அண்மையில் மறைந்த கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த எழுத்தாளர் பூர்ணிமா கருணாரன் முகநூலில் பின்வருமாறு குறிப்பொன்றினை இட்டிருந்தார்:

"நேற்றையதினம் இலக்கிய ஆளுமை திரு. K.S சிவகுமாரன் ஐயா அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு, அவரது சிதைக்கு தீ மூட்டிய வரையில் உடனிருந்தேன். மிகவும் வேதனையான உண்மை என்னவென்றால் அவரால் முன்னுக்கு வந்ததாக முகநூலில் பலரது பதிவுகளை காண முடிந்த அளவுக்கு, அவரது மரணச் சடங்கில் பலரைக் காண முடியவில்லை. யாரோ என் அருகில் இருந்த ஒருவர் கூறியதும் என் காதுகளில் விழுந்தது. 'ஆனானப்பட்ட பாரதியின் சாவுக்கே பதினொரு பேர் தான் என்று. தமிழ் சங்கத்தில் எனக்குத் தெரிந்த பலரையும் காணவில்லை. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஓரிருவர் வந்திருந்தார்கள். தமிழ் சங்கம் என்பது இலக்கியவாதிகளின் இளைப்பாறும் இடமாக மாறி விட்டதா? தயவுசெய்து திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது போனாலும் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ளுங்கள். இதை நான் கூட கற்றுக் கொண்டது பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து தான். அவர்களின் இலக்கியவாதி ஒருவர் இறந்திருக்கும் பட்சத்தில் அங்கு எவ்வாறான மக்கள் கூட்டம் இருக்கும் என்பதைக் கண் கூடாக கண்டிருக்கிறேன். சென்று வாருங்கள். உங்கள் ஆளுமை எதிர் காலத்தில் ஏனும் புரிந்து கொள்ளப்படும். மிகவும் வேதனையோடு இதனைப் பகிர்கின்றேன்."

கொழும்பில் அவரை நன்கு அறிந்த இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், பதிப்பாளர்கள் என்று பலர் உள்ளார்களே. அவர்களில் முகநூலில் அவரது நண்பர்களாகப் பலர் இருக்கின்றார்களே. அவர்களில் பலர் செல்லவில்லைபோல் தெரிகிறதே. பூர்ணிமா கருணாரனுக்கு கே.எஸ்.எஸ்  அவர்களை முகநூல் மூலமே தெரிந்திருக்குமென்று நினைக்கின்றேன். அவர் தன் இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். ஆனால் ஆண்டுகள் பலவாக கே.எஸ்.எஸ் அவர்களை அறிந்த கொழும்பில் வாழும் கலை, இலக்கியவாதிகளுக்கு அது முக்கியமாகப் படவில்லையென்பது நவகாலத்தின் யதார்த்தம்.


முகநூலில் இப்பதிவினையிட்டபோது வெளியான எதிர்வினைகள்:

Alex Paranthaman
மிகவும் வருந்தத்தக்க விடயம்.

Jeevan Prasad
பெரிதாக அவர் கடைசி காலத்தில் எங்கு வாழ்ந்து இறந்தார் என்றே தெரியவில்லை. தொடர்பு விபரங்களையும் யாரும் பகிரவில்லை. மரண செய்தி கேட்டு இரங்கல் தெரிவித்ததோடு நிற்க வேண்டிய நிலை. யாராவது என்ன நடந்தது? எப்படி இறந்தார்? இப்படி விபரமாக யாராவது தெரிந்தோர் எழுதுங்கள். எனக்கே அவர் காலமானார் என்ற தகவல் ஒருவரிடமிருந்து வட்சப்பில் கிடைத்தது. அதற்கு மேல் எந்த விபரமும் கிடைக்கவில்லை.

Vijaya Baskaran
ஒருவனது மரணத்தில்கூட ஆதாயம் இல்லாவிட்டால் சனம் வரவே வராது. கேஎஸ் சிவகுமாரனைப் பொறுத்மவரை அவரது உறவுகள் நட்புகள் படித்த மத்தியதர வர்க்கத்துக்குள் மட்டும்படுத்தப்பட்டவை. எனவே அவரது வாழ்வு முடிந்ததும் நட்பும் முடிந்துவிடும். இவரை இவர் புகழை காவ இவருக்கு ஒரு வாரிசு இருந்திருந்தால் கண்டிப்பாக அந்த வாரிசுக்காக சனம் வந்திருக்கும்

Selva Sinnathamby
Vijaya Baskaran உண்மை

Poornima Karunaharan
இது பற்றி நான் எழுதியது மிகைப்படுத்தல் என்ற வகையில் ஒருவர் எழுதியிருந்தார். நான் அதற்காக வருந்தவில்லை. காரணம் இலங்கையில் மூத்த இலக்கியவாதி ஒருவரின் மரணச் சடங்கில் பல ஆளுமைகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களைக் காணவில்லை. நான் அதற்காக மட்டுமே வருந்துகிறேன். வேலை நேரம் அதனால் தான் அநேகர் வரவில்லை என்று பல காரணங்களை சிலர் கூறுகின்றனர். உண்மையில் ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும். ஆனால் அதையெல்லாம் தாண்டி வர வேண்டிய மரணம் கே.எஸ் சிவகுமாரன் அவர்களது.

நான் இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்கும் வரையில் இலங்கையில் உள்ள இலக்கிய ஆளுமைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. சிவகுமாரன் அவர்களை நான் முதன் முறையாக சந்தித்தது கொழும்பு தமிழ் சங்கத்தில். அதுவும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த போது. நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வந்து நின்று Who is this young lady என்று கேட்ட கணத்தில் தான் நிமிர்ந்து பார்த்தேன். புன்னகை முகத்துடன் சிவகுமாரன் அவர்கள். இது வழக்கமாக நான் அமரும் இருக்கை என்றவுடன் நான் எழுந்து இடம் கொடுத்தேன். அப்போது கதிரைக்கு ஆசைப்படாத பெண் என்றபடி சிரித்துக் கொண்டே இந்த கதிரை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைத்து விடாதீர்கள். இதற்கு மேலே மின் விசிறி சுத்துவதால் தான் வழக்கமாக இதில் அமர்வதுண்டு என்றார். அப்படியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது எனது கவிதை நூல் பற்றி அறிந்து கொண்டவர் தனக்கு ஒரு நூலைத் தர முடியுமா என்று கேட்டார். உங்கள் நூலின் தலையங்கம் வித்தியாசமாக உள்ளது. உங்கள் கவிதை நூலுக்கு நான் விமர்சனம் எழுத வேண்டும் என்றபடி எனது நூலைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் எனது கவிதை நூல் பற்றி திறனாய்வு செய்து எழுதியிருந்தார். அதைத் தவிர எனக்கும் அவருக்கும் பெரிதாக பரிச்சயம் எதுவுமில்லை. ஆனாலும் அவர் மரணம் எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ??♥️
 
Polikai Jeya
Poornima Karunaharan வழக்கமாக நான் அமரும் கதிரை...?
 
Poornima Karunaharan
Polikai Jeya தமிழ் சங்க நிகழ்வுகள் நடக்கும் போது மின் விசிறிக்கு நேர் கீழே உள்ள இருக்கை என்பதால் அவர் வழக்கமாக அமரும் இடம் என்று அர்த்தம். சிவகுமாரன் அவர்களை அறிந்திருந்தால் நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்டிருக்க மாட்டீர்கள். இலக்கியவாதிகள் அதிலும் ஆண் இலக்கியவாதிகளில் நான் சந்தித்த மிகவும் எளிமையான, சாந்தமான, அமைதியான தலைக்கனம் இல்லாத புன்னகைக்குச் சொந்தக்காரர். அதிர்ந்து பேசத் தெரியாத ஒரு மனிதர்.

Poornima Karunaharan
உண்மையில் அவர் இறப்புக்குப் பின்னர் தான் அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்று அறிந்து கொண்டேன். எனது மனதில் எழுந்த கேள்வி.. ஓஹோ இவர் மட்டக்களப்பு என்பதால் தான் மரணம் பேசப்படவில்லையா என்று.

Bramen Thamo
Poornima Karunaharan மற்றவர் சாவிலும் தம் புகழ்பாடும் நம்மவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது அக்கா. வாழும் போது வாழ்த்த யாரும் முன் வருவதில்லை இப்போ.
 
Giritharan Navaratnam
Poornima Karunaharan //ஓஹோ இவர் மட்டக்களப்பு என்பதால் தான் மரணம் பேசப்படவில்லையா என்று// அப்படிக் கூற முடியாது. மரணம் பேசப்பட்டது. இறுதி அஞ்சலிக்குத்தான் பலர் வரவில்லை. இதில் வடக்கு, கிழக்கு என்று பிரித்துப் பார்க்க முடியாது. இரு பகுதிகளிலுமுள்ள கலை, இலக்கியவாதிகள் பலர் கொழும்பில் வாழ்கின்றார்கள்.

Poornima Karunaharan
Giritharan Navaratnam இங்கு நான் கூறியது தப்பான புரிதலை வெளிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். உண்மையில் நான் வடக்கைப் பற்றி குறை கூற வரவில்லை. கிழக்கில் இலக்கியவாதிகளின் நிகழ்வுகளுக்கு சென்றிருக்கிறேன். அங்கு பெரிதாக கூட்டம் வருவதில்லை. இது இறப்புக்கு அல்ல. அவர்களின் நூல் வெளியீடுகள் அல்லது வேறு நிகழ்வுகள் குறித்த கருத்தாகும். உதாரணமாக எனது நூல் அறிமுக நிகழ்வை மட்டக்களப்பில் நடாத்திய போது கொழும்பை விட நிறையப் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஐம்பது பேரளவில் தான் வந்தார்கள். கொழும்பில் அதைவிட அதிகமாக வந்திருந்தார்கள். முகநூலில் வாழ்த்துக்கள் கூறிய கிழக்கைச் சேர்ந்த பலர் வரவில்லை.

Sellathurai Vaikunthan JP
True

ஏ. பகலவன்
எழுத்தாளர்களுக்கு களம் கிராமப் புற மக்களின் வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் முதன்மையானது. இவர்கள் எவ்வளவுதான் ஆளுமையாக இருந்தாலும் மக்களை விட்டு அந்நியப்பட்டு தமது வாழ்க்கை முறையை நகர்ப்புறத்தில் வைத்திருக்கும் பட்சத்தில் அவை மண்ணோடும் மக்களின் உணர்வுகளோடும் ஒருபோதும் ஒட்டாது என்பதற்கு மறைந்த கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் மரணம் ஒரு எடுத்துக்காட்டு.

சிங்களப் பெரும்பான்மை மக்களிடமிருந்து தமிழர்கள் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதும் உண்மைதான். முகநூல், Youtube, கிளப்ஹவுஸ் திறந்தால் தின்கிற பெருமை, குடிக்கிற பெருமை, உண்டியல் பெருமை, போலி தேசியப் பெருமை,எதிலும் போலியான சிரிப்பு, ஐந்து பத்துப் பேர் ஒரு பக்கம் சேர்ந்து நின்று தாம் நெருங்கிய நண்பர்களென்பது போல் மற்றவர்களுக்கு காட்ட முயலும் கபடத்தனங்கள் இவையெல்லாம் தமிழர்களின் மிகப் பெரிய பலகீனங்களாகும்.

Poornima Karunaharan
ஏ. பகலவன் நகர்ப்புறம் கிராமப்புறங்களில் என்பது தவறாகும். உண்மையில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை விட எவ்வாறு அடையாளம் காணப்படுகிறோம் என்பது முக்கியமானது. அவ்வாறான அடையாளம் காணப்படல் தமிழ் சமூகத்தை விடவும் ஏனைய சமூகங்களில் அதிகம் என்பேன். இது எல்லாவற்றையும் விட மரணச் சடங்கில் கலந்து கொள்வது என்பது நம்மவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. காரணம் கோயிலுக்கு செல்ல வேண்டும். விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் மரணச் சடங்கில் கலந்து கொள்வது துடக்காக கருதப்படுகிறது. உறவினர்கள் கூட இப்போது தள்ளியே நிற்கிறார்கள். இறந்தவர்களை இறுதி மரியாதை செய்ய பூப் போட்டு வணங்கும் வழக்கம் உள்ளது. அதைக் கூட பலர் செய்யத் தயங்குவதை பல மரணச் சடங்குகளில் நேரடியாக பார்க்க முடிந்தது. வேதனையான உண்மை.

Rajes Bala
கொழும்பு வாழ் தமிழர்களுக்கு நேரம் இல்லை போலும்.

குடத்தனை உதயன்
மிகவும் மனவருத்திற்குரிய விடையம். இலக்கியத்தை உண்மையாக நேசிப்பவர்கள், இலக்கியவாதியையும் நேசம் கொள்ள வேண்டும். ஆனால் ஏன் இப்படி ?

Sreeno Sri Sreesu
எம் சமூகம் மிகுந்த போலிமை கொண்டது. இலக்கியவாதிகள்(?) அதிலுச்சம். இறந்துவிட்டார் இனியென்ன? எனும் கீழ் மனப்பாங்கு. Social media இல் அஞ்சலி, தொடர்புகள் என படங்காட்டுவது, அநேகமாக சுயநலத்தின், புளுகின் பாற்பட்டதே. ஒரு சமுகத்தின், ஒரு இனத்தின், ஒரு அரசின் மேல் நிலைமை , அதெவ்வாறு முதியோரை பராமரிக்கிறதென்பதிலும் முக்கியமாக இருக்கிறதென்பர். அது போல், சமுதாயத்திற்கு பங்கு செய்தவர்களின் மறைவை இயலுமானவரை, மனங்கொண்டு அஞ்சலிப்பது, இறுதி யாத்திரையில் பங்குறுவது எல்லாம் முன் நாகரீகத்தின் பாற்பட்டன. என்னதான் எடுப்பெடுப்பினும், எம் சமூகம் அடிப்படையில் கெட்டது, என்பதை மனவேதனையுடன் சொல்வேன்.

Sivalingam Arumugam
நான் ஒரு இலக்கியவாதி அல்ல. ஆனால் இலக்கியம், அரசியல், கல்வித்துறையில் ஆர்வம் உள்ளவன். நீண்டகாலமாக திரு. கே.எஸ். சிவகுமாரன் என்கின்ற ஆளுமையை பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஒலி, ஒளி பரப்பு ஊடகங்களூடாக அறிந்திருக்கிறேன். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளிலும் அவரைச் சந்தித்த நேரடி அனுபவமும் உண்டு. அவரது துணைவியார் சிலகாலம் எமது பரீட்சைத் திணைக்களத்தில் பணிபுரிந்த சிறு அறிமுகமும் உண்டு. அவரது இறுதிச்சடங்கிலன்று (20-09-2022) பொரளையிலுள்ள A.F. Redmond மலர்ச்சாலையில் காலையில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது இரு மகன்களுடனும் உரையாடி துணைவியார்(அவர் அங்கு இருக்கவில்லை) பற்றியும் நலம் விசாரித்தேன். அவர் இறுதி நேரம்வரை சாதாரணமாக நலத்துடனேயே இருந்ததாகவும் காலை உணவு உட்கொண்ட பின்னர் சிறிது நேரத்தில் உயிர்துறந்ததாகவும் கூறினர். அவர் வெள்ளவத்தை ஹவ்லொக் வீதியின் உபவீதி முருகன் ஒழுங்கையில் மிக நீண்டகாலமாக வசித்துவந்த தனது சொந்த வீட்டிலேயே இயற்கை எய்தினார். கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரம்ப்பட்டதாக அறிந்தேன். ஆனால் நலமாகவே இருந்தார். அவரது முகநூல் பதிவுகளும் அண்மைக்காலம்வரை ஆரோக்கியமானதாகவே இருந்தது. எனது உடல்நிலை காரணமாக இறுதிக் கிரியைகள் வரை நிற்க முடியவில்லை. அங்கிருந்த பதிவேட்டில் எனது பெயர் உள்ளிட்ட குறிப்பினை இட்டபின் நான் திரும்பிவிட்டேன்!

Muraleetharan Navaratnam
இறப்பு என்பது ஒருவர் புவியில் வாழ்ந்த வாழ்வை கொண்டாடும் நிகழ்வு. பலர் மனதிற்குள் கொண்டாடி இருப்பார்கள். இதற்காக அனுதாபம், விவாதம், பிரதேசவாதம் வருவது எழுத்தாளர்கள் படித்த ,எழுதிய நூல்கள் அவர்களது ஆன்மீக மேம்பாட்டுக்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என்பதையே.

Jasmin Kennedy
இதை அறியும்போது வேதனையாக இருக்கிறது

Siva Palan
Rip

Polikai Jeya
சிந்தனைப்பதிவு.யாராக இருந்தாலும் அரசனாகக் கூட இருந்தாலும்..சாமான்னிய மக்களுடன் ஊடாடல் மிக முக்கியம்..ஆனால் இலக்கியவாதிகள் செல்லாதது வேதனைதான்.

Tharmalingam Yogarajah
ஆழ்ந்த இரங்கல்

Murugesu Natkunathayalan
இது அவருக்குமட்டுமல்ல. எல்லா இலக்கியவாதிகளுக்கும் இதுதான்.

Shadagopan Ramiah
நானும் இறுதி நேரம் வரை அங்கே நின்று விட்டு தான் வந்தேன். பூர்ணிமா கருணாகரன் சொல்வதை அப்படியே அங்கீகரிக்கிறேன்.

Murugesu Kanagalingam
பூர்ணிமா கருணாகரனின் ஆதங்கம் சரியானதுதான்.தமிழர்கள் ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட, இப்போது அதிக அளவில் போலிக்கொள் கைகளைப் பின்பற்றுகிறார்கள்.ஓரிரு உதாரணங்களைச் சொல்ல முடியும். (சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது)யாழ் ப்பாணத்தில் ஒரு உறவினர் இறந்து விட்டார். போனில் அறிவித்தார்கள்.நான் இங்கு வவுனியாவிலிருந்து போய், அஞ்சலி செய்தேன்.இறந்தவரின் நெருங்கிய உறவினர் குடும்பம் வரவில்லை.ஏன் என்று விசாரித்தேன். ஐயப்பனுக்கு மாலை போட்டதாம்.40 நாட்களுக்குத் துடக்கு வீட்டுக்குப் போகக்கூடாதாம்!. மற்றொன்று,குடும்பத்தில் திருமணம் போன்றவற்றுக்கு,நாள் வைத்தால்,அந்த நிகழ்வு நடந்து முடியும்வரை துக்க வீடுகளுக்குப் போகக்கூடாதாம்.மாப்பிள்ளை அல்லது மணப்பெண் வெளிநாடு என்றால்,அவர்கள் வருவதற்கு 'விசா' வுக்கு விண்ணப்பிக்க,மண்டபம் முன்பதிவு செய்ய, அழைப்பிதழ் அச்சடிக்க என்று,8--9 மாதங்களுக்கு முன்னரே இவர்கள் இயங்கத் தொடங்கி, உறவினர்களின்,துக்க நிகழ்வுகளைப் புறக்கணிக்கிறார்கள்.மேலும், ஒரு குழந்தை பிறந்தாலும் 31நாள் வரை போய்ப் பார்க்க மாட்டார்கள்.இவ்வாறு புதியவகை மனச்சிறைகள் பின்பற்றப்படு கின்றன.என்ன செய்யலாம்?இங்கே பதிவு செய்வதால் எவராவது மாறிவிடுவார்களா?இவை சமூகம் சார்ந்த முட்டாள் தளைகள்.கை விடார்கள். மறைந்த சிவகுமாரன் அவர்களின் பத்திரிகை எழுத்துக்களை பல ஆண்டுகளாகக் கவனித்தோ/படித்தோ வந்துள்ளேன். நான் வெகு சாதாரணமான ஒரு வாசகன்.இந்த முகநூல் வந்தபிறகு எனது சமூக அக்கறைகளை,மற்றும் எண்ணங்களை அவ்வப்போது பதிவதுண்டு.சமீப ஆண்டுகளில்,திரு சிவகுமாரன் எனக்கும் நட்பு அழைப்பு அனுப்பினார். அவர் ஒருவகை உயர்குழாம் உடனேயே தொடர்புகளைப் பேணி வந்தவர் என்பது எனது அவதானமாயிருந்தது.இப்படியான பலர் அழைத்தபடி உள்ளனர்.சிறியேன் நான் பதிலளிக்காது இருக்கிறேன்..... அவரது ஆன்மா சாந்தி அடைவதாகுக.

Akilan Akil
எமது அஞ்சலி.

    Reply
    1d

J P Josephine Baba
தமிழகத்தில் ஏழுத்தாளர் தோப்பில் மீரான் மரண வீட்டிலும் இப்படி தான் இருந்தது.


Sreeno Sri Sreesu
J P Josephine Baba அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத்துதித்தோர் அநேகர். இறுதியில் அப்படி. கீழினம்.

Barathi Nadarasa
அது கல் தோன்றி மண்தோன்றாக்காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி யின் கடைச்சங்கம் அவர்கள் இன்னமும் பூமிக்கு வரவில்லை வந்ததும் இயல்புநிலைக்கு வரும்

Selvabalan Sivaguru

Anton Sun
Rip

Thiru Jathese N Bahu
RiP?

Suniljoghee Gopal
ஆழ்ந்த இரங்கல் ஐயா....

Nadarajah Parthiepan
ஆனானப்பட்ட பாரதியின் இறுதி அடக்கத்திலன்று

"உன் மேனியில் மொய்த்த
ஈக்களின் எண்ணிக்கைக்கு
ஆக்கள் வரவில்லையே..."

என்றொரு கவிஞன் அன்றெழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

Selvakumaran Subramanian
மிகச் சிறந்த திறனாய்வாளர், அவருக்கு எனது அஞ்சலி....

Manonmani Murugan
அஞ்சலி

Chithra Sinnarajan
இலக்கிய வாதிகளிடம் உறவை வைத்துக் கொள்ள வேண்டும். சாதாரண பொது மக்களுடன் அன்பை வைத்துக் கொள்ள வேண்டும்.இதை எவரும் மறந்துவிடக்கூடாது.