கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் மற்றும் மலையக கலை கலாசாரச் சங்கம் இணைந்து நடத்தும் கலாநிதி செ. சுதர்சன், சிரேஷ்ட  ஊடவியலாளர் இக்பால் அலி ஆகியோர் பதிப்பில் முதற்பதிப்பாக வெளிவரும் மருதூர்க் கொத்தனின் "அதிமதுரம்" குறுநாவல் வெளியீட்டு விழா கண்டி டி.எஸ். சேனநாயக வீதியில் (கண்டி அசோகா வித்தியாலத்திற்கு  முன்னால்) அமைந்துள்ள செல்லத்துரை ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை  2.-12-2023 , பி.ப. 3.00 மணிக்கு,மலையகக் கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில், வரவேற்புரையினைக் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமன் அவர்களும் நூல் வெளியீட்டு உரையினை  நூல் பதிப்பாசியர்களுள் ஒருவரான பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. சுதர்சன் அவர்களும்  ஆய்வுரையினை பேராதனைப் பல்கலைக்கழகத்  தமிழ்த்துறை உதவி  விரிவுரையாளர் வி. சாரங்கன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும்  பேராசிரியர் துரை.மனோகரன் அவர்களின் உரையை அடுத்து,  பதிப்பாசிரியர்களுள் ஒருவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இக்பால் அலி நன்றியுரையினை நிகழ்த்தவுள்ளார்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.