எழுத்தாளர்  முருகபூபதிஅன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். இலக்கிய நண்பர் மல்லிகை ஜீவா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளைப்படித்தேன். அவர் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியிருக்கின்றேன். மல்லிகை ஜீவா நினைவுகள் என்ற நூலையும் 2001 ஆம் ஆண்டு எழுதி வௌியிட்டு, அந்த நூலை அவரது துணைவியாருக்கும் மூன்று பிள்ளைகளுக்கும்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

உங்கள் பதிவுகள் இணைய இதழிலும் முருகபூபதி பக்கத்தில் நீங்கள் பதிவிட்டுள்ள எனது சில ஆக்கங்களிலும் ஜீவா பற்றி நான் எழுதியிருப்பவை, இன்னமும் வாசகரின் பார்வைக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறது.

மல்லிகை ஜீவாவின் பிறந்த தினம் வரும் நாட்களிலெல்லாம் முகநூல் எழுத்தாளர்கள் பலர் அவர்பற்றிய தமது நினைவுகளை பகிரவும் மறக்கமாட்டார்கள்.

ஆனால், வெளியுலகில் – இணைய உலகில் என்ன நடக்கிறது…? என்பது தெரியாமலேயே அவர், கொழும்பின் புறநகரில் மட்டக்குளி பிரதேசத்தில் ஏக புதல்வன் திலீபனின் இல்லத்தில் அஞ்ஞாதாவாசத்தில் சுவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டும் அவரைச்சென்று பார்த்துவிட்டுத்திரும்பி எழுதியிருந்தேன்.

மல்லிகை என்று பெயரில் ஒரு இலக்கிய இதழையே அவர்தான் நாற்பது வருடங்களுக்கு மேலாக நடத்தினார் என்பதையோ, யாழ். பல்கலைக்கழகத்தை முன்வைத்து அதனோடு ஜீவாவின் அளப்பரிய தொடர்பணிகளையும் ஒப்பீடு நீங்கள் செய்திருப்பதை இன்று அவரிடத்தில் எவரேனும் சொன்னால், “ அப்படியா…? . “ என்று அப்பாவித்தனமாகத்தான் அவர் திருப்பிக்கேட்பார்.

காலம் இவ்வாறுதான் அவரை வஞ்சித்துள்ளது என்பதை கண்ணீருக்கு மத்தியில் சொல்கின்றேன். மேற்கிலங்கையில் எங்கோ ஒரு மூலையில் கடற்கரைக்காற்றை சுவாசித்துக்கொண்டிருந்த என்னை, அவர்தான் இலக்கிய உலகிற்கு 1970 களில் முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர்.

அவரால் எனக்குக்கிடைத்த இலக்கிய நண்பர்கள் ஏராளம். அவர்கள் பற்றியெல்லாம் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இனி, உங்கள் கேள்விகளுக்கு வருகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகமொன்றுள்ளது. இங்கு தமிழ்ப்பேராசிரியர்கள் பலர் இது ஆரம்பித்த நாளிலிருந்து பணி புரிந்து வந்துள்ளார்கள். இவர்கள் இதுவரையில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் இதுவரையில் கீழுள்ளவற்றில் எத்தனை விடயங்களைச் செய்துள்ளார்கள் என்பதை அறிந்தவர்கள் அறியத்தரவும்?

உங்கள் கேள்விக்கொத்தில் நியாயங்கள் பல இருக்கின்றன. கேட்கப்படவேண்டிய கேள்விகள் அவை. யாழ்.பல்லைக்கழக வளாகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் தலைவராக நியமனமானவர் பேராசிரியர் க. கைலாசபதி.

அவர் இலக்கிய உலகில் பேராளுமை. ஏற்கனவே ஏரிக்கரை தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். எப்பொழுதும் மற்றவர்களை ஊக்குவித்து வளர்த்துவிடும் இயல்பும் கொண்டிருந்தவர்.

அவரது அந்தத் தலைவர் பதவி நியமனத்தைக்கூட தமிழரசுக்கட்சியினரும் சுதந்திரன் ஆசிரியராகவிருந்த கோவை மகேசனும் கடுமையாக விமர்சித்தனர்.

அந்த நியமனம் கிடைப்பதற்கு முன்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட தேசிய ஒருமைப்பாடு மாநாடு தொடர்பான பிரசாரக்கூட்டத்தை, எமது நீர்கொழும்பூரில் நான் நடத்தியபோது கைலாசபதியும் தற்போது லண்டனில் வதியும், அவரது மாணாக்கர் மு. நித்தியானந்தனும் சிங்கள எழுத்தாளர் குணசேனவித்தானவும் வருகை தந்து உரையாற்றினர்.

கைலாஸ் பேசிக்கொண்டிருந்த போது அந்த மண்டபத்தின் கூரையை கற்கள் பதம் பார்த்தன. எறிந்தவர்கள் தமிழ் உணர்ச்சியால் உந்தப்பட்ட கொழுந்துகள்.

எனினும், கைலாஸ் அக்கூட்டத்தில் முழுமையாகப் பேசி முடித்தபின்னரும் அந்த இரவில் பஸ்நிலையத்திற்கு நடந்தே வந்து புறப்பட்டு கொழும்பு சென்றார். இதற்கு பலர் கண்கண்ட சாட்சிகள்.

மறுநாள் வீரகேசரி – தினகரன் பத்திரிகையின் தலைப்புச்செய்தியில் கைலாசபதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் தலைவராக நியமனம் என்ற வரிகள் பெரிய எழுத்தில் பதிவாகியிருந்தது. அச்செய்தி அச்சாகும்போது அவர் எங்கள் ஊரில் முதல்நாள் இரவு பேசிக்கொண்டிருந்தார்.

பின்னாளில் மல்லிகை ஆண்டு மலர் வெளியீட்டு விழாவை நீர்கொழும்பில், கைலாஸ் பேசிய அதே மண்டபத்தில் நான் ஒழுங்கு செய்தபோது , அங்கு வந்து உரையாற்றிய மல்லிகை ஜீவா, கைலாஸ் குறித்துப்பேசும்போது எங்கள் ஊரையும் பெருமைப்படுத்திச்சொன்னார்.

கைலாசபதி எப்பொழுதும் தன்னைச்சுற்றி ஆளுமைகளைத்தான் வைத்திருப்பதற்கு விரும்புபவர். அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் பதவி ஏற்றதும் அங்கு பணியாற்ற அவர் அழைத்திருப்பவர்களின் பெயர்களைப்பாருங்கள்:

பேராசிரியர் கா. சிவத்தம்பி, நுஃமான், மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு. மு. நித்தியானந்தன், நிர்மலா, அ. சண்முகதாஸ், ஏ.ஜே. கனகரட்ணா, ஆ. சிவநேசச்செல்வன், சோ. கிருஷ்ணராஜா. தற்போது எனது நினைவிலிருப்பவர்கள் இவர்கள்.

1976 ஆம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டு வருகிறது என்பதை முதல் முதலில் தமிழ் உலகிற்கு சொன்னவர்தான் கைலாசபதி. இதனை பின்னாளில் தமிழக மூத்த எழுத்தாளர் சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

அக்காலப்பகுதியில் கைலாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாராந்தம் தமிழ் நாவல் இலக்கியம் தொடர்பாக தொடர் கருத்தரங்குகளை நடத்தினார்.

பின்னாளில் அக்கருத்தரங்கு கட்டுரைகள் யாவும் நூலுருப்பெற்றது. அதில் பல பல்கலைக்கழக விரிவுரையாளர்களது கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. அதனைத்தொடர்ந்து, கைலாஸ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை அடுத்தடுத்து இரண்டு நாட்கள் பல்கலைக்கழகத்தில் நடத்தினார்.

அதற்கு தமிழகத்திலிருந்து எழுத்தாளர் அசோகமித்திரனையும் அழைத்திருந்தார். பேராசிரியர் தோதாத்திரியும் வரவிருந்தார். எனினும் அவர் வருகை தரமுடியாமல், அவரது ஆய்வுக்கட்டுரை அரங்கத்தில் வாசிக்கப்பட்டது.

இலக்கிய ரீதியில் விமர்சன முறைமையில் கைலாசபதியுடன் முரண்பட்டிருந்த குரும்பசிட்டியில் அச்சமயம் நீரிழிவு உபாதையுடன் நடக்கவும் முடியாமல் முடங்கியிருந்த இரசிகமணி கனகசெந்திநாதன் பற்றி அசோகமித்திரனிடம் விபரித்ததுடன், நுஃமானையும் தனது கார் சாரதியையும் அழைத்து காரையும் ஒப்படைத்து, அசோகமித்திரனை குரும்பசிட்டிக்கு அனுப்பிவைத்தார்.

மாற்றுக் கருத்துக்கொண்டவர்கள் குறித்தும் கைலாஸ் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம். கைலாஸ் தலைவராக இருந்த அக்காலம் பொற்காலம்தான்.

அக்காலப்பகுதியில் அங்கு மாணவர்களாக இருந்தவர்கள்தான் கவிஞர்கள் சேரனும், வ. ஐ.ச.ஜெயபாலனும்.

மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தவர்கள்தான் பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும்.

யாழ்ப்பாணத்தில் எங்காவது புத்தக வெளியீடுகள் நடைபெற்றால், தங்களுக்கு செல்லமுடியாதுபோனாலும் தமது மாணவர்களுக்கு நினைவூட்டி அனுப்பிவைப்பார்கள். அத்துடன் நிற்கமாட்டார்கள். மறுநாள் விரிவுரையின்போது முதல் நாள் கூட்டத்தில் யார்…? என்ன பேசினார்கள்..? எனக்கேட்டு அம்மாணவர்களிடத்தில் இலக்கியப்பிரக்ஞையை வளர்த்தார்கள்.

1975 ஆம் ஆண்டு வெளிவந்த எனது சுமையின் பங்காளிகள் நூல் அறிமுக நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மல்லிகை ஜீவா ஒழுங்குசெய்திருந்தபோது, “ பிரதேச இலக்கியத்தை பிரதிபலிக்கும் நூல் அறிமுகம் நடக்கிறது சென்றுவாருங்கள் “ என்று தமது மாணவர்களை கைலாஸ் அனுப்பிவைத்தார். அவ்வாறு வந்த மாணவர்கள் சிலர் என்னுடன் உரையாடியபோதுதான் கைலாஸின் இயல்புகளை தெரிந்துகொண்டேன்.

யாழ். பல்கலைக்கழகம் , அது உருவான காலத்திலும் அதன்பின்னரும் இலக்கியத்திற்காக மேற்கொண்ட ஆக்கபூர்வமான பணிகள் நிறையவுண்டு. அங்கு அக்காலப்பகுதியில் பணியாற்றியவர்கள், கற்ற மாணவர்களிடம் எனக்குத் தெரியாத பல செய்திகள் இருக்கலாம்.

ஆனால், அதே பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபொழுது கண்டித்து கோஷம் எழுப்பிய உணர்ச்சிக்கொழுந்துகளின் வாரிசுகள் தற்போது அங்கிருந்து, பொங்கு தமிழ் – எழுக தமிழ் என்று ஏதோவெல்லாம் நடத்திக்கொண்டிருக்கின்றன.

ஈழத்து இலக்கியத்திற்காக ஆக்கபூர்வமாக இயங்கவேண்டிய மாணவர் பரம்பரைக்கு கொம்பு சீவிவிடுவதற்கு வெளிச்சக்திகள் தொடர்ச்சியாக இயங்கிவருகின்றன.

இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் சூழ்நிலையின் கைதிகளாக கள்ளமெளனம் அனுட்டிக்கின்றனர்.

ஒரு செய்தியுடன் எனது இந்த எதிர்வினையை முடிக்கின்றேன்.

ஒரு மாணவர் தாம் சமர்ப்பித்த ஆய்வேட்டில், “தற்காலத்தில் டென்மார்க்கிலிருந்தும் சீனாவிலிருந்தும் தமிழ் இலக்கியம் படைக்கிறார்கள் என்று எழுதிவிட்டு உதாரணமாக இரண்டுபேரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.

இதனையும் ஒரு பேராசிரியர் பார்த்து புள்ளிபோடுகிறார்.

யாழ். பல்கலைக்கழகம் அன்று அப்படித்தான் இருந்தது.!!! இன்று இப்படித்தான் இருக்கிறது. ?????

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here