கண் கண்ணாடி இயற்கையை வர்ணிக்கிறது,
பின்னாடி கூடு விட்டுக் கூடு பாய்கிறது!
பார்வையில் பல இயற்கை வண்ணங்கள்,
கண்டு மகிழ்கிறது கன்னங்கள்!
சிந்தனையில் பல எண்ணங்கள்
உணர வைக்கிறது பல கோணங்கள்,
இயற்கையைக் கண்டேன்.

மனதில் கவியைச் செதுக்கினேன்!
தென்றல் காற்று உளத்தைக் குளிரச்செய்கிறது,
இயற்கைக் காட்சி சிந்தனையில் கவி எழுதவைக்கிறது!
ஒய்யாரக் கால்கள் அடர்ந்த காடுகளை வியந்து
நாற்காலியில் உருளுகின்றன.
தூரக் கடல் நீர் சுவாசத்தைச் சுவாசித்து இளைப்பாறுகிறது!
 மேகங்கள் உருவமெடுக்கின்றன தேகமாய்,
சரீரத்தை எழ வைக்கிறது வேகமாய்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.