https://www.youtube.com/watch?v=Kyv_1k1SMu8

கவிஞர் புலமைப்பித்தனின் சிறந்த பாடல்களிலொன்று. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைஞானி, கமலஹாசன் , கே.பாலச்சந்தர் & ஜெமினி கணேசன் கூட்டணியில் உருவான சிறந்த கருத்துகளை உள்வாங்கி எடுக்கப்பட்ட திரைப்படம் 'உன்னால் முடியும் தம்பி'.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'உன்னால் முடியும் தம்பி', மற்றும் இந்தப்பாடல் இரண்டையும் கேட்கையில் உற்சாகத்தையும்,  மானுட வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கப் பாடுபட வேண்டும் என்னும் உணர்வினையும் , உத்வேகத்தினையும் எவரும் அடைவர்.

கமலஹாசன் தனித்துவம் மிக்க தன் நடிப்பின் மூலம் இப்பாடலை நினைவில் நிலைத்திடச் செய்திருக்கின்றார்.  எஸ்.பி.பியும் வரிகளின் உணர்வுகளை உள்வாங்கிச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார். கேட்கையில் நாமும் வரிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அடைய வைக்கின்றது அவரது குரல்.

இந்தியாவின் பல்வேறு சமூகங்களின் அரசியலும் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், தவறுகளையும் விமர்சித்துச் சிந்திக்க வைக்கும் வரிகள் கேட்பவரைச் சிந்திக்க வைப்பதுடன் பொங்கி எழவும் வைக்கின்றன.

                             - கவிஞர்  புலமைப்பித்தன் -

இப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளாகப் பின்வரும் வரிகளைக்  கூறுவேன்:

'எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே'

'எத்தனை காலம் இப்படி போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு'


https://www.youtube.com/watch?v=Kyv_1k1SMu8

படம்-  உன்னால் முடியும் தம்பி -
இசை - இசைஞானி இளையராஜா
பாடகர் - எஸ்.பி.பி
நடிப்பு - கமலஹாசன்
பாடல் வரிகள் -  கவிஞர் புலமைப்பித்தன்

பாடல் வரிகள் முழுமையாக:

புஞ்சை உண்டு
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல -
எங்க பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல
இது நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா
இது நாடா இல்ல வெறும் காடா
இதை கேட்க யாரும் இல்லை தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே
வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும்
 ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு
நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும்
எங்கள் கைகளில் என்றாடு
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல -
எங்க பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல

ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ?
ஏழையை வந்து தீண்டாதா?
கங்கை தெற்கே பாயாதா /
காவேரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின்
தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல -
எங்க பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
இது நாடா இல்ல வெறும் காடா
இதை கேட்க யாரும் இல்லை தோழா
இது நாடா இல்ல வெறும் காடா
இதை கேட்க யாரும் இல்லை தோழா