சிநேகா பெல்சின் (Sneha Belcin) பால், சாதி, உளவியற் பிரச்சினைகள் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்த ஊடகவியலாளர்; சமூக, அரசியற் போராளி. டிஹிட்டல் ஊடகத் தயாரிப்பாளர்; திரைப்படத் தயாரிப்பாளர். இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து 'நீலம் புரடக்‌சன்ஸ்' நிறுவனத்தை உருவாக்கியவர். அதற்கான யு டியூப் சானல் மூலம் காணொளிகள் பலவற்றை வெளியிட்டவர்.

இளைய சமுதாயத்தின் முக்கிய குரலாக ஒலித்த இவர் , தனது 26ஆவது வயதில், 28.8.2023 அன்று தன் உயிரை மாய்த்துக்கொண்டது துரதிருஷ்ட்டமானது. உண்மையில் இவரது மறைவின் பின்னரே நான் இவரைப்பற்றி அறிந்து கொண்டேன்.

இவரைப்போன்றவர்கள் மானுட சமுதாயத்தில் அரிதானவர்கள். நீண்ட காலம் இயங்கி மானுட சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் இவ்விதம் தம் இருப்பைப் போக்கிக் கொள்வது துரதிருஷ்ட்டமானது. உளவியற் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தவரின் இழப்புக்கும் அதுவே காரணமாக இருந்து விட்டது.



இவர் நினைவாக இவரது ஆளுமையை எடுத்துக்காட்டுமோர் உதாரணமாக ஒரு காணொளி - https://www.youtube.com/watch?v=LduXqFhJtpI

இவரது முகநூற் பக்கம் - https://www.facebook.com/snehabelcin