கவிஞர் திருமாவளவனுடன் ஓர் உரையாடல்! - ஆதவன் கதிரேசர்பிள்ளை -
- எழுத்தாளர் ஆதவன் கதிரேசர்பிள்ளை கவிஞர் திருமாவளவனுடன் முகநூல் மெசஞ்சரில் நடத்திய உரையாடல்களின் தொகுப்பொன்றை இமேஜ் வடிவில் அனுப்பியிருந்தார். துண்டு துண்டுகளாக, தாறுமாறாக, குழம்பிக் கிடந்த துண்டுகளிலிருந்து ஓரளவுக்கு விளங்கும் வகையில் பொருத்தியுள்ளேன். பிழை , திருத்தம் எவற்றையும் செய்யவில்லை. அப்படியே வெளியாகின்றது. இதனை வாசித்து , ஒழுங்காக்கும் பொறுப்பு ஆதவனுடையது. எதிர்காலத்தில் இமேஜ் வடிவில் அனுப்பாமல் எழுத்து வடிவில் அனுப்புங்கள். அலைபேசியிலுள்ள மெசஞ்சர் செய்திகளை அப்படியே மின்னஞ்சலுக்கு அனுப்பலாம. அதன் மூலம் தட்டச்சு செய்யும் பணியில் நேரம் மிஞ்சும். கவனத்தில் ஆதவன் எடுப்பாராக. - வ.ந.கி , பதிவுகள்.காம் -
திருமாவளவன் - வணக்கம் ஆதவன்
ஆதவன் - எம் எப்படியுள்ளீர்கள்? கலைச்செல்வன் தான் போய்த் தொலைந்தான். என் அழகிய தோழன்.
திருமாவளவன் - நான் ஒரு தடவை அவனூடாக
ஆதவன் -
லாச்சப்பல் முன்றலில் நினைவிருக்கு
திருமாவளவன் - ஓம்.. எப்படியிருக்கிறீர்கள்?
ஆதவன் -
நிறையப் பயணம்
செய்கிறேன். நிறைய வாசிக்கிறேன்.
திருமாவளவன் - எனது தொகுப்புகள் பார்த்திருக்கிறீர்களா?
ஆதவன் -
இங்கே இருக்கிறது பழையவை. புதியவை படித்திலேன். அனுப்புக.