எழுத்தாளர் குகன் சங்கரப்பிள்ளை  'தாய்வீடு' பத்திரிகை - சஞ்சிகையில் அறிவியற் கட்டுரைகள்  எழுதி வருபவர். மார்ச் மாதத் தாய்வீடு இதழில் இவரது 'ஜாதி' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனும் தனது முகநூற் பக்கத்தில் குறிப்பிட்டுக் கருத்துகள் கூறியிருந்தார். குகன் சங்கரப்பிள்ளையின் 'ஜாதி' என்னும் இக்கட்டுரை முக்கியமான கட்டுரை.  தலைப்பு சிறிது ஒட்டாமலிருக்கின்றது. நாம் நடைமுறையில் , பேச்சு வழக்கில் சாதி என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்.  சாதி என்றே கட்டுரையின் தலைப்பினை வைத்திருக்கலாம்.

             - குகன் சங்கரப்பிள்ளை -

நண்பர் குகன் சங்கரப்பிள்ளையினை எண்பதுகளிலிருந்து நானறிவேன்.  எண்பதுகளின் ஆரம்பத்தில் மொன்ரியாலில் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்த இளைஞர்களில் ஒருவராக, சமூக அரசியற் செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவரிருந்தார். அப்போதிருந்து அறிவேன்.  அக்கையெழுத்துச் சஞ்சிகையில்தான் எனது 'மண்ணின் குரல்' நாவல் தொடராக முதலில் வெளியானது. அதில் வந்த மண்ணின் குரல் நாவல், கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு பின்னர் நூலுருப்பெற்றது.

எப்பொழுது மெல்லிய புன்முறுவல் பூக்கும்  முகத்துக்குச் சொந்தக்காரர். ஒருபோதும் அவர் முகத்தில் கடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாவங்களை நான் கண்டதேயில்லை.  இலத்திரனியற்துரையில் கல்வித்தகமை பெற்றவர். அத்துறையில் பணியாற்றி வருபவர்.

'ஜாதி' என்னும் தலைப்பிலான இக்கட்டுரை ஆய்வுக்கட்டுரை போன்றில்லாமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விபரிப்புகளை உள்ளடக்கிய கட்டுரையாக அமைந்திருப்பதால் , வாசிப்பவர்களை ஒரு கணம் அதிர வைக்கின்றது. சிந்திக்கவும் வைக்கின்றது. இவர் குறிப்பிட்டிருக்கும்    Caste: The Origins of Our Discontents  என்னு நூலை எழுதிய  Isabel Wilkerson முக்கியமான அமெரிக்க ஆபிரிக்க இனத்து ஊடகவியலாளர் , எழுத்தாளர் இவர். முதன் முதலில் புலியட்சர் பரிசினைப்பெற்ற அமெரிக்க - ஆபிரிக்கர் இவர். உலகத்து மானுடர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், கடவுளை நோக்கி வினவுதல் ஆகியவை இக்கட்டுரையின் ஏனைய சிறப்பம்சங்கள். கட்டுரையைக் கேட்பவர்களுக்குக் கொண்டு செல்வதில் ஆனந்தராணி பாலேந்திராவின் குரலும் சிறப்பாக உதவுகின்றது.

கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

"உயிரியல் ரீதி யாக இன்று இந்த பூமியில் வாழும் சகல மனிதர்களும் மிக ெநருங்கிய உறவினர்கள் . எமது உடலிலிருக்கும் கலங்களுள் உள்ள உபகலங்களில் (organelles) ஒன்று  mitochondria. இவற்றிலிருக்கும் மரபணுக்கைள ஆராய்ந்ததன் மூலம் இன்று வாழும் சகல மனிதர்களும் , அவர்கள் சீ னாவில் பிறந்தவர்களாயினும் சரி, இந்தியாவில் பிறந்தவர்களாயினும் சரி,ஆப்பிரிக்காவிலோ அல்லது அெமரிக்காவிலோ பிறந்தவர்களாயினும் சரி தெரியாது, அவர் உபேயாகித்த கல்லாயுதங்கேளா , பேசிய மொழியோ எமக்குத்  தெரியாது, ஆனால் என்றும் அழியாத மரபணுக்கைள அவர் எம்முடன் விட்டு சென்றுள்ளார் . அவரது நெருங் கிய உறவினர் வழியில் வந்தவர்கள் இன்று நவீன உலகிலிருக்கும் போட்சுவானா அல்லது நபீபியா நாட்டிலிருக்கும் பூர்வீகக் குடிகளான சான் பூர்வீகக் குடிகளாகும் . இந்த உண்மை அறிவியலில் 1990-ம் ஆண்டுகளிலேயே மரபணு ஆய்வுக ளின் மூலம் நிரூபிக்கப்பட்டது . தொடர்ந்து வந்த காலத்தில் படிமச் சான்றுகள் , புவியியற் சான்றுகள் , மொழிப் பரவல் சான்றுகள் எனப் பல்வைகப்பட்ட சான்றுகள் இந்த உண்மையினை உறுதிப்படுத்துகின்றன . இந்த அற்புதமான உண்மையினை  முதல் முதலாக Scientific America இதழில் வாசித்தேபாது  அடைந்த  ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.. நீங்கள் கறுப்பர்களாகேவா , சீ னர்களாகேவா , வெள்ளையர்களாகேவா, மார்பை உயர்த்தும் மேல் சாதியினேரா... யாராகஇருந்தாலும் சரி, எமக்கு நீங்கள் ஒரு தூரத்து உறவினர் . அவ்வளவுதான் ."

கட்டுரை பின்வருமாறு முடிகின்றது:

"மரேபா, மதேமா, அரேசா சக மனிதர்கைள மனிதர்களாக மதிக்காவிடின் அவற்றை உடைத்தெறிய  வேண்டியது சமூக முன்னேற்றத்துக்கு அவசியமானது. சாதி கடவுளினால் உருவாக்கப்பட்டிருந்தாலும்கூட அதைன அழிக்கேவண்டியதுமனிதரின் கடைம. அப்படிக் கடவுள் நேராக வந்து நான் உருவாக்கிய சாதிமுறையினை ஏன் அழித்தீர்கள் என்று கேட்டால் நாம் துணிவாக அவரிடம் சொல்லிவிடலாம் ‘சாமி நீங் கள்ெசய்தது தப்பு ’ என்று . அதனை அவர் கேட்காவிட்டால் அவர் கடவுள் இல்லை."

கட்டுரைக்கான காணொளி:  https://www.youtube.com/watch?v=w6Rrrx62OMI
கட்டுரையினை வாசிக்க: https://thaiveedu.com/pdf/24/Mar2024.pdf#page=128