அவுஸ்திரேலியா    தமிழ்  இலக்கிய   கலைச்சங்கம்: நன்றி!24-02-2014
அன்புடையீர்   வணக்கம். எமது   அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் அனுபவப்பகிர்வு  நிகழ்ச்சி  கடந்த  23  ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபொழுது  வருகைதந்து  சிறப்பித்த  சங்கத்தின்   செயற்குழு உறுப்பினர்களுக்கும்   சங்கத்தின்   உறுப்பினர்கள்   மற்றும்  அன்றைய  தினம் புதிய  உறுப்பினர்களாக  இணைந்துகொண்ட  அன்பர்களுக்கும்  நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய    திரு. முகுந்தராஜ்  திரு. சத்தியா  ஆகியோருக்கும்  மதிய உணவு  வழங்கி  உபசரித்த  செயற்குழு  உறுப்பினர்கள்  மற்றும்  திருமதி சாந்தினி  புவனேந்திரராஜா  அவர்கட்கும்  நன்கொடை  வழங்கிய  திருமதி பாலம்  இலக்ஷ்மணன்  அம்மையார்  அவர்கட்கும்  குறிப்பிட்ட அனுபவப்பகிர்வு  நிகழ்ச்சி  பற்றிய  செய்திகள்  வெளியிட்ட இணையத்தளங்கள்   மற்றும்    நேர்காணல்  கலந்துரையாடல்களை  நடத்திய வானொலி   நிகழ்ச்சி   தயாரிப்பாளர்களுக்கும்   அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை   நடத்துவதற்கு  மண்டப வசதியளித்த  பிரஸ்ட்டன்  இன்றர் கல்சரல்   நிலையத்தின்  நிருவாகத்தினருக்கும்  எமது   சங்கத்தின்    மனமார்ந்த நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பிட்ட   தமிழ்  விக்கிபீடியா  அனுபவப்பகிர்வு  பயிலரங்கு  தொடர்பான தங்கள்    கருத்துக்களை  எமது   மின்னஞ்சலுக்கு  தெரிவித்தால்   இனிவரும் காலத்தில்    நடைபெறவுள்ள   அனுபவப்பகிர்வு   நிகழ்ச்சிகளை  சங்கம் நடத்துவதற்கு   சிறந்த   ஆலோசனையாகவிருக்கும்   எனவும்  நம்புகின்றோம். மீண்டும்   அடுத்த  அனுபவப்பகிர்வு  நிகழ்ச்சியில்  சந்திப்போம்.  அதுவரையில்  தொடர்பிலிருக்கும்........

லெ.முருகபூபதி;
செயலாளர்
அவுஸ்திரேலியா    தமிழ்  இலக்கிய   கலைச்சங்கம்
04  166  25 766

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Australian Tamil Literary And Arts Society