சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,  “கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..?   “ எனக்கேட்டார்.  “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத்  தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிட்டார்களா.. ?  “ எனக்கேட்டேன்.  “ இது குதர்க்க வாதம்  “ என்றார் மனைவி.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஜெயமோகனின் வசனத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன், நான் வதியும் ஆஸ்திரேலியாவில் மெல்பன் திரையரங்கிற்கு  இம்மாதம் 30 ஆம் திகதி வந்ததும்,  அதனை கதையாக இதுவரையில் படித்திராத, அதனை எழுதிய எழுத்தாளர் கல்கி பற்றி எதுவித குறிப்புகளும் அறியாத 1980 இற்குப்பின்னர் பிறந்த எனது இரண்டு  மகள்மாரும் மற்றும் இரண்டு பெறாமகள்மாரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக என்னை தனித்தனியாக அழைத்தனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான் மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல் பிரதேச  திரையரங்கில், இதற்கு முன்னர் எந்தவொரு தமிழ்த் திரைப்படமும் காண்பிக்கப்படவில்லை.  அந்தப்பிரதேசத்தில் வசிக்கும் மருத்துவரான ஒரு பெறாமகள்,  “ அங்கிள், பொன்னியின் செல்வன் பார்ப்போம் வாருங்கள்  “ என்றார். “ மெல்பன் நகருக்குள் வசிக்கும் எனது மூத்த மகள் அழைத்துவிட்டாள்,  அவளுடன் மெல்பனில் பார்க்கச்செல்கிறேன் “  என்றேன். இவ்வாறு பொன்னியின் செல்வன் திரைப்படம் எங்கள் குடும்பத்திற்குள் கொண்டாடப்பட்டது.

இதற்கு வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன், 2009 ஆம் ஆண்டளவில் எங்கள் வீட்டில் தமது துணைவியார் அருண்மொழியுடன் தங்கி நின்றபோது, மற்றும் ஒரு எழுத்தாளரும் வந்திருந்தார். அவர் இலங்கையிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப். ஜெயமோகன்,  ஆர்யா நடித்த நான் கடவுள் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய காலப்பகுதியில் வந்திருந்தார்.  தெளிவத்தை ஜோசப்  வி. பி. கணேசன் தயாரிப்பில்  முன்னர் வெளியான புதிய காற்று திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர். இத்திரைப்படத்தில் மனோகணேசனும், அவரது தம்பி பிரபா கணேசனும்  குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருப்பர். எங்கள் மெல்பன் வீட்டின் நூலகத்திலிருந்த முள்ளும்மலரும் மகேந்திரன் எழுதிய சினிமாவும் நானும் என்ற நூலை ஜெயமோகன் எடுத்துப்பார்த்து அதன் பக்கங்களை புரட்டினார். அதில் மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.  தன்னை வீட்டுக்கு அழைத்து மூன்று மாதங்கள் தங்க வைத்து  கல்கியின்  பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை வசனம் எழுதவைத்த கதையை மகேந்திரன் சொல்லியிருப்பார்.

மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் சில காட்சிகளை இலங்கையிலும் எடுக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், இலங்கை செல்லும் தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் கண்டனம் எழுப்பியதனால், அந்த முயற்சியும் மணிரத்தினத்திற்கு கைகூடவில்லை. கடல் திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதியவர் ஜெயமோகன். பொன்னியின் செல்வனுக்காகவும் திரைப்படக்குழு இலங்கை வரவிருந்தது.  ஆனால், கொவிட் பெருந்தொற்று அவர்களை பாலித்தீவை நோக்கி நகர வைத்தது. மணிரத்தினத்தின் இரண்டாவது விருப்பமும் நிறைவேறவில்லை.  இத்தனைக்கும் பொன்னியின் செல்வனை தயாரித்தவர்  லைக்கா நிறுவனத்தை நடத்தும் இலங்கையரான சுபாஸ்கரன்.

மக்கள் திலகம் பொன்னியின் செல்வனை அன்று கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புதல்வர் கி. இராஜேந்திரனிடம் இந்திய நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா கொடுத்து வாங்கியிருந்தார். அதில் வந்தியத்தேவனாகவும் எம். ஜி. ஆர். நடிப்பதற்கு விரும்பியிருந்தார்.  பின்னாளில் நடிகர் கமல்ஹாசனும் பொன்னியின் செல்வனை தயாரித்து நடிக்க விரும்பியிருந்தார். மருதநாயகம் திரைப்படத்தை பெரும் பொருட்செலவுடன் தயாரிக்க முனைந்து பின்னர் கைவிட்டவர் கமல்.

தற்போது வெளியாகியிருக்கும்  மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் குரல் கொடுத்துள்ளார் கமல். ,உலகெங்கும் திரையரங்குகளுக்கு வருமுன்னர்,  தயாரிப்பாளர், இயக்குநர்,  கதை வசன கர்த்தா, மற்றும் பங்கேற்ற தொழில் நுட்பக்கலைஞர்கள் உட்பட நடித்த நட்சத்திர பட்டாளம் பங்கேற்ற மேம்பாட்டு  நிகழ்ச்சியையும்  ( Promotion programme ) மகள்மாருடன் சேர்ந்து பார்த்தேன். அவர்கள் கல்கிபற்றியும்,  பொன்னியின் செல்வன்  கதையின் பின்னணி வரலாற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காண்பித்தனர். அவர்களுக்கு  1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழின் முதல் சினிமாஸ்கோப்  திரைப் படம் ராஜராஜ சோழன் பற்றியும் சொல்லநேர்ந்தது.  குறிப்பிட்ட ராஜராஜசோழன் திரைப்படத்தில்  அந்தப் பாத்திரமாகத்தோன்றிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சிபாரிசில், இலங்கை நடிகர் ஶ்ரீசங்கருக்கு ஈழத்து புலவர் வேடம் தரப்பட்டது.  கண் மூடி கண் திறப்பதற்குள் அந்தக்காட்சி மறைந்துவிடும்.

