்த கனவுப்பாதையினூடே
நான் நடந்தேன், என் முன்னைய
பிறவியொன்றின் அன்பிற்குரியாளைத் தேடி.

கைவிட்ட ஒரு தெரு முடிவினிலே
கிடந்தது அவள் குடில்.

மாலை இளங்காற்றினிலே, அவள் செல்ல
மயில் அரைத்தூங்கிக் கிடந்தது அதன் கூட்டில்.
புறாக்கள் தம்மூலைகளில் மோனத்தே முடங்கியதாய்.

அவள் வாயிலிலே விளக்கு வைத்தாள்; பின்,
வந்து நின்றாள் என் முன்னே.

தன் அகன்ற விழி என் முகம் முன்னெழுப்பி
பெரு மௌனத்தே கேட்டிருந்தாள்,
"நலமா நீ உள்ளனையோ, என் நண்ப?"

பதிலிறுக்க முயற்சியுற்றேன், ஆயின்
எம் மொழிகள் தொலைந்துபோயின;
மேலும், மறக்கப்பட்டும்கூட

நான் சிந்தித்தேன்; மேலும் சிந்தித்தேன்;
எங்கள் பெயர்களோ மீண்டு
எழுதலில்லை என் மனத்தில்.

நீர்ப் பளபளப்பில் அவள் கண்கள்.
நீட்டினாள் எனக்காய் அவள் தன் வலக்கரம்.
அது எடுத்து மௌனத்தே ன்றிருந்தேன் நான்.

எம் விளக்கு ஒரு கணம்
மாலைத்தென்றலில் மினுங்கி, பின்
மடிந்து போனது.
(தாகூரின் "தோட்டக்காரன்"-62)
# posted by -/பெயரிலி. @ 12:53 PM 0 comments

Saturday, April 09, 2005


தஸ்லிமா நஸ் ரீன்தஸ்லிமா நஸ் ரீன்(Taslima Nasrin) : பங்களாதேசப் பெண்கவிஞர்; தொழிலில் மருத்துவர்; சில கருத்துமுன்வைப்புக்களால், நாடுவிட்டோடி மேற்கே ஐரோப்பாவிற் தஞ்சம் தற்போது. உலக 'PEN' விருது பெற்றவர். என் மொழிபெயர்ப்புக்கான ஆங்கிலமூலம், Carolyne Wright உடைய புத்தகம், "The Game In Reverse." இம்மொழிபெயர்ப்பில், தமிழ்ச் சீரான ஓட்டத்திற்கும் கருத்துக்குமே முன்னுரிமை கொடுத்துள்ளேன்; அவரின் கவிதை இலக்கண அமைப்புக்கல்ல. கருத்துகள் அவருடையவை; அம்பினை நோகற்க. நன்றி.

Aggression

Human nature is such
that if you sit, they'll say - "No, don't sit!"
If you stand, "What's the matter, walk!"
And if you walk, "Shame on you, sit down!"

If you so much as lie down, they'll bother you - "Get up."
If you don't lie down, no respite, "Lie down for a bit!"

I'm wasting my days getting up and sitting down.
If I'm dying right now, they speak up - "Live."
If they see my living, who knows when
they'll say - "Shame on you, die!"

In tremendous fear I secretly go on living.

காழ்ப்பாவேசம்

மனித இயற்கை அப்படியானது;
நீ அமர்ந்தால்,
அவர்கள் சொல்வார் உனக்கு -"இல்லவே இல்லை, இராதே!"
நீ நிற்பினோ, "ஏது பிரச்சனை? நட!"
நீ நடப்பின், "வெட்கமோ வெட்கம்! இரடி பெண் நீ!"

நீ சற்றோய்ந்து கிடப்போமெனில், கொடுப்பார் அலுப்பு - "எழுந்திரு."
நீ கிடக்காவிடினோ, தொந்தரவு போதலில்லை, "சும்மா கிடக்காயோ கொஞ்ச நேரம்!"

அமர்தலிலும் எழுதலிலும் வீணே கழிவதாய் என் நாட்கள்.
இறப்பு எனக்கு இப்போதெனினும், அவர்கள் பேசுவார் உரக்க, -"வாழ்ந்திரு."
என் வாழ்தல் காணில், ஆர் அறிவார் எப்போதெழும்
அவர்கள் குரலென்று -"வெட்கித் தலை குனி, இறந்து போ!"

அளவிடா அச்சத்தே வாழ்ந்திருப்பேன் இரகசியமாய்.

Mosque, Temple

Let the pavilions of religion be ground to bits,
let the bricks of temples, mosques, gurudwaras, churches
be burnt in blind fire,
and upon those heaps of destruction
let lovely flower gardens grow, spreading their fragrance,
let children's schools and study halls grow.

For the welfare of humanity, now let prayer halls
be turned into hospitals, orphanages, schools, universities,
now let prayer halls become academies of art, fine arts centers,
scientific research institutes,
now let prayer halls be turned to golden rice fields
in the radiant dawn,
open fields, rivers, restless seas.

From now on let religion's other name be humanity.

மசூதி, ஆலயம்

மதங்களின் மண்டபங்கள் மண்ணோடு மண்ணாகட்டும்,
ஆலயம், மசூதி, குருத்துவாரா, கோவில் கட்டு கற்களெல்லாம்
கனன்று போகட்டும் கண்மூடித்தனத்தீயினிலே;
அத்தனை அழிவு அடியிருந்தும்
எழும்பட்டும் அழகு மலர்த்தோட்டங்கள், பரப்பட்டும் அவை நறுமகரந்தம்,
வளரட்டும் குழந்தைக் கல்விக்கூடங்கள், கற்கை மணிமண்டபங்கள்.

மானிடத்தின் நன்மைக்காய், இன்று உருக்கொள்ளட்டும் வழிபாட்டிடமெல்லாம்
மருத்துவநிலையமாய், அனாதை அரவணைப்பிடமாய், பாடசாலையாய், பல்கலைக்கழகமாய்,
ஆகட்டும் வழிபாட்டுக்கூடமெல்லாம் கலைகளின் ஆதாரசாலைகளாய், நுண்கலை மையங்களாய்,
விஞ்ஞான ஆய்வு நிலையங்களாய்,
உருமாறட்டும் பிரார்த்தனைகூடங்கள் தங்க நெல்வயல்களாய்
ஒளிவெம்மைக் கதிரெழுப்புகாலையிலே,
வெளிக் களங்களாய், நதிகளாய், அமைதியற்ற கடல்களாய்.

இந்நேரந் தொட்டு ஆகட்டும் மதத்தின் மறுநாமம் மானிடநேயமென்று.



கவிதை முன் ஆங்கில மூல ஆசிரியர் குறிப்பொன்று:
Note: tupi = cap. The poem above is based on a true story about a woman called,Noorjahan. She was the daughter of a landless peasant in Bangladesh. Her husband divorced her and later, she remarried. The leaders in her village one fine day declared that her second marriage was against the Law. She was dragged from her house at dawn, buried up to her waist in a pit, and publicly stoned for alleged adultery. Having being humiliated and reduced to nothingness, she committed suicide by drinking insecticide.

Noorjahan

They have made Noorjahan stand in a hole in the courtyard,
there she stands, submerged to her waist with head hanging.
They're throwing stones at Noorjahan,
these stones are striking my body.

Stones are striking my head, forehead, chest and back,
they're throwing stones and laughing aloud, laughing and shouting abuse.
Noorjahan's fractured forehead pours out blood, mine also.
Noorjahan's eyes have burst, mine also.
Noorjahan's nose has been smashed, mine also.
Through Noorjahan's torn breast, her heart has been pierced, mine also.
Are these stones not striking you?

They're laughing aloud, laughing and stroking their beards,
there are tupis stuck to their heads, they too are shaking with laughter.
They're laughing and swinging their walking sticks;
from the quiver of their cruel eyes, arrows speed to pierce her body,
my body also.
Are these arrows not piercing your body?

நூர்ஜகான்

அவர்கள் நிறுத்தினர் நூர்ஜகானை முற்றத்தே துளையொன்றுள்ளே;
அங்கு அவள் நிற்கின்றாள், அவள் பளு புதைந்து தலை தொங்கியிருக்க.
அவர்கள் வீசுகின்றனர் அவள் மேலே கற்கள்;
அக் கற்கள் தாக்குகின்றன என் மேனி.

கற்கள் தாக்குகின்றன என் சிரம், முன் நெற்றி, நெஞ்சம், இன்னும் பின்புறம்,
அவர்கள் எக்காளச் சிரிப்புடன் வீசுகின்றனர் கற்கள்; சிரிப்புடன் கூடவே தூஷணையும் கத்தி.
நூர்ஜகானின் முறிவுற்ற நெற்றி வழிப் பொழியும் வெளி குருதி; என்னுடையதும் கூடவே.
நூர்ஜகான் கண்கள் வெடித்துற்றன, கூடவே என்னுடையதும்.
நூர்ஜகான் நாசி சிதைக்கப்பட்டதாய், என்னிலும் அதுபோலே.
பிய்யுண்ட நூர்ஜகான் மார்பகமூடே,
கூராய்க் கிழிப்புண்ட அவள் இதயமூடே, சேர்ந்து என்னுடையதும்
தாக்கவில்லையா இங்கு எவரையும் இக்கற்கள்?

அவர்கள் நகைக்கின்றனர் பலத்தே, நகைக்கின்றனர் கூடத் தம்தாடி உருவி விட்டு,
கூடச் சேர்ந்து அதிர்ந்தன அவர் தலை சேர் குல்லாக்கள் கூட அவர் நகைப்பில்.
அவர்கள் சிரிக்கின்றனர் சேரவே தம் நடைக்கைத்தடி சுழற்றியுங்கூட;
அவர்தம் குரூரக்கண் அம்பாறாத்தூளியிருந்து, வேகங்கொள் அம்புகள் கிழிக்க அவள் உடல்,
எனதையும் கூடத்தான்.
உங்கள் உடலேதும் கிழித்திலதோ அவ்வம்பேதும்?

'97 ஜூன், 28 11:58 மநிநே.

நன்றி: அலைஞனின் அலைகள்: கூழ் - https://kuuzh.blogspot.ca/2005/04/