'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவந்த சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் தொகுத்த ஈழப்போராட்டம் பற்றிய மூன்று தொகுதிகளின் நூல் வெளியீடு ஜூன் 25, 2022 அன்று 'டொராண்டோ'வில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வானது தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. அது பற்றி ரகுமான் ஜான் அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவலினை இங்கு  பகிர்ந்துகொள்கின்றோம். ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி பின்வரும் தலைப்புகளில் வெளியானது:

1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.

ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அமைப்புத்துறை, மூலோபாய தந்திரோபாயப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வுகள் தற்போதுள்ள சூழலில் தேவையானவை; முக்கியத்துவம் வாய்ந்தவை. 'வடலி' பதிப்பகத்தினர் நூல்களை நேர்த்தியுடன் , சிறப்பாக வெளியிடுவதில் வல்லவர்கள் என்பதை இவ்வட்டைப்படங்கள் மீண்டுமொருமுறை நிரூபிக்கின்றன. நிகழ்வு சிறப்பாக அமைந்திட நூலாசிரியருக்கும், பதிப்பகத்தினருக்கும் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துகள்.