மே 18 முள்ளிவாய்க்கால் நினைவாக...

முள்ளிவாய்க்கால் நினைவுகள்
மீண்டும் எமைத் துரத்துகின்றன.
அன்று மக்கள் எழுப்பிய ஓலங்கள்
இன்றும் காதுகளில் ஒலிக்கின்றன.
துயரங்களைக் காவி வரும்
யுத்தங்கள் அற்றவொரு உலகை
யாசித்து நிற்க
எம்மை அவை தூண்டுகின்றன.
எம்மை அவை எச்சரிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஏந்துவோம்!
முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கான
முள்ளிவாய்க்கால் வலிகளுக்கான,
முள்ளிவாய்க்கால் நீதியினை வேண்டுவோம்!

முள்ளிவாய்க்காலில் வாழும் உரிமையினை இழந்தவர்களுக்காக,
முள்ளிவாய்க்காலில் வதைகளுக்கு உள்ளானவர்களுக்காக,
முள்ளிவாய்க்காலில் மறைந்தவர்களுக்காக,
முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஏந்துவோம்!
முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஏந்துவோம்!
மத , இன, மொழி பேதமின்றி ,
மானுடர்களாக,
நீதி வேண்டி நாம்
நினைவேந்துவோம். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.