நான் தொலைக்காட்சிச் 'சீரியல்க'ளில் பெரிதும் ஆர்வம் கொண்டவனல்லன். வீட்டில் எந்நேரமும் பார்ப்பார்கள். அதனால் அவ்வப்போது நானும் இலேசாக எட்டிப் பார்ப்பதுண்டு. அவ்விதம் எட்டிப்பார்த்தபோது என்னைக் கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மாரிமுத்து. இவரை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது 'எதிர்நீச்சல்' மூலம்தான்.

அதன் பின்பே இவர் தமிழ்ச் சினிமாவில் உதவி இயக்குநராக, இயக்குநராக, நடிகராக விளங்கியவர் என்பதை அறிந்துகொண்டேன். அண்மையில் வெளியான விஜய், ரஜனி திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

எதிர்நீச்சலில் இவர் பேசும் வட்டாரமொழியும், உடல் மொழியும் என்னை மிகவும் கவர்ந்திருந்தன.  உண்மையில் 'எதிர்நீச்சல்'ம் மூலம்தான் இவர் என் அபிமானத்துக்குரிய நடிகரானார். இந்நிலையில் இவரது திடீர் மறைவு எதிர்பாராதது.  இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள், இரசிகர்கள் & சக நடிகர்கள் அனைவர்தம் துயரை நாமும் பகிர்ந்துகொள்வோம். ஆழ்ந்த இரங்கல்.