- ஓவியர் ரவி (சோ.ராஜ்குமார்) -

அண்மையில் எனது முகநூற் பதிவொன்றுக்கு எதிர்வினையாற்றிய தர்சினி யோகி என்பவர் தன் சகோதரர் ஓவியர் ரவி பற்றிச் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.  ஓவியர் ரவி தற்போது மறைந்து விட்டார்.

இவர் சிரித்திரனிலும் சில ஓவியங்கள் வரைந்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர் இலங்கையில் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கும் திரையரங்குகளுக்கு முன் வைப்பதற்காக ஓவியங்கள், 'கட் அவுட்'ட்டுகள் வரைந்திருப்பதாகவும் , அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தில் திரைப்படங்களுக்குக் 'கட் அவுட்'டுகள் வடிவமைத்ததில் புகழ்பெற்றிருந்த ஒவியர் மணியத்தைத் தன் குருவாகக் கருதியவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அவரது ஓவியங்கள் சிலவற்றையும் பகிர்ந்திருந்தார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இவரைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அறிந்தவர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.