கேள்வி: சென்றமுறை உங்களை கவர்ந்த உலக ஓவியர்களின் வரிசையில் பலரையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் முதலாவதாக இடம் பிடித்திருந்தவர் ஜோன் கொன்ஸ்டபில். அவரைப் பற்றி வாதிப்பதற்கு முன் இரண்டு கேள்விகள் உண்டு. முதலாவதாக, நீங்கள் குறிப்பிட்ட, ஓவியர்களின் பெரும்பாலான ஓவியங்கள் ரவிவர்மா காலத்து ஓவியங்களில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, வான்கோவின் ஓவியம் மிக மிக வித்தியாசப்பட்டு காணப்படுகின்றது. இவற்றை ரசிப்பதற்கு அல்லது இவற்றின் உள்ளார்ந்த மதிப்பை சரியாக போற்றுவதற்கு தனியான ஒரு கற்கை – அல்லது பயிற்சி, தேவையானது என்று கருதுகின்றீர்களா?

பதில்: இல்லை. ஆனால், சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல சிறந்த ஓவியங்களைப் பார்த்து, பார்த்து பரீட்சயம் அடைய அடைய அவற்றால் நீங்கள் பாதிக்கப்படுவது நிச்சயமானதாகின்றது. பொதுவில் சாதாரண புகைப்படங்கள் போன்றே, ஓவியங்களையும் காண பழக்கப்பட்டுவிட்ட நாங்கள் இவற்றை மேலும் ஆழமாக பார்க்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. மேலைத்தேய ஓவிய காட்சி கூடங்களில் எல்லாம் ஒவ்வொரு ஓவியத்திலிருந்தும் கிட்டத்தட்ட ஒரு முப்பது அடி தள்ளி இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்கள் இவ்இருக்கைகளில் அமர்ந்து குறித்த ஓவியங்களை ஓர் அரைமணி நேரம் செலவழித்து பார்க்கின்றார்கள். அவ்வோவியத்தின் மரங்கள், பூமி, புற்றரை, ஆறுகள், மலர்கள் இவை அனைத்துமே பார்வையாளர்களோடு பேசுகின்றன. ஏதேதோ கூறுகின்றன.

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. உதாரணமாக, பகல் வேளைகளில் ஒரு மலையை அல்லது ஒரு மரத்தை நீங்கள் காணுகின்றீர்கள். மலை தெளிவாக தெரிகின்றது. ஆனால் அதே மலையை அல்லது மரத்தை, மாலையின், இருட்டும் வேளையில் ஒரு கருக்கலில் காணுகின்றீர்கள். அதன் ஓரங்கள் தெளிவுற அமைவதில்லை. இருந்தும், ஒரு கவிதையை போன்ற ஒரு உணர்வு அங்கே தோற்றம் கொடுக்க முற்படுகின்றது. அதனை பார்க்கும் பார்வையாளனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் ஊற்றெடுக்கின்றன. அக்கருக்கல் கூறும் கவிதை என்ன? இதைத்தான் வான்கோ போன்ற ஓவியர்கள் தத்தமது ஓவியங்களில் முன்னிறுத்த முனைந்தனர். தனது ஓவியங்களை அவர்கள் பேச வைத்தார்கள். பாட வைத்தார்கள் - கவிதைகளாய் உருவாக்க முயற்சித்தனர். அதில் வெற்றியும் பெற்றனர்.

கடந்த முறை நான் குறிப்பிட்ட அக்ரோசோவாவின் படத்தில் ((Dreams)இல் அவர் ஒருபடி மேலேயே சென்றுவிட்டார். வான்கோவின் படங்கள், அக்ரோசோவாவின் திரைப்பட காட்சிகளில் இயங்கத்தொடங்குகின்றன. சில படங்களில் அக்ரோசோவா குறித்த படத்தினுள் (ஓவியத்தினுள்) குதித்து, இறங்கி, நடந்து, வான்கோவை தேடி அலைந்து பின் இறுதியில் ஆச்சரியப்பட்டு அதிசயப்படுவது போலவும் அவரது காட்சி பிடிப்புகள் கூற முற்படுகின்றன.

