மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்!

உலக மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் தலைசார்த்து வணங்குகின்றேன்.


உரத்த குரலால் உலகை முத்தமிட்டு
உலகைப் படைக்கும் பெண்ணே!
உன்வீட்டுத் தாளிப்பு வாசனையில்
அடுப்புகள் கரைந்து கொண்டபோது
உள்ளமோ சுழல்காற்றாய் இரைந்தது.
மாற்றத்தின் தத்துவத்தில்
சமத்துவம் வேண்டி நின்று
சிந்தனையில் சிங்கப்பெண்ணாகி
பூமியோ நீலநிறமாகியது!
ரத்தக் குளியலில்
சித்திரம் வரைந்த பெண்களின் எழுச்சியால்
எழுந்ததே இன்றைய பெண்கள் தினம்.

மண வாழ்க்கையோ மாயாஜாலம் காட்டுகின்றது.
தற்கால மனிதர்கள்
கற்கால மனிதர்களைவிட மகிழ்ச்சியில் இல்லைத்தான்
எண்ணற்ற விடயங்கள் பெண்மனதை மருள வைக்கிறது.
உணர்வுகளோ மரணித்துப் பிணமாகிறது
பெண்களே வழிமறிச்சான்களைக் கண்டு
வலுவிழந்து வாடாதே!
சமூக அடித்தளத்தை உன்னால்த்தான் உருவாக்க முடியும்!
பெண்ணே!
வலுவானவளே! முழக்கங்களில் இருந்து முகிழ்ந்துவா.
பெண்ணே நீ ஒரு வரம்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.