அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
உலகைக் காக்கும் உழவர்கள் திருநாளில்,
உவகை ஆறு ஊற்றெடுத்துப் பெருகட்டும்.
உலகம் ஆனந்தத்தில் கூத்தாடட்டும்.
உன்மத்தம்கொண்டவர்தம் ஆட்டத்தால்
உருக்குலைந்து கிடக்கும் உலகில்
நன்மத்தம் எங்கும் நிலவட்டும்.
என்மத்தம் இதுவே!
உன்மத்தமும் இதுவாக இருக்கட்டும்.
இருப்பின்,
உன்மத்தம் நீங்கி,
நன்மத்தப் பூ மலரும்.
நானிலம் செழிக்கும்.