- பீஷ்மராகப் பேராசிரியர் சி.மெளனகுரு -

27.04.2025 அன்று, கொழும்பு தமிழ் சங்கம் நடாத்திய அரங்கியல் கருத்தரங்கில் "பீஷ்ம பிரதிஞ்ஞை என்ற ஓரங்க நாடகத்தில் அயூரனின் வேண்டுகோளுக்கு இணங்க பீஷ்மர் பாத்திரத்தை ஏற்றிருந்தார் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள். இதற்கான எழுத்து பிரதியையும் இவரே வழங்கியிருந்தார்.

நடிப்பின் மீதும் மாணவர்களின் மீதும் உள்ள பற்றுதல் காரணமாக, வற்புறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பேராசிரியர் மௌனகுரு அவர்கள், மேடையேறி, மற்றவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இப்படி முன்னுதாரணமாய் பாத்திரமேற்று நடிப்பது உற்சாகமளிக்க கூடிய விடயமாகும்.

மேலும் இவரது இத்தகைய பங்களிப்புகள் தமிழ் நாடக உலகுக்கு ஒரு வரப்பிரசாதமாகின்றது. இதனால் பயன்பெற போவது தமிழ் இலக்கிய நாடக உலகமே என்றால் மிகையாகாது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Plantation Teachers Forum Srilanka