காதலர்தினக் கவிதை!  




காதல் இல்லா வாழ்க்கை
களை இழந்த வாழ்க்கை
காதல் இல்லா வாழ்க்கை
கருத் திழந்த வாழ்க்கை
காதல் என்னும் நினைப்பு
களிப்பு தரும் நாளும்
காதல் என்னும் உணர்வு
களிப் பளிக்கும் மருந்து   !

மனித மனம் இணைய
மருந் தாகும் காதல்
மனித குணம் சிறக்க
வழி வகுக்கும் காதல்
மனித குலம் செழிக்க
வழி சொல்லும் காதல்
வைய வாழ்வு மலர
வழித் துணையே காதல்  !

இளமை வரும் காதல்
முதுமை வரை வளரும்
இல்ல மெலாம் ஒளிர
ஏற்ற துணை காதல்
அன்பு அறன் கருணை
அளிப்ப தென்றும் காதல்
அகில வாழ்வில் என்றும்
அருங் கொடையே காதல்   !

காதல் என்று சொன்னால்
களிப்பு அங்கே பெருகும்
காதல் என்று நினைத்தால்
கல கலப்பு குவியும்
காதல் இல்லா வாழ்க்கை
பாலை வனம் ஆகும்
காதல் அது நிறைந்தால்
வசந்தம் அங்கு வீசும்  !

காதல்  என்பது தேன்கூடு
கட்டினால் அது பேரின்பம்
வேறு எதுவும் நுழையாமல்
வேலி போடல் சிறப்பாகும்
வாழ்வில் காதல் வரமாகும்
மலரும் சோலை வனமாகும்
காலம் முழுதும் நிலையாக
வாழ்வில் மலர வேண்டிடுவோம்  !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.