சோழ சாம்ராஜ்யத்திற்கும் இலங்கைக்குமிடையே தொடர்புகள் இருந்தமையால்தான், கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொன்னியின் செல்வனை எழுதிய காலப்பகுதியில்    ( 1950 – 1955 ) ஓவியர் மணியம் அவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு,  இலங்கையில் அநுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ளை  முதலான இடங்களுக்கும் வந்தார். ஓவியர் மணியமே பொன்னியின் செல்வன் தொடர்கதைக்கு ஓவியம் வரைந்தவர். ஆயினும்  மணிரத்தினம் இலங்கை வந்து படப்பிடிப்பு நடத்த முடியாது போய்விட்டது. எனினும் திரைப்படத்தில் இலங்கை உச்சரிக்கப்படுகிறது. இலங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் பல வருகின்றன.  சிங்களத்திலும் வசனங்கள் இடம்பெறுகின்றன.  பெளத்த பிக்குகளாக  பலர் தோன்றுகிறார்கள்.   இலங்கை சிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே அவர்களுக்கும் எழுத்தோட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கல்கியில் பொன்னியின் செல்வன் வெளிவந்த காலத்தில் கல்கி இதழ் எண்பதினாயிரம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவுக்கெல்லாம் கல்கி வந்தது. எங்கள் குடும்பத்தில் பெத்தாச்சி, அம்மா மற்றும் சில உறவினர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் உட்பட சில தொடர்கதைகளை படித்தனர்.  எனது அக்காவின் கணவருக்கு தற்போது எண்பது வயதும் கடந்துவிட்டது. அவர் பல தடவைகள் மீண்டும் மீண்டும் படித்த கதை பொன்னியின் செல்வன்தான்.

இவ்வாறு கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வனை – அது  வரலாற்றுப்புனைவு என்ற காரணத்தினாலோ என்னவோ, நவீன படைப்பிலக்கியத்துறையில் தீவிரம் காண்பித்தமையினாலோ,   நான் படிக்கவில்லை.  அம்புலிமாமா கதைகளை ஆரம்பத்தில் படித்துவிட்டு, கண்ணன் இதழ்களை வாசித்துவிட்டு, முதலில் மு. வரதராசன், அதன்பின்னர்  புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன்,  சுஜாதா, பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதி, கி. ராஜநாராயணன்,  அசோகமித்திரன்,  பிரபஞ்சன்,  சுந்தரராமசாமி ,  அம்பை , ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன்… என்று கடந்து வந்துவிட்டதனால்,  கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி, விக்ரமன், சாண்டில்யன்   முதலானோரின் வரலாற்றுப்புனைவு தொடர்கதைகளை படிப்பதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. அதனால்,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்கள் எல்லாம் என்ன எழுத்தாளர்..?  “ என்று எனது மனைவி சொன்னபோது,  சுந்தரராமசாமி தனது ஜே.ஜே. சிலகுறிப்புகள் நாவலில்  ஒரு பாத்திரம்,   “ உங்கள் சிவகாமி சபதத்தை முடித்துவிட்டாளா..?   “ எனக்கேட்கும் எனச்சொன்னேன். ஒரு காலத்தில்,   சார்ள்ஸ் டிக்கன்ஸை படிக்காமல் ஒருவர் ஆங்கில இலக்கிய எழுத்தாளராக முடியாது எனச்சொல்வார்களாம். ஆனால், தற்காலத்தில் அவ்வாறு சொல்ல மாட்டார்கள் என நம்புகின்றேன். கல்கியின் கள்வனின் காதலி, தியாகபூமி, பார்த்திபன் கனவு முதலான கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. அவை கறுப்பு – வெள்ளை திரைப்படங்கள்.

தற்போது பென்னியின் செல்வன் நவீன டிஜிட்டல் உலகில் வண்ணத்திரைப்படமாக உருவாகியிருக்கிறது.  அன்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி இதழை பொன்னியின் செல்வனுக்காகவே வாங்கிப்படித்தவர்கள் திரையில் தோன்றும் பொன்னியின் செல்வனை திரையில்  பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள்…?  என்பது பற்றிய நேர்காணலை தொகுத்தால் சுவாரசியமான செய்திகள் கிடைக்கலாம். திரையில் பார்த்த பொன்னியின் செல்வன் பிரமாண்டமான தயாரிப்புத்தான்.  சந்தேகமில்லை.  நட்சத்திரப்பட்டாளமே தோன்றியிருக்கிறது. ஏ.ஆர். ரகுமானின் இசையும் ஜெயமோகனின் வசனமும் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.  முதல் பாகத்தின் முடிவில் ஒரு முடிச்சை வைத்துள்ளனர். இரண்டாம் பாகம் வெளிவரும்போது அந்த முடிச்சு எவ்வாறு அவிழ்க்கப்படுகிறது என்பது தெரியவரும். பொன்னியின் செல்வனின் ரிஷிமூலத்தை அறிவதற்கு   புதிய தலைமுறை ரசிகர்கள்  காத்திருப்பார்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here