ஜெயா ஸ்ரீ

1. என்உயிர் தேடல் அப்பா

அன்பின் உருவம்
ஆனந்தம் தருபவர்.
ஆழம் காணமுடியா
அன்பைப் பொழிபவர்.

தோள் சுமந்து
தோற்காது காத்தவர்.
தன்னிலை கருதாது
தாங்கிப் பிடித்தவர்.

தன்னம்பிக்கை ஊட்டி
தயவோடு வளத்தவர்.
தளராத மனம்
தங்கமான குணம்.

என் உயிர்
தேடல் அப்பா
என்னுயுரே தந்தை
எழில் வள்ளலே.

2. நினைவுகள்

காதல் தேவதை
கலங்க விட்டாள்.
கண்ணில் கதைபேசி
காதலைச் சுரந்தாள்.

கண்பட்டதே போனாளே
காரிகையும் விலகியே.
கண்ணீர் சொரிய
கனமானது இதயம்.

பொல்லாத காதலால்
போக்கற்று அலைகிறேன்.
பெண் மனமும்
பெருமை இழந்தது.

இதயம் சுருண்டு
இன்பமும் கலைந்தது.
நினைவுகள் நெஞ்சில்
நீங்கலையே கண்மணியே.

3. இனி ஒரு பிரிவேது

உயிரின் உயிராகி
உணர்வால் ஒன்றாகி
உடலின் பரிசத்தில்
உச்சங்கள் அடைந்து
உனது அன்பில்
உறவாடித் திளைத்து
உன்னதமான காதலை
உன்னவனுக்குக் காட்டி
உளமும் கசிந்து
உறவாட நினைக்க
உழன்ற மனமும்
உருகி அதையேற்க
உறவான நீயும்
உரிமை தந்தாய்.
இனி ஒரு
பிரிவேது கண்ணே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.