எனவே, ஒரு ஓவியத்தினை இரசிப்பது எப்படி என்று வரும்பொழுது நாம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியாகியுள்ளது. சுருக்கமாய் சொன்னால் தேர்ந்த இரசனை என்பது பயிற்சியை நிராகரிப்பதில்லை என்றே கூறவேண்டும். இருந்தும் சில ஓவியர்கள் தமது ஓவிய திறனால் கல்லை போன்ற ஒரு மனதையும் ஊடுருவி செல்ல முயற்சித்தனர். இது ஓவியத்துக்கு மாத்திரம் அல்ல. இசைக்கும் பொருந்தும். கவிதைக்கும் பொருந்தும். பாரதிக்கும் பொருந்தும்.

-    ஜோசப் மல்லொர்ட் வில்லியம் டேர்னர்
(Joseph Mallord William Turner (23 .04.1775 – 19.12. 1851)) -

- டேர்னரின் Folkestone ஓவியம் -

கேள்வி : அதாவது  ஜோசப் மல்லொர்ட் வில்லியம் டேர்னர் (Joseph Mallord William Turner (23 April 1775 – 19 December 1851)) ஓவியங்கள் குறித்து மாக்ஸிம் கார்க்கி ஒரு தருணத்தில் கூறியது போல 'டேர்ன'ருக்குப் பிறகு, ஆங்கிலேய வானங்கள் மேலும் அழகுமிக்கதாய் மாறியது என்று கருதமுடியுமா?

பதில் : உண்மை. மனிதனின் இயற்கை பொருத்த ரசனை, ஓவியங்களால் அதிகரிக்கப்படலாம். ஓவியங்களால் மாத்திரம் அல்ல. இசையால், கவிதையால், இலக்கியத்தால். ஆனால், இவற்றால் அதிகரிக்கப்படுவது, இயற்கை பொருத்த ரசனை மாத்திரமல்ல. மாறாக, மனித துயர் பொருத்த அனுதாபங்களும் கூட அதிகரிக்கப்படலாம். கூடவே, மனிதனுக்கான நீதி பொறுத்த பிரக்ஞையும் கூட அதிகரிக்கப்படலாம். இவை ஓவியங்கள் ஆற்றக்கூடிய சிறப்பு செயற்பாடுகள் என குறிக்கலாம்.

கேள்வி: அண்மையில் எனது நண்பரொருவர் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். அதன் பின்புற அட்டையில் அவரது புகைப்படம் இருந்தது. நூலின் முன் அட்டையில் நூலாசிரியர் அகதியாக வாழ்ந்த காலத்தில் அவரை வைத்து வரையப்பட்ட பென்சில் ஓவியம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இரண்டுக்கும் அநேக வித்தியாசங்கள். இரண்டுக்கும் இடையிலான, பலவருடங்களின் இடைவெளி, ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் பென்சில் வரைபட ஓவியர் நூலாசிரியரின் உருவத்தை பெருமளவில் நிராகரித்து, நூலாசிரியரின் ஆன்மாவை தனது ஓவியமாக தீட்ட முயன்றுள்ளாரோ என்ற சந்தேகம் எனக்குள் எழவே செய்கின்றது. அப்படியென்றால், கேள்வி, ஓவியங்களில் சில உடல் அம்சங்களை தவிர்த்து உள்நுழைந்து, மனிதர்களின் ஆன்மாவை சித்தரிக்க முற்படும் சங்கதிகளும் உண்டோ என்ற கேள்வி உண்டு. இது குறித்து யாது கூறுவீர்கள்?

பதில் : இந்நூலின் இருபடங்களையும் நானும் அவதானித்தேன். முன் அட்டையில் தோன்றுபவரின் கண்களில் இரக்கம் உண்டு. ஆழ்ந்த சிந்தனை உண்டு. வருத்தம் உண்டு. இவை அனைத்தும் மனுகுலத்துக்கானது என்ற அக்கறையும் உண்டு. ஆனால் இவை பின் அட்டையில் காணக்கிட்டாத ஒன்று. ஒரு புகைப்படத்தால் இவற்றை வெளிக்கொணர முடியுமா என்பது சந்தேகமே. முடியாது என்பதல்ல. ஆனால் ஓவியனுக்கு இவற்றை வெளிக்கொணர்வது ஒப்பீட்டளவில் சற்றே சிரமம் குறைந்த கருமமாகவே இருக்கும். ஒரு உதாரணம். எனது நண்பர் சிவப்பிரகாசம், மாலை வேளையில், கொழுந்தெடுக்கும் ஒரு பெண்மணி, தனது அந்நாளைய பணியை முடித்துவிட்டு, வீடு திரும்புகையில், குழந்தை பராமரிப்பு நிலையத்தில், தன் குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு திரும்பும், ஒரு இளம் தாயின் முக்காடு அணிந்த பின்புற தோற்றத்தை, அவளது கூடையுடனும் மட்டக் கம்புடனும் சோகம் நிறைந்த ஒரு வானமும் மேகங்களும் சூழ்ந்து, பின்னணியாய் இருக்க, வரைந்திருந்தார். இங்கே அவளது முகமும் தெரியவில்லை. அவளது கண்களும் தெரியவில்லை. இருந்தும் அவ்வோவியம் முன்னிறுத்திய வாழ்க்கை ஆயிரம் கேள்விகளை பார்ப்பவரிடையே கேட்பதாக அமைந்து இருந்தது. அதாவது ஓவியங்கள் ஒரு கருக்கலில் தோன்றும் மரத்தை போல ஆயிரம் விடயங்களை பார்ப்பவருடன் பேச வல்லவைதாம்.

- ஓவியர் வின்சன்ட்  வில்லியம் வான்கோ
(Vincent Willem van Gogh 30 March 1853 – 29 July 1890) -

- ஓவியர் வான்கோவின் 'நட்சத்திர இரவு (Starry Night)' ஓவியம் -

கேள்வி : நல்லது. இப்போது வான்கோ பற்றி… வான்கோ Starry Night என்ற தன் பிரபல்யமான ஓவியத்தை பல விதமாக வரைந்திருந்தார். இப்படி, ஒன்றையே பல விதமாக வரைவது பொதுவில் ஏற்கத்தக்கதுதானா?

பதில் : ஒவியர்கள் தமது ஓவியங்களை பல்வேறு விதமாக வரைந்து காட்சிப்படுத்துவது பொதுவில் காணக்கூடிய ஒன்றுதான். ஒவ்வொரு ஓவியரும், சில வேளைகளில் பத்து பதினைந்து பிரதிகளை உருவாக்கியிருப்பார்கள். வண்ணங்களும் தீட்டும் வகைப்பாடுகளும் கூட வித்தியாசமுற்று இருக்கலாம். இவற்றில் சிறப்பானதை காலம் தேர்ந்து கொள்கிறது. மற்றவற்றை பின்னுக்கு தள்ளிவிடும்.

-  ஜோன் கொன்ஸ்டபில்
( John Constable (11 June 1776 - 31 March 1837) -

- ஜோன் கொன்ஸ்டபிலின் Wivenhoe Park, Essex ஓவியம் -

கேள்வி : ஜோன் கொன்ஸ்டபிலால் நீங்கள் கவரப்படுவதற்குரிய காரணங்கள் யாவை என்பதனை கூற முடியுமா?

பதில் : ஜோன் கொன்ஸ்டபிலை எனக்கு முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்தது எனது தந்தையாரே. ஜோன் கொன்ஸ்டபிள் பொறுத்த பல்வேறு கதைகளையும் அவர் எனக்கு கூறியுள்ளார். இது நடந்தது எனது மாணவப் பருவத்திலாகும். ஜோன் கொன்ஸ்டபிளின் ஓவியங்கள் ஒர் பிரகாசத்தினை மனதினுள் உண்டு பண்ண கூடியவை. அவர் வரைந்த மரங்களையும், ஓடைகளையும், புல்வெளிகளையும், இளஞ்சூரியனையும் இன்னமும் என்னால் மறக்க முடியாது. அவரை போல இயற்கையை ஆராதித்தவர்கள் இருப்பார்களா என்பது கூட, என்னில் ஓடும், சந்தேகமே. அவரைப்பற்றி கூறும்போது விமர்சகர்கள் “அவர் தனது ஒளியை தேடினார் - தனது பனித்துளியை தேடினார் -அவர் தனது மென்காற்றை தேடினார் - தனது மலர்களை தேடினார்” என்று கூறுவார்கள்.  ( He Sought his light, his dew, his breeze, his blooms) . இது நல்லது. ஆனால் வான்கோ வித்தியாசப்பட்டு தனது ஓவியங்களுக்கூடாக மனிதனின் வியர்வையை, மனிதனது துயரை, மனிதனது கண்ணீரை - ஏன், அதற்குறிய காரணத்தை கூட விசாரிக்க முயற்சித்தார், என்றே கூறுதல் வேண்டும். இப்படியாகத்தான் ஜோன் கொன்ஸ்டபிளும் வான்கோவும் ஆளுக்காள் வித்தியாசப்பட்டார்கள். ஆனால் இவ்விருவருமே என்னுள் செல்வாக்கு செலுத்தினார்கள். எனக்கு உதவி புரிந்தார்கள். ஆனால் அவர்களின் படைப்புகளின் எத்தனை விகிதாசாரத்தை எனது படைப்புகள் உள்ளடக்குவதில் வெற்றிக்கண்டன, என்று கேட்பீர்களானால் அதற்குறிய பதில் ஒரு சிறு அளவிலானது என்பதுவாகவே இருக்கும்.

கேள்வி: அதாவது, ஜோன் கொன்ஸ்டபில் தனக்கான சூரிய ஒளியை, மென் காற்றை தேடினார் என்றால் அவர், தான் உண்மையாய் கண்ட சூரிய ஒளியை சற்றே பரிமளித்து தன் ஓவியத்தில் தந்தார் எனலாமா?

பதில்: ஓவியனுக்கு அந்த உரிமை உண்டு – ஒரு கவிஞனைப் போலவே.

- ஓவியர் வான்கோவின் Potato Eaters  ஓவியம் -

கேள்வி: அப்படி என்றால், வான்கோவின் Potato Eaters உம் சற்று அதிகமாக பரிமளிக்கப்பட்டது தானா?

பதில்: ஓரளவில். அதாவது, அவர்களது சோகத்தை நிராசையாக மாற்றாமல், லோசாக இசைத்து, அதற்கூடு அவ்வாழ்வு முன்வைக்கும் கேள்விகளை – கோரும் நீதி – நியாயப்பாடுகளை, பார்வையாளன் முன் குத்தி காட்டுகின்றது. இங்கே, பரிமளிப்பது என்ற சொல்லை விட யதார்த்தப்படுத்துவது என்ற சொல், தேவைப்பட்டதாகின்றது. அவர்களின் சோகத்தை பரிமளிப்பது என்றால், அது சில வேளைகளில் நிராசையில் முடிவடையக் கூடும். துயரினை கூறுதல் ஆக்கபூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு இட்டுச் செல்வதாக இருக்க வேண்டும். அவல ஒலியை எழுப்புவதாக இருக்க கூடாது என விமர்சகர்கள் கூறுவார்கள்.

அனுப்பியவர்: ஜோதிகுமார் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here