இலண்டனில் றீற்றா பற்றிமாகரனின் 'சங்க காலத் தமிழர் வாழ்வும், கலைகளும்' நூல் வெளியீடு!அன்புடையீர்! வணக்கம்! றீற்றா பற்றிமாகரனின் சங்கத் தமிழ் நூல்களைப் படித்துச் சுவைப்பதற்கான உதவிநூல். இந்நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம் - இலண்டன் சிவன் கோயில் மண்டபம் 4A,Clarendon Rise, London SE13 5ES; - 24.04.2011 காலம் - 24.04.2011 ஞாயிறு மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை. சங்க இலக்கியத்தின் இன்றைய தேவைகள்” என்னும் கலந்துரையாடல் நூல் வெளியீட்டை அடுத்து இடம்பெறும். திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை முன்னிட்டு இந்நிகழ்வில் ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரனின் “ ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ தத்துவம் தந்த அப்பர் சுவாமிகள்”, என்னும் சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெறும்.

இதில் தாங்களும் கலந்து சிறப்பித்து கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்

விழாக்குழுவினர் தொடர்புகளுக்கு : 01865437397ஃ07877302731

தகவல்: விசாகப்பெருமாள் வசந்தன